Ad Widget

யாழில் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் 6 ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நிகழ்வை அறிமுகம் செய்யும் வகையிலான ஊடக சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) நண்பகல், யாழ்.பல்கலைக்கழக சபா மண்டபத்தில், முகாமைத்துவ...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டம்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்த இந்த போராட்டம், நல்லூர் பின் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது. ‘கொல்லாதே கொல்லாதே அரசியல் கைதிகளை கொள்ளாதே’, ‘விடுதலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகளை...
Ad Widget

சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

கொரோனாவினால் மரணிக்கும் கிறிஸ்தவ முஸ்லிம்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசே உமது பலத்தை சிறுபான்மையின் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை...

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ் வந்த தென்னிலங்கை வாசிக்கு கொரோனா!!

கொழும்பிலிருந்து பேருந்தில் யாழ்ப்பாணம் வந்த தென்னிலங்கை வாசியொருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (27) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் Covid-19 பரிசோதனையில் கொரோனா நோயாளி ஆக இனம் காணப்பட்டவர்களில், யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்ட தென் பகுதியை சேர்ந்த நபரும் உள்ளடங்குவாதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபர்,...

ஜனவரி முதலாம் திகதி திரையரங்குகளை மீளத் திறப்பதற்கு பிரதமர் அனுமதி

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் நாடுமுழுவதும் உள்ள திரையரங்குகளை திறப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச அனுமதியளித்துள்ளார். அதற்கமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலுமுள்ள திரையரங்குகள் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும். இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த...

மருதனார்மடம் கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 109ஆக உயர்வு!!

மருதனார்மடம் கோரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் ஒரு வியாபாரிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 27) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதன்மூலம்...

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி!

வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கொரோனாத் தொற்று...

முல்லைத்தீவில் அடையாளம் காணப்பட்டவரில் கண்டறியப்பட்ட வைரஸ் வீரியம்மிக்கது!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரின் வைரஸ் மிகவும் வீரியம் மிக்கதாகக் காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனால், குறித்த தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் தொடர்புகொண்டு பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண கொரோனா...

யாழ். மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் ஆர்னோல்ட் வேட்பாளர்!

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் பதவிக்கு மீண்டும் இம்மானுவல் ஆர்னோல்டை வேட்பாளராக நிறுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இருப்பினும், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு யாரை பிரேரிப்பது என்பது தொடர்பாக நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் உறுதிசெய்யப்படவில்லை. யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை மேயர் மற்றும் தவிசாளர்...

வரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்!!

வரலாற்று பெருமை மிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு...

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியது என எச்சரிக்கை!

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது....

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 100ஐ கடந்தது – கிளிநொச்சியிலும் தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு கூடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது....

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது முன்னணி!

யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள்? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

பாடசாலை மாணவர்கள் அனைவரும் வகுப்பேற்றப்பட வேண்டும் – முக்கிய அறிவிப்பு

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடையும்போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணையின்போது,...

இலங்கையில் 4 கொரோனா மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல...

புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளில் ஒளிப்படம், சொற்களை வெளியிட்ட பத்திரிகை மீது நீதிமன்றில் வழக்கு

இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையான “உதயன்” மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு மார்ச் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய...

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள கோரிக்கை!

பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அநாவசியமான நடமாட்டங்களை தவிர்த்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போதுள்ள கொரோனா நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது யாழ் குடாநாட்டில் கொரோனா தொற்று பரவுகின்ற வீதம் சற்று குறைவடைந்துள்ளது. இன்று...

இலங்கையில் கொரோனாவால் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை இனங்காணப்பட்டு...

யாழில் மேலும் அறுவருக்கு கொரோனா உறுதி!!

யாழில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 412 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த 3 பேருக்கும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும்...
Loading posts...

All posts loaded

No more posts