பட்டதாரி பயிலுனர் நியமனம் – மேன்முறையீடுகளை பரிசீலிக்க குழு நியமனம்

அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று(புதன்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார். மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மேன்முறையீடுள் விசேட குழுவினால் பரிசீலிக்கப்படவுள்ளதாகவும் அவர்...

பிரபாகரனின் முடிவினால் திலீபன் உண்ணாவிரம் இருக்கவில்லை – கமால் குணரட்ணவின் கருத்திற்கு ஐங்கரநேசன் பதிலடி

திலீபன் உண்ணாவிரதம் இருந்தமை தலைவர் பிரபாகரனின் முடிவோ தெரிவோ அல்ல என்றும் அவர் சுயமாகவே இந்த முடிவை எடுத்துத் தலைவரிடம் அதற்கானஒப்புதலைப் பெற்றிருந்தார் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல என தெரிவித்த ஐங்கரநேசன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே...
Ad Widget

வடக்கு – கிழக்கில் அரசின் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு கூட்டமைப்பு தீர்மானம்!!

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் புதிய அரசின் ஜனநாயக மீறல் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தீா்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு, எதிா்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைத்து இந்த தீா்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டமை மற்றும்...

இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு – அமைச்சர் மஹிந்தானந்த

வாழை தோட்டம்,பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உழுந்து, கஜீ, பப்பாசி போன்ற பயிர் செய்கைகள் இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் போது நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ‘சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி’ எனும் தொனிப் பொருளிலான கலந்துரையாடலில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த...

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்து – ஒருவர் உயிரிழப்பு!

பருத்தித்துறை வியாபாரி மூலையில் கத்திக் குத்துக்கு இலக்காகிய ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று மந்திகை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. பருத்தித்துறை வியாபாரி மூலையில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது -39) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கத்தியால் குத்தி...

வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் செல்லவேண்டாம்!! – தொல்பொருள் திணைக்களம் எச்சரிக்கை!

ஆலயத்திற்கு செல்வதோ பூசைகள் செய்வதோ முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி செயற்பட்டால் நிர்வாகத்தினர் கைதுசெய்யப்படுவார்கள் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளதாக வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலும் அவர்கள் தெரிவிக்கையில்… வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் நாளை(வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்நிலையில் ஆலய திருவிழாவினை தடுத்து...

கொரோனா வைரஸ் தொற்று: பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சர் முக்கிய அறிவிப்பு

பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அலோசனைகளை பின்பற்றுவதன் ஊடாகவே, கொரோனா சவாலில் இருந்து முழுமையாக வெற்றியடைய முடியும் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் பவித்ராதேவி வன்னியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டுக்குள் கொரோனா தொற்று இல்லை. 100 நாட்களுக்கும் மேலாக சமூகத்தொற்று இல்லாமல்...

தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபியை திருத்த வேண்டாம்!!

யாழ். ஆவரங்கால் பகுதியில் இந்திய இராணுவத்தினரின் காலத்தில் சேதமாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட நிலையில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை, மீள புனர்நிர்மாணம் செய்து அமைப்பதற்கு சிலர் முன்வந்திருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் இணைந்து அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தமது பிரதேசத்துக்கு இந்தத் தூபி தேவையில்லை என்றும், அதனால், ஏற்கனவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும்...

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்பு!!

தேங்காயின் விலை 100 ரூபாய் வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் அவ்விலைகளில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 250 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதோடு, அதில் 150 மில்லியன்...

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கம் கைது

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ளது. இந்நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் நடத்துவதற்கான தடையுத்தரவை நேற்றைய...

மாணவியைக் கடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்த கோப்பாய் பொலிஸார் மாணவி மீது தாக்குதல்!!

15 வயது பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று மீளவும் கொண்டு வந்து விட்டமை தொடர்பில் மாணவியின் முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர், மாணவியைத் தாக்கியுமுள்ளார். மாணவி நேற்று காலை 7.30 மணியளவில் பாடசாலைக்குச் சென்ற போது, கோண்டாவில் இ.போ.ச சாலை முன்பாக ஒருவரால் மோட்டார் சைக்கிளிலில் கடத்திச்...

டோகாவிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணம் வாசிக்கு கோரோனா!!

டோகா நாட்டிலிருந்து நாடு திரும்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் நட்சத்திர விடுதியில் தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த அவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை நேற்று மாலை கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளி தற்போது சிகிச்சைக்காக கோரோனா சிகிச்சை...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! ஒருவர் உயிரிழப்பு!!

இலங்கையில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 262 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஒருவர் கொரோனா காரணமாக நேற்று உயிரிழந்த கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக இருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐக்கிய...

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை- ஒன்றுகூடும் தமிழ்க்கட்சிகள்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா...

பொம்மைவெளி மக்களின் வீட்டுப் பிரச்சினையை ஆராய பிரதமர் உத்தரவு

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த தகவலை பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் பிரதமரின் ஊடகப் பிரிவு அனுப்பிய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை இன்று...

திலீபனின் நினைவேந்தல் நடத்த தடை- யாழ்.நீதிமன்றம் உத்தரவு!

நல்லூரில் ஏற்பாடு செய்யப்பட்ட திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடந்த வழக்கு விசாரணையின் போதே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை ஆரம்பமாகவிக்கும் தியாக தீபம் திலிபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு...

மாணவ குழுக்களிடையே மோதல் மாணவனின் கழுத்தில் வெட்டு!!

கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற க.பொ. த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற ஒரு செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் மாணவன் ஒருவனின் கழுத்தும் வெட்டப்பட்டுள்ளதோடு, 20 க்கு மேற்பட்ட கதிரைகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த.சாதாரன தர பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார்...

கொரோனா அச்சம் – மன்னார் செளத்பார் பிரதான புகையிரத நிலையம் மூடல்!!

மன்னார் பிரதான புகையிரத நிலைய பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) முதல் எதிர்வரும் 14 நாட்கள் மூடப்பட்டுள்ளதுடன் குறித்த புகையிரத நிலைய ஊழியர்களும் பாதுகாப்பு காரணங்களுக்காக புகையிரத நிலையத்திலே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, வவுனியா பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பி வந்த...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் என்றும் இதன் போது 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திலும்...

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை நிறுத்த அரச புலனாய்வு சேவைகளுக்கு அழைப்பு

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு சேவைகள் (State Intelligence Services) அழைக்கப்பட்டுள்ளது. “பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை முடிவுக்குக் கொண்டுவர அரச புலனாய்வு அமைப்பு மற்றும் பிற அரச புலனாய்வு அமைப்புகளும் வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு உறுதியளித்திருந்தது. கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதால், பகிடிவதையில் ஈடுபடும் குழுக்களை நாங்கள் அகற்றவேண்டும்”...
Loading posts...

All posts loaded

No more posts