Ad Widget

யாழ். மாநகர முதல்வர் மற்றும் தவிசாளர் நியமனம் குறித்த வர்த்தமானி வெளியானது!

வடக்கு மாகாணத்தின் இரண்டு உள்ளூராட்சி அதிகாரசபைகளின் புதிய முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நாடாத்தப்படும் திகதி குறித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சனினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் இந்த மாதம் 30 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபை மண்டபத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் நல்லூர் பிரதேச சபைக்கான முதல்வர் மற்றும் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் குறித்த தினத்தில் நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts