Ad Widget

யாழ். முதல்வருடன் தொடர்பை பேணியவர்களுக்கான அவசர அறிவிப்பு!!

யாழ். மாநகர சபையின் முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுடன் கடந்த ஒரு வாரமாக தொடர்பை பேணியவர்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், யா. மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, யாழ்ப்பாணம்...

வடக்கில் கோவிட்-19 நோய்த்தொற்றால் 11ஆவது நபர் உயிரிழப்பு

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 நோயால் 11ஆவது நபர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 82 வயதுடைய முதியவர் ஒருவரே நேற்றையதினம் உயிரிழந்தார் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதன்மூலம் கோவிட் -19 நோயால் வடக்கு மாகாணத்தில் கடந்த 4 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் 5...
Ad Widget

நெடுந்தீவு வைத்தியசாலை குறைபாடுகளுக்கு தீர்வு காணப்படும்

நெடுந்தீவு மக்களின் பொது வைத்தியசாலை தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த வைத்தியசாலை தொடர்பில் உள்ள பிரச்சினைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அதற்கான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் சபையில் கேட்ட வாய் மூலமான கேள்விக்கு அமைச்சர்...

திருநெல்வேலி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல்வரை மூடல்!!

திருநெல்வேலி போதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின்...

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்நேற்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் . இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர்...

யாழில் ஒரே நாளில் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்தைத் தொகுதி வியாபாரிகள் 24 பேருக்கும் உடுவில் மற்றும் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தலா ஒருவரும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை யாழ். சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மூவருக்கும் யாழ்ப்பாணம்...

யாழ். மாநகர சபையின் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதியானது

யாழ். நெல்லியடியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது....

சுயதனிமைப்பட்டார் யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன்!

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் சுயதனிமைப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். வி.மணிவண்ணனின் நெருங்கிய நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வு கடந்த 20ஆம் திகதி பருத்தித்துறையில் நடந்தது. அதில் மணிவண்ணனும் கலந்து கொண்டார். அந்த நண்பருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தன்னை சுயதனிமைப்படுத்திக் கொண்ட...

யாழ்.மாநகர சந்தை மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டது

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று...

வடக்கு மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 21 பேருக்கும் கிளிநொச்சி மற்றும் மன்னாரில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரிபிரிவில்...

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 47 உறுப்பு நாடுகளைக்கொண்ட, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்,...

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன குறிப்பிட்டார். எண்ணெய் மற்றும் வெண்ணெய்க்கு அதிக வரி...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். பொருட்களுக்கான விலை தள்ளுபடி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் என்பன அதிகளவிலான...

பிரதமர் பங்களாதேஸ் சென்றமைக்காக காரணத்தை கூறும் சுமந்திரன்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம் மற்றும் சுற்றுலா மையம் என்பவற்றை பார்வையிட்ட பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்....

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு சிறப்பு வசதி அறிமுகம்!!

தேசிய அடையாள அட்டைகளை விரைவாகப் பெற சிறப்பு முன்பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்புடைய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம். மேலும், ஏற்கனவே விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் இந்த தொலைபேசி எண்களை...

யாழ்ப்பாணத்தில் மூவரும் மன்னாரில் ஒருவரும் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 3 பேரும் மன்னாரில் ஒருவரும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 294 பேரின் மாதிரிகள்...

குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் 400 ஏக்கர் நிலங்களை கோரும் தொல்லியல் திணைக்களம்

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலையில், 1932 ஆண்டு உறுதியின்படி-...

இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் – அங்கஜன்

இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்புாம் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன்

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு நேற்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த சுமந்திரன், இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும்...

யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் கோவிட் -19 நோயால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் கோவிட்-19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றுமாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் இன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்...
Loading posts...

All posts loaded

No more posts