Ad Widget

புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவை : ஜனாதிபதி இணங்கியதாக மைத்திரி கூறுகிறார்

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்,11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்று (29) நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையே வெற்றியளித்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதேவேளை, புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதன்போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts