Ad Widget

அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

எதிர்வரும் 2 வாரங்களில் நாடு முழுவதும் அரச துறையில் மட்டுமன்றி தனியார் துறையிலும் அத்தியாவசிய ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அரச ஒளடதவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார். கடன் சான்றுப் பத்திர விடுவிப்பு, திறைசேரியால் நிறுத்தப்பட்டுள்ளது....

பயணிகள் பஸ்ஸை செலுத்தி வந்த சாரதி மீது கத்தி வெட்டு!!

பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் சாரதி, கோப்பாய் பகுதியில் வைத்து கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார். கத்தி வெட்டுக்கு இலக்கான பருத்தித்துறை, 4ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த வேலு ஜஸ்டின் ராஜ் என்பவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த...
Ad Widget

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத் துறையில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது. சுதேஸ்வரன் சுதர்சன் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்தார். கொன்கிறீட் கல் அரியும் இயந்திரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அதில் ஏற்பட்ட மின் ஒழுக்கு இளைஞனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா...

தந்தையின் போதையால் தான் நிம்மதி இழந்துள்ளதாக மாணவியொருவர் அச்சுவேலி பொலிஸில் தஞ்சம்!

வீட்டில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த மாணவியை, பொலிஸார் கோப்பாய் பிரதேச செயலக நன்னடத்தை பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “மதுபோதையில் வரும் தந்தை, தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து குறித்த மனைவி...

தொடர் போராட்டத்தின் 5 ஆம் ஆண்டு நிறைவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் !

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் (08) மகளிர் தினத்தை துக்க தினமாக கடைபிடித்து முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. முல்லைத்தீவு புனித இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பமான இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்...

கால்பந்து வீரர் பியூஸ்லஸின் உடல் அடக்கம்!! மன்னாரில் கடைகள் அடைக்கப்பட்டு துக்கநாளக அனுஷ்டிப்பு!!

இலங்கை கால்பந்து அணி வீரர் டக்சன் பியூஸ்லஸின் உடல் நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொது சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கால்பந்தாட்ட அணியில் விளையாடும், டக்சன் பியூஸ்லஸ், மாலைதீவில் கழகமொன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் விளையாடி வந்தநிலையில் கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். மன்னார் பனங்கட்டுகொட்டு கிராமத்தைச் சேர்ந்த பியூஸ்லஸ், பருத்தித்துறையை வசிப்பிடமாகக் கொண்டவர்....

அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 230/= ஆக வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி 230 ரூபாவாக குறைத்துள்ளது. வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பக்கத்தில் அண்மைக்கால அபிவிருத்திகளினையும் பரிசீலனையிற்கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு அனைத்தையுமுள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்றினை 2022 மார்ச்சு 04 இல் அறிவித்திருந்தது. தோற்றம்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல்...

இந்திய துணைத்தூதர் யாழ். மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு!!

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரை யாழ் மாவட்ட மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா,...

ஜனாதிபதி,பிரதமர் தலைமையில் பாரிய சீமேந்துத் தொழிற்சாலை இன்று திறப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்பட்ட அதிநவீன வசதிகளைக் கொண்ட பாரிய சீமெந்துத் தொழிற்சாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோர் தலைமையில் இன்று (07) திறக்கப்படவுள்ளது. மாகம்புர லங்வா தொழிற்சாலையானது 63 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த வலயத்தின் மிகப்பெரிய சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையாகும். முதற்கட்டமாக வருடாந்தம் இரண்டு தசம் எட்டு...

யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தினர்., யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி!, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்!, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு,...

இரு வருடங்களுக்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளிவிட்டனர் – சுமந்திரன் அதிருப்தி

நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் எனது தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள், குறுகிய காலத்திற்குள் நாட்டை ஆதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. எனவே, இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். ஹட்டனில் நேற்று நடைபெற்ற பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக,...

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டில் மீண்டும் தாக்குதல் – கிளியை வெட்டி வீசிய கொடூரம்

வலி. தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிக்கோவின் வீட்டில் நேற்று மாலையும் தாக்குதல் சம்பவம் நடாத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசாங்கத்துடன் தொடர்புடைய காட்சியின் பெயரைச் சொல்லி ஜிப்ரிக்கோவின் வீட்டின் மேல் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் ஜிப்ரிக்கோ உட்பட அவரது குடும்பத்தினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இளவாலை பொலிஸ்...

நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை, பொய்யான செய்திகள் பரவுகின்றன – பிரதமர் மஹிந்த

எரிபொருள் நெருக்கடி என்ற தவறான கருத்து காரணமாகவே மக்கள் அச்சத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எரிபொருள் இருப்பு நான்கு நாட்களுக்கு மட்டுமே இருக்கின்றது என தவறான செய்திகள் பரவுவதாக தெரிவித்த அவர், நாட்டில் எவ்வித எரிபொருள் நெருக்கடியும் இல்லை என கூறினார். அரசியலில் குறைந்த அனுபவம் கொண்டவர்களினால் வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் மக்கள்...

அதிகாரப் பகிர்வு குறித்து இந்தியா விடுத்த அழைப்பை வரவேற்கின்றோம் – கூட்டமைப்பு

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கான உறுதிமொழிக்கு அமைய, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் இந்தியாவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்பிற்கு அமைவாக மாகாண சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என ஜெனீவாவில் இந்தியா கூறியிருந்தது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...

ஐ.நா. அறிக்கை காலத்திற்கு காலம் வரும் அறிக்கையே – டக்ளஸ்

காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) வவுனியாவில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்...

யாழ்ப்பாணத்தில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு!!

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் தொடருந்தில் பாய்ந்து ஒருவர் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்தில் பாய்ந்த அவர் உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு தொடருந்துப் பாதையில் பாய்ந்தார் என அங்கு...

மேலும் சில அமைச்சுகளில் மாற்றம்!

அமைச்சுகளில் மேலும் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கமைய, வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய விமலவீர திஸாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அத்துடன் வனவிலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சராக சி.பி.ரத்நாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அருந்திக்க பெர்னாண்டோ மீண்டும் இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்டுள்ளார். தென்னை, கித்துள்,...

மின் தடை நேரத்தில் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் வீட்டில் தாக்குதல்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்றுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

இரத்தக் கரையுடன் வீதியோரத்தில் இருந்து சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் ஒன்று இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொன்னாலை பருத்தித்துறை வீதியில் பொன்னாலைக்கும் திருவடிநிலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இனங்காணமுடியாத நிலையில் நபர் ஒருவரின் சடலம் காயங்களுடன் காணப்படுகின்றது. இவ்வாறு காணப்படும் உடலம் அருகே ஓர் மோட்டார் சைக்கிளும் காணப்படுவதனால் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மரணம் விபத்தா அல்லது...

கொவிட் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்படும்; சுற்றுநிருபம் வெளியீடு

கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 05 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இது தொடர்பான திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகளாவன, கொவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் சீலிடப்பட்டு, சவப் பெட்டியில்...
Loading posts...

All posts loaded

No more posts