Ad Widget

123 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்க தமிழக அரசு தீர்மானம்

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரும் தனித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை (29) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நிலவும் தேசிய நெருக்கடி குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். நெருக்கடி காரணமாக...

மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை!!

எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அரச பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.
Ad Widget

புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவை : ஜனாதிபதி இணங்கியதாக மைத்திரி கூறுகிறார்

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்,11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்று (29) நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையே வெற்றியளித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இதேவேளை, புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள்...

அலரிமாளிகைக்கு முன் பதற்றம்!!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலாமான அலரிமாளிகைக்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக அலரிமாளிகைக்கு முன்பாக மக்கள் எழுச்சிப் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், அலரிமாளிகைக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் பஸ் மற்றும் பொலிஸ் ட்ரக் வண்டிகளை அகற்றுவதற்காக...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாய்,முகம், தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முதன் முதலாக வாய், மூக்கு, தாடை சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அதிகாரி சுகந்தன் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று மேற்படி சிகிச்சைகளை பெற்று வந்த பொது மக்கள் இனிவரும் காலங்களில் குறித்த சிகிச்சைகளை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியும்...

பிரதமருக்கு ஆதரவாக 117 எம்.பிக்கள்? – சர்வகட்சிகளுடனான சந்திப்பை ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 10 கட்சிகள் அடங்கிய குழு மற்றும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேச்சையாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள...

எரிவாயு விநியோகத்தை மட்டுப்படுத்தியது லிட்ரோ; நகரங்களில் உள்ளோருக்கு முன்னுரிமை

ஒவ்வொரு நாளும் சந்தைக்கு வெளியிடும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளாந்தம் சந்தைக்கு வெளியிடப்படும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுமார்...

யாழ். நகரில் நூதனமான முறையில் இளைஞர்களிடம் அலைபேசிகள், பணம் பறித்த இருவர் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் அலைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் இளைஞர் ஒருவரிடம் 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அலைபேசியை அபகரித்துச் சென்ற நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வழிப்பறிக்...

பாரிய பொருளாதார நெருக்கடியை அடுத்த மாதம் எதிர்கொள்ள நேரிடும் – ரணில் எச்சரிக்கை

பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தும் அனைத்து காரணிகளும் ஒரு மையப்புள்ளியை அண்மித்துள்ளன. நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலடைந்துள்ள ஒரு நூல் பந்துப்போல் காணப்படுகிறதால் அதனை பொறுமையாக அவிழ்க்கவும் முடியாது,விரைவாக வெட்டி விடவும் முடியாது. எதிர்வரும் மாதம் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொள்ள நேரிடும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமை தொடர்பில் சமூக...

வவுனியாவில் சீன மொழியை தாங்கியவாறு போராட்டம்!!

வவுனியாவில் இன்று (28) மேற்கொள்ளப்பட்ட ஒன்றிணைந்த கூட்டுத் தொழிற்சங்க போராட்டத்தின்போது சீன மொழியில் காட்சிப்படுத்தப்பட்ட பதாதையை தாங்கியவாறு போராட்டப் பேரணியில் கலந்து கொண்டதை அவதானிக்க முடிந்தது. தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி பதாதைகளை தாங்கியவாறு போராட்டம் மேற்கொண்ட மக்கள் சீன மொழியையும் தாங்கி பதாதைகளுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததனை அவதானிக்க முடிந்தது. இன்று நாடாளாவிய ரீதியாக...

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்று வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன யாழ் பல்கலைகழக...

யாழ்.குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று புதன்கிழமை குருநகர் பகுதியில் இருந்து படகொன்றின் மூலம் சென்று, இன்று அதிகாலை தனுஷ்கோடிக்கு அருகில் கரையிறங்கிய வேளை தமிழக...

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்க இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள குறித்த நீதிமன்ற உத்தரவு இன்று (வியாழக்கிழமை) இரா.சாணக்கியனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனக்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார், “களவாஞ்சி பொலிஸாரினால் எனக்கு...

யாழில் தொழிற்சங்க பணி புறக்கணிப்பால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிப்பு!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு உள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி இன்றைய தினம் (வியாழக்கிழமை) நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்...

சுமந்திரனால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐ.தே.க ஆதரவு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தற்போது தயாரித்து வருகின்றார். குறித்த பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளிக்கும் என்றும் அக்கட்சி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ஜனாதிபதியின் மீது நாடாளுமன்றுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்ட வேண்டியது அவசியம் என ஐக்கிய...

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி!!

இன்று (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, A,B,C,D,,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மேலும், மாலை...

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சிளின் இடைக்கால அரசு ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி

சமூக மற்றும் அரசியல்,பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளையும் உள்ளிடக்கிய வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முழுமையாக இணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றில் சுயாதீனமாக...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி...

தனது பிறந்தநாளில் விபத்தில் உயிரிழந்துள்ள மாவிட்டபுர இளைஞன்!!

தனது பிறந்தநாளில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் நேற்று திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. அதில் பயணிந்த யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் நிக்சன் (வயது 22) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த...

யாழில் தந்தை செல்வாவின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45 ஆவது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஓய்வு நிலை ஆயரும் தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவருமான கலாநிதி சு.ஜெபநேசனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தந்தை செல்வாவின்...
Loading posts...

All posts loaded

No more posts