Ad Widget

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய உறவுகளை சந்திப்பதாக அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வெகு விரைவில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவறு கூறினார்.

உறவுகளை சந்தித்து அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தன்னை கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய வடக்கு மாகாணத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை எதிர்வரும் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

Related Posts