Ad Widget

கொரோனா பரவல் – பொதுமக்களிடம் பொலிஸார் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார். பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே ஒன்று கூடுவது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார். மேலும் கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை...

தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா – ஐ. நா. உயர்ஸ்தானிகரிடம் கஜேந்திரகுமார் முறையீடு

மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனினும் அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ – உணவு வசதிகளோ ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை என்றும் இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனவும்...
Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு ஆரம்பம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஓன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட 40 அணி மாணவர்களினால் திருவெண்பா ஒதுதல் நிகழ்வு இன்று ஆரம்பிக்கபட்டது. இன்றைய கொரோனா கால சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இந்நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தங்களுடன் அனைத்து மாணவர்களையும் இணைந்து கொள்ளுமாறும் மற்றும்...

கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய...

மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின் மையமாக கொழும்பு மாறிவிட்டது என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது, எனவே பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க குறைந்தபட்சம் ஜனவரி 1 ஆம் திகதி...

யாழ். மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் நியமனம் குறித்த வர்த்தமானி வெளியானது!

வடக்கு மாகாணத்தின் இரண்டு உள்ளூராட்சி அதிகாரசபைகளின் புதிய முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நாடாத்தப்படும் திகதி குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சனினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல்...

முதலாம் தவணக்காக பாடசாலைகள் ஜனவரி 11இல் ஆரம்பம்

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உள்பட மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளிலும் 2021 ஜனவரி 11ஆம் திகதி முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். அன்றிலிருந்து தரம் 1 முதல் தரம் 5 வரையான...

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே சரத் வீரசேகர இருக்கிறார்- விக்னேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அதிகாரப் பகிர்வும் கொடுத்துவிட கூடாது எனும் நிலைப்பாட்டிலேயே அமைச்சர் சரத் வீரசேகர இருப்பதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண சபை முறைமை தேவையற்றது என அமைச்சர் சரத் வீரசேகர, பல இடங்களில் தெரிவித்து வருகின்ற கருத்து தொடர்பாகநேற்று (திங்கட்கிழமை), க.வி.விக்னேஸ்வரனிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த...

யாழில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) 382பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதில் கோப்பாய், ஊர்காவற்துறை மற்றும் இனுவில் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆகவே, பொதுமக்கள் அனைவரும்...

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம் நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

மத்திய அதிகேவக நெடுஞ்சாலை தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிச்சயமாக தம்புள்ளை வரை நீட்டிக்கப்படும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைய நாடு முழுவதும் பத்து இலட்சம் ரண்பிம காணி உறுதிபத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டத்தின் வடமேல் மாகாணத்திற்கான காணி உறுதிபத்திரங்கள் வழங்கும் நிகழ்வு குருநாகல் ரண்சர மண்டபத்தில் இடம்பெற்ற...

கஜேந்திரகுமார் எம்பியின் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டுமாறு நீதிமன்றம் உத்தரவு

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் பெப்ரவரி 17ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றினால் ஒத்திவைக்கட்டது. பிரதிவாதிகள் இருவர் தொடர்பிலும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நீதிமன்ற அறிவித்தலை சேர்ப்பிப்பதற்கு சென்ற போதும் அவர்கள் அங்கு இல்லை...

மானிப்பாயில் 8 மாத சிசு மூச்சுத் திணறலால் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் மானிப்பாயில் 8 மாத ஆண் சிசு ஒன்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக நேற்று (17) காலை தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிசு, சில மணி நேரங்களில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது. சிசுவின் உயிரிழப்புக் காரணம் தெரியாத நிலையில், சடலத்தைப் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று...

திருநெல்வேலி சந்தையில் அடையாளம் காணப்பட்டவர் மருதனார்மடம் கொத்தணியுடன் தொடர்புடையவர்

திருநெல்வேலி சந்தையில் வைத்து பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட நபர், மருதனார்மடம் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றுபவர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதனால் மருதனார்மடம் கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது. “மருதனார்மடம் சந்தி கடைத் தொகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணியாற்றும் உரும்பிராயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவருக்கு கோரோனா தோற்று...

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இன்று முதல் அன்டிஜன் பரிசோதனை

இன்று முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்களுக்கு விரைவான அன்டிஜன் பரிசோதனை அல்லது சீரற்ற அன்டிபாடி பரிசோதனை நடத்தப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். “மேல் மாகாணத்திலிருந்து புறப்படும் நபர்களை பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வழிகள்...

திருநெல்வேலி சந்தை வியாபாரி ஒருவருக்கும் கோரோனா!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரி ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை வியாபாரிகள் 393 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் பெறப்பட்டு தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைப்பட்டன. அவர்களில் 39 வயதுடைய வியாபாரிக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், சங்கானை, சுன்னாகம் ஆகிய சந்தைகள் வரிசையில்...

யாழ்ப்பாணத்தில் ஒக்டோபரிலிருந்து 93 பேருக்கு கோரோனா தொற்று; 21 பேர் குணமடைந்தனர் – 1,400 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் – 19 நோய்த் தொற்று நிலமைகளையடுத்து தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஆயிரத்து 400 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 818 பேர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டச் செயலாளர், கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார். அத்துடன், கோவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்ட 88 பேர், சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்....

யாழில் ஐவருக்கு தொற்று- மருதனார்மடம் கொத்தணி 73ஆக உயர்வு!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றையதினம் 478 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்தப் பரிசோதனையில் யாழ்ப்பாணத்தில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர்கள் இணுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட, முல்லைத்தீவில் தனிமைப்படுத்தலில் உள்ள இருவருக்கும் கோப்பாய்...

கூட்டமைப்போடு கலந்துரையாடி முடிவெடுப்போம் – மணிவண்ணன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். குறித்த விடையம் தொடர்பில் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே வி.மணிவரை...

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ நாட்டில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழை நிலைமை அடுத்த சில...
Loading posts...

All posts loaded

No more posts