Ad Widget

கூட்டமைப்போடு கலந்துரையாடி முடிவெடுப்போம் – மணிவண்ணன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் வெளிப்படையாக கலந்துரையாடி யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் நேற்று(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே வி.மணிவரை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையில் சிறப்பான ஆட்சி ஒன்றை கொடுப்பதற்கான முயற்சியிலே நாங்கள் ஈடுபடுவோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்தாலோசித்து நல்லதோரு ஆட்சி அமைப்பதற்கு நாங்கள் காத்திரமான பங்களிப்பை வழங்குவோம்.

குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இது தொடர்பில் வெளிப்படையாக கலந்துரையாடி நல்லதொரு ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்“ எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts