Ad Widget

இருளில் மூழ்கிய உக்ரைன்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

கடந்த குளிர்காலத்தில் எரிசக்தி வசதிகள் மீதான தாக்குதல்கள் உக்ரைனின் எரிசக்தி அமைப்பின் குறிப்பிடத்தக்க பகுதியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குளிர்காலத்தில் உக்ரைனின் விமானப்படை அதன் மண்ணில் பதிவு செய்யப்பட்ட மோசமான தாக்குதலாக இதை கருதுகின்றது.

ஈரான் வடிவமைத்த ஷாஹெட் காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது கடந்த ஆண்டின் எண்ணிக்கையை முறியடிக்கும் என்று செப்டெம்பர் மாதத்திற்கான தரவு காட்டுவதாக உக்ரைனின் செய்தி தொடர்பாளர் யூரி இஹ்னாட் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் காரணமாக காரணமாக பெரும்பாலான நகரங்களுக்கு மின்சாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைன் அதன் வான் பாதுகாப்பை வலுப்படுத்திய போதிலும், இந்த குளிர்காலத்தில் மீண்டும் ஆபத்து ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Posts