Ad Widget

பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை: இஸ்ரேல் விடுத்த பகிரங்க அறிவிப்பு!!

பணயக் கைதிகளாக அழைத்து செல்லப்பட்டுள்ள தங்களது நாட்டு பிரஜைகள் விடுவிக்கப்படும் வரை காசா மீதான பதில் தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசாவுக்கான எரிபொருள், நீர் மற்றும் உணவு விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ள நிலையில் காசாவில் மின்சாரம் துண்டிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹமாஸ் தரப்பினர் நடத்திய தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரையில் 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்....

தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டம் :மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் நடந்து வரும் போர் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காசா மீதான தமது வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவம் அதிகமான இராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக இராணுவத் தளவாடங்களுடன்...
Ad Widget

பாலஸ்தீனியர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் பாஸ்பரஸ் குண்டு தாக்குதல்!!

தடை செய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நிகழ்த்திய ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்துள்ளது. இந்நிலையில், காஸா பகுதியை குறிவைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதலால், அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியது. மேலும், தடைசெய்யப்பட்ட வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல்...

அமெரிக்க படையினரின் உள்நுழைவு: இஸ்ரேல் தொடர்பில் வெள்ளை மாளிகை விளக்கம்

இஸ்ரேலிற்கு அமெரிக்க படையினரை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் விவகாரத்தில் அமெரிக்கா தனது படைகளை அனுப்பும் திட்டம் எதனையும் வகுக்கவில்லை. எனினும் தனது பிராந்தியத்தில் நலன்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் அமெரிக்கா ஈடுபடும் என அவர் கூறியுள்ளார். பாதுகாப்பு விடயத்தில் இஸ்ரேல் மேலும்...

இருளில் மூழ்கிய உக்ரைன்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கடந்த குளிர்காலத்தில் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் விமானப்படை அதன் மண்ணில் பதிவு செய்யப்பட்ட மோசமான தாக்குதலாக இதை கருதுகின்றது. ஈரான் வடிவமைத்த ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை முறியடிக்கும் என்று செப்டெம்பர் மாதத்திற்கான தரவு...

உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 49 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் இன்று (05.10.2023) ஏவுகணைத் தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சுமார் 49 பேர் இறந்துள்ளதாகவும் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்...

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் பிரித்தானியா: ரஷ்யாவின் எதிர்ப்புக்கு ரிஷி சுனக் பதில்

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை எனவும் எதிர்காலத்தில் உக்ரைனிய வீரர்களுக்கு அவர்களது நாட்டில் பிரித்தானிய வீரர்கள் பயிற்சி அளிக்கலாம் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு செல்லும் பிரித்தானிய வீரர்கள் உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல் எத்தகைய போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கான அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து 20 மாதங்களாக நடைபெற்று...

உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும்: ஜோ பைடன் உறுதி

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தைத் தவிர்க்கும் தற்காலிக உடன்பாட்டில், உக்ரைனுக்கான ஆறு பில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''குடியரசுக் கட்சியின் தீவிரப் போக்குடைய உறுப்பினர்கள் சிலர் உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ உதவி...

தொடரும் உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல்!!

உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் சோச்சியில் உள்ள ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஸ்மோலென்ஸ்கில் உள்ள விமான தொழிற்சாலையை தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன. உள்ளூர் ரஷ்ய சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளில் சோச்சியின் அட்லர் விமான தளத்திற்கு அருகே புகை மற்றும் வெடிப்புகளைக் காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளியில் குறித்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதத்தின்...

உக்ரைனால் கொல்லப்பட்ட ரஷ்ய கடற்படை தளபதி: காணொளி இணைப்பால் வெளியான புதிய சர்ச்சை

உக்ரைனின் சிறப்பு தாக்குதல் நடவடிக்கையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கருங்கடல் கடற்படையின் தளபதி விக்டர் சோகோலோ சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பில் காணொளி இணைப்பு மூலம் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரஷ்யாவின் போர் விமானங்கள் தரையிறங்கும் மின்ஸ்க் கப்பல் மீது உக்ரைன் சிறப்பு தாக்குதல் நடத்தியிருந்தாக...

உயிர்போகும் வரை உக்ரைனியர்களை கொடுமைப்படுத்தும் ரஷ்யா: ஐ.நா அதிர்ச்சி தகவல்

ரஷ்யா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரஷ்யா மேற்கொண்டு வரும் கொடுமைகளால், மக்கள் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரிவு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை...

பாடசாலை மைதானங்களில் சிறுவர்களுக்கு போர் பயிற்சி: ரஷ்யாவிற்கு வலுக்கும் எதிர்ப்பு

ரஷ்யா பாடசாலைகளில் குழந்தைகளை மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் 575 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் போரில் வெற்றி பெற இரு தரப்பும் பல்வேறு வழிகளை பின்பற்றி வருகின்றது. அந்த வகையில் ரஷ்யா, தன் நாட்டு பாடசாலைகளில் குழந்தைகளையும் மறைமுகமாக போரில் ஈடுபடுத்த தயார்படுத்தி வருவதாக தகவல்கள்...

ரஷ்யாவின் ஷெல் தாக்குதலில் 4 பேர் பலி!!

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஷெல் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பொது வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ட்ரோன்கள் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு, ஈரானால் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் - 136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரான் இராணுவ தலைமையுடன் ரஷ்ய பாதுகாப்பு...

உக்ரைனிலிருந்து கடத்திச்செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகள்! பரபரப்பு தகலை வெளியிட்ட உக்ரைன்

ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக 19 ஆயிரம் குழந்தைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. மாநாட்டில் உரையாற்றிய போதே ஒலெனா ஜெலன்ஸ்கா இவ்வாறு தெரிவித்துள்ளார். எனவே 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா...

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்

நியூசிலாந்தின் தெற்கு தீவுக்கு அருகில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (20.09.2023) காலை அந்நாட்டு நேரப்படி காலை 9.20 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரான கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து மேற்கே, 124 கிலோ மீட்டர் தொலைவில் தென்மத்திய தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்...

போரின் போது இலங்கைக்கு வடகொரியா மூலம் உதவி வழங்கிய சீனா!! தற்பொழுது ரஷ்யாவிற்கு!!

இலங்கையில் போர் நடைபெற்ற போது சீனா நேரடியாக இலங்கைக்கு ஆயுதங்களை வழங்காது தனது முகவர் ஊடாக வடகொரியா மூலம் ஆயுதங்களை வழங்கியதாக சிரேஸ்ட விரிவுரையாளரான கலாநிதி மகிந்த பத்திரண தெரிவித்துள்ளார். வடகொரிய ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடகொரிய ஜனாதிபதி கிம்...

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரின் சொத்துக்களை ஏலம் விட ரஷ்யா முடிவு

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உட்பட நூற்றுக்கணக்கான உக்ரைனியர்களுக்கு சொந்தமாக கிரீமியாவில் உள்ள சொத்துகளை விற்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அவற்றில் கிரீமியா தன்னாட்சிக் குடியரசிலுள்ள 100 சொத்துக்களை விற்க திட்டமிட்டு வருவதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, கிரீமியாவிலுள்ள, தேசிய மயமாக்கப்பட்டுள்ள சொத்துக்களை விரைவில் விற்பனை செய்ய இருப்பதாக கிரிமியாவின் நாடாளுமன்ற சபாநாயகரான Vladimir Konstantinov தெரிவித்துள்ளார்....

வட கொரியாவுடன் இராணுவ ஒத்துழைப்புக்கு திட்டமிடும் ரஷ்யா

ரஷியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் சில வரம்புகள் இருந்தாலும், இப்போது உள்ள கட்டமைப்புகளைக் கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அணு ஆயுத சோதனைகளை நடத்தியதன் மூலமும் ஐ.நா. தடையையும் மீறி நீண்ட தொலைவு பாய்ந்து செல்லும் பலிஸ்டிக்...

ரஷ்யாவின் புனித போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு!

மேற்குலகம் உடனான ரஷ்யாவின் புனிதப்போரை ஆதரிப்பதாக வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியாவிலிருந்து தொடருந்து பயணமாக ரஷ்யா வந்தடைந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கு, பிரிமோர்ஸ்கி க்ராய் தொடருந்து நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலையத்திலிருந்து வோஸ்டோச்னி சென்ற கிம் ஜாங் உன்னை ரஷ்ய ஜனாதிபதி புதின் வரவேற்றுள்ளார். இதன் பின்னர்...

வடகொரிய ஜனாதிபதியை சந்திக்கும் புடின்: அச்சத்தில் முக்கிய நாடுகள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதியை எதிர்வரும் நாட்களில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ரஷ்யாவின் அதிகாரபூர்வ செய்தி தளமான கிரெம்ளின் இணையதளமும், வட கொரியாவின் அதிகாரபூர்வ கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. தற்போது வரை இச்சந்திப்பு எங்கு நடைபெறும்...
Loading posts...

All posts loaded

No more posts