- Tuesday
- November 18th, 2025
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மிமி மழை வீழ்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு...
யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான...
இனக்குரோதத்தை தூண்டும் வகையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சரது உத்தரவில் சட்டவிரோத புத்தர்சிலை திருகோணமலையில் நிறுவப்பட்டமையை கண்டித்து அனைத்து தரப்புக்களும் கட்சிபேதங்களை கடந்து எதிர்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு...
அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், அன்றாடம் சுமார் 6,000 அனுமதிப் பத்திரங்களை அச்சிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது. பற்றாக்குறையின் விளைவாக அண்மைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 சாரதி அனுமதிப்...
பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. 2026 ஆம் நிதியாண்டு தொடர்பாக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு காணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் இந்தத்...
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்கப் பகுதி தொடர்ந்து நிலைத்திருப்பதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய...
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்படும் மக்கள் பேரணி குறித்து அறிவிப்பதற்காக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைத்...
தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதன் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக் கூட்டம் ஒன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மீன்வளம், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இரா.சந்திரசேகர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, மற்றும் துறைமுகங்கள்...
இலங்கை பொறியியல்சேவை மற்றும் இணைந்த சேவையின் தொழில்நுட்பவியல் சேவை பதவிக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கைதடியில் உள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (12) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 4 பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 39 (1....
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார் இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு...
நல்லூரில் மாவீரர் கல்வெட்டு வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்தினை இம்முறை மணிவண்ணன் மான் கட்சியினருக்கு வழங்ககூடாது என்று சைக்கிள் கட்சி உறுப்பினர்கள் யாழ். மாநகர சபையில் நேற்று (11) போர்கொடி தூக்கியிருந்தனர். இருப்பினும் தமிழரசுக் கட்சி மற்றும் சங்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் அந்த இடத்தில் வழமையாக மாவீரர்களின் கல்வெட்டுக்களை காட்சிப்படுத்தும் நிகழ்வினை செய்யும் மான்...
யாழ்நகர மையத்திற்கும் மருத்துவ பீடத்திற்கும் இடையில் விசேட பேரூந்து சேவைகள் நேற்றையதினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை உறுப்பினராக கபிலன் சுந்தரமூர்த்தி அவர்கள் தெரிவிக்கையில்.... யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் மற்றும் முகாமைத்துவக் கற்கைகள் பீடம் என்பவற்றில் பட்டக்கல்வியைத் தொடரும் மாணவர்கள் யாழ்ப்பாண நகரமையத்திலிருந்து குறித்த இரு...
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது தாய்மாமன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதீப் நிவேதா என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்: கடந்த நவம்பர் 9ஆம் திகதி அதிகாலை 2.00...
வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்பட்டல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் என்ற வடக்கு மாகாண சுகாதார...
170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால...
முறையான முன்னாறிவிப்போ அன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி சதிகள், பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின்...
யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என்.பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் வடதாரகை மற்றும் நெடுந்தாரகை ஆகிய இரு படகுகளின் சேவை வியாழக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது நிலவும்...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று (10) சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் ஆனைப்பந்தி பகுதியில் உள்ள வாகன விற்பனை நிலையமொன்றிலேயே பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொண்ட அனுமதிக்கமைய குறித்த சோதனை...
இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமான நிலையில், டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் வெற்றிகரமாக ஆரம்பமான...
Loading posts...
All posts loaded
No more posts
