Ad Widget

அகழ்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுழற்சி முறை போராட்டம்!!

கிளிநொச்சி உருத்திரீஸ்வரர் ஆலய வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த சுழற்சி முறையினால் போராட்டம் இன்று (திங்கட்கிழமை)ஆ ரம்பமானது. குறித்த ஆலய வளாகத்தில் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதல் குறித்த வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், முன்னாள் வடக்கு...

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு இன்று நியமனம் – பெயர் பட்டியல் வெளியானது!

10 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி அவர்கள் அனைவரும் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். நல்லாட்சி அரசாங்கத்தினால் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட 14 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 10 ஆயிரம் பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து,...
Ad Widget

உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் அதிகூடிய அதிகாரப் பரவலாக்கல் அமையவேண்டும் – கூட்டமைப்பு

ஓர் ஐக்கிய, பிரிபடாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு என்ற வரையறைக்குள் தீர்வொன்றை காண்பதற்கு நாம் விரும்புகின்றோம். எனினும், அது இயன்றவரை அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்திற்கு இட்டுச் செல்லும் உள்ளக சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையிலானதாக அமைந்திருக்க வேணடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்கான வல்லுநர் குழுவுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே கட்டமைப்பின் தலைவர்...

யாழ்.போதனா அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண்ணுக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுமாலை அந்த நோயாளியிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவருக்கு மருத்துவ சேவை வழங்கிய தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுதுமலையைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவருக்கே...

மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் – அஜித்ரோஹண

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொருட்கொள்வனவில் ஈடுபடுவர்கள் , கொவிட்- 19 வைரஸ் பரவல் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார். இக்காலப்பகுதிகளில் பின்பற்றபட வேண்டிய விதிமுறைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் , சுற்று நிரூபமொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது...

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- நல்லூரில் ஏழு பேர்!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் யாழ்ப்பாணத்தில் 11 பேருக்கும் மன்னாரில் மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நல்லூர் சுகாதார மருத்துவ...

ஜனாதிபதியின் அண்மைய கருத்து ஊடகங்களைப் பயப்படுத்துவதற்கே- சுமந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்கள் தொடர்பாகத் தெரிவித்திருந்த கருத்து ஊடகங்களைப் பயப்படுத்தும் நோக்கமாகவே உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யாழில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவிக்கையில், “ஒருசில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் ஊடகத்துறைப் பற்றி ஒரு பாரிய எச்சரிக்கையை ஜனாதிபதி விடுத்துள்ளார்....

சட்ட மா அதிபர் யாழ்ப்பாணம் நீதிமன்றுக்கு வருகை!!

சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேரா யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவரை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வரவேற்றார். வடக்கு மாகாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள சட்ட மா அதிபர் இன்று காலை மன்னாருக்கு வருகை தந்தார். அங்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அரச சட்டவாதிக்கான...

அமைச்சர் டக்ளஸுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை!- உறவுகள் தெரிவிப்பு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு நாம் தயாரில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்உறவுகள் சங்கத்தின் தலைவி ஜே.கனகரஞசினி...

கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக தொழில்களை இழந்தோர்கள் கவனத்திற்கு!!

கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் தொழில்களை இழந்தோர்கள் குறித்த தரவுகளை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை தொழில் அமைச்சு முன்னெடுத்துள்ளது. கொவிட் 19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காலப்பகுதியில் சுயதொழில்களை மேற்கொள்ள முடியாது போனமை, தொழில் தருநர்களால் தொழில்களை இழந்தமை அல்லது கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில் வேறு சிரமங்கள் காரணமாக சுய தொழில்களை இழந்த தனியார் பிரிவுகளில்...

அனுமதி வழங்கப்படாத சீன தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!!

கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில், தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா என அரச மருத்துவ ஆய்வுகூட அதிகாரிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது, அந்த சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்தக் கேள்வியை முன்வைத்தார். “ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை இன்று வர்த்தக...

வரம்பற்ற இணைய இணைப்பு வசதி ஏப்ரலில் கிடைக்கும்!!

வரம்பற்ற இணைய இணைப்புத் திட்டங்களை (Unlimited Internet Package) ஏப்ரல் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் திகதிக்குள் வரம்பற்ற இணைய இணைப்புத் திடங்களை முன்வைக்க அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணித்திருந்தது. அதற்கமைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சமர்ப்பித்த திட்டங்களை மதிப்பீடு செய்யப்பட்டு...

யாழ்.பல்கலை. மாணவன், மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட 13 பேருக்கு கோரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் உள்பட யாழ்ப்பாணத்தில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 248 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது!!

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த...

வட மாகாண அரச காணிகளை வட பகுதி மக்களுக்கே பகிந்தளிக்க உத்தரவு!

வடபகுதியில் உள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே யாழ் மாவட்ட செயலகத்திலிருந்து அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட வடக்கு மாகாண காணி திணைக்களத்தின் கோப்புக்களை நாளைய தினத்துக்குள் மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பணித்துள்ளார். யாழ் மாவட்ட செயலாகத்தில் நடைபெற்ற...

ஆயுர்வேத சிகரெட் அறிமுகம்!!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 100 சதவீத கறுவாப்பட்டையை கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆயுர்வேத சிகரெட்டை அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த ஆயுர்வேத புகைத்தல் (கறுவாப்பட்டை சிகரெட்) உள்ளூர் உற்பத்தித் துறையில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது...

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய உறவுகளை சந்திப்பதாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவறு கூறினார். உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய...

யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு வடக்கில் கொரோனா!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்விகற்கும் கிளிநொச்சி, புத்தளம் மற்றும் மாத்தறையைச் சேர்ந்த மாணவர்கள் மூவருக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று உறுதியான 09 பேரில் யாழ்ப்பாணம் மாநகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும்...

ரயில்வே ஊழியர்கள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு!!

ரயில் எஞ்சின் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில் எஞ்சின் சாரதிகள் உள்ளிட்ட ரயில்வே உத்தியோகத்தர்களுக்கு எதிரான நியாயமற்ற ஒழுக்காற்று நடவடிக்கைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் பல தடவைகள் கலந்துரையாடியிருந்த போதிலும் உரிய தீர்வு கிடைக்கவில்லை...

கிளிநொச்சி நகரில் பொலிஸாரின் பாவனையிலுள்ள காணியை அரச காணியாக்கும் முயற்சி இடைநிறுத்தம்!

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் பொலிஸாரின் பாவனையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரின் ஏ-9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பொலிஸ் திணைக்களப் பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி எனத் தெரிவித்து அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) காலை...
Loading posts...

All posts loaded

No more posts