Ad Widget

காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தி உள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே – 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்நிலையில் மாப்பிள்ளை...

நாட்டிற்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவில் மாற்றம்!!

உள்வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திருத்தியுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தற்போதுள்ள உத்தரவுகள் திருத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபுல் தர்மதாசா தெரிவித்தார். அதன்படி கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு, 14 நாட்களுக்குப் பிறகு நாட்டிற்கு வருபவர்கள், விமான நிலையத்தை வந்தடைந்ததும் மேற்கொள்ளப்படும்...
Ad Widget

மண்டைதீவில் மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்டைதீவு பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு பின்பக்கமாக உள்ள காணியில் நேற்று (புதன்கிழமை) காலை, விறகு எடுப்பதற்காகச் சென்ற கிராமவாசிகள் குறித்த கைக்குண்டுகளைக் கண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,...

வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தினாரல் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின், இல்லத்திற்கு முன்பாக இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனுக்கான நீதி வேண்டி இன்றைய தினம் அவரது பெற்றோர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மட்டக்களப்பு காந்திப்...

பரிசோதனை வெற்றி – கொரோனாவுக்கு சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸூக்கு எதிராக பல தடுப்பூசிகள் வெற்றிகரமாக கண்டறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த தொற்றுக்கான சிகிச்சை முறை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர். குறிப்பாக தொற்றுக்கு எதிராக புரோட்டீஸ் என்சைம் தடுப்பான் (ஜிசி376) மூலம் சிகிச்சை அளித்தால் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாக அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....

இலங்கை – சீனா இராஜதந்திர உறவுகளின் 65 ஆண்டுகள் பூர்த்தி நினைவு நாணயம் வெளியீடு!!

இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு,மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட புதிய 1,000 ரூபாய்கள் நாணயத்தினை,இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ. டி. லக்ஷ்மன் அவர்கள், நேற்று பிற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் வழங்கி வைத்தார். இந்த...

வயதுக் கட்டுப்பாடின்றி சகல ஆசிரியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் திங்களன்று ஆரம்பம்!

நாட்டில் முன்னுரிமை தொழில் படையாக பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி வழங்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் நாடுமுழுவதும் பாடசாலை ஆசிரியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் வயதுக் கட்டுப்பாடின்றி அனைத்து...

வடக்கில் 3 மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு நேரடியாகக் கிடைக்கப் பெற்ற தடுப்பூசி டோஸ்களே மக்களுக்கு வழங்கப்படுகின்றன

வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் அவர்களுக்கு நேரடியாக கிடைக்கப்பெற்ற கோவிட்-19 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வட மாகாணத்தில் கோவிட்-19 தொற்றுக்கான தடுப்பு மருந்தேற்றல் திட்டம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக, நான் குறிப்பிட்டதாக...

இருமாதகாலத்தின் பின்னர் டெல்டா வைரசின் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

உலகின் அநேகமான நாடுகளில் கொவிட் - 19 வைரஸின் புதிய திரிபுகள் பரவ ஆரம்பித்து 2 - 3 மாதகாலத்தின் பின்னரே அதன் மோசமான தாக்கங்கள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன. எனவே தற்போது எமது நாட்டிலும் டெல்டா வைரஸ் திரிபுகள் இனங்காணப்பட்டுவரும் நிலையில், இருமாதகாலத்தின் பின்னர் இதன் தாக்கங்கள் வெளிப்படத்தொடங்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், (34 வயது) மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவர் உயிரிழந்தார். மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மெய்பாதுகாவலர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காகவே அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவை மேற்கோளிட்டு சிங்கள ஊடகம் ஒன்று சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பம்!

கொவிட் தடுப்பூசி அடுத்த வாரம் தொடக்கம் அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கான தடுப்பூசி போடும் பணி அடுத்த வாரம் ஆரம்பமாகும் எனவும் பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் முன் அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் ஒவ்வோர் ஆசிரியருக்கும் தடுப்பூசி...

மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் கைக்கலப்பு!! நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயம்!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மணல் கொள்ளையர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பில் நான்கு பொலிஸ் விசேட அதிரடி படையினர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மணல் கொள்ளையர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2...

செப்டம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முடியும் – ஜனாதிபதி

நாட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முழுமையாக திறக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன என்றும் மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு...

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இந்த பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என...

வவுனியாவில் மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று (திங்கட்கிழமை) இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று...

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார். விசாரணைக்கு...

அனுமதி கிடைத்தால் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி

அடுத்த சில வாரங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்ததாவது; கோவிட்-19...

சாரதிகளுக்கு 22 புள்ளிகள் வழங்கப்படும் – குற்றங்களினால் பூஜ்ஜிய புள்ளிக்கு வந்தால் சாரதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார். வாகன சாரதிகள்...

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பவதனால் தங்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறியளவில் முதலீடுகளை மேற்கொண்டு கடற்றொழிலையே தமது முழுமையான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும்...
Loading posts...

All posts loaded

No more posts