அரியாலை – செம்மணி இந்து மயானத்தில் தொடரும் அகழ்வுப் பணிகள்

அரியாலை – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் அகழ்வு பணி புதன்கிழமை (4) முன்னெடுக்கப்பட்டது.

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் புதன்கிழமை (4) வரை பத்துக்கு மேற்பட்ட மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் ஐந்து வரையான மண்டையோட்டு பாகங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அகழ்வுப் பணிகள் சர்வதேச மேற்பார்வையுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாவற்குழி யாழ் வளைவு பகுதியில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சித்துபாத்தி மாயானத்தில் மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தக்கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பம் தொடர்பான கட்டளை நாளை வழங்கப்படவுள்ளது.

Related Posts