ஏ9 வீதியில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு!!

கிளிநொச்சி ஏ9 வீதி இரணைமடு சந்தி தொடக்கம் பரந்தன் சந்திர வரையான பகுதியில் ரிப்பர் வாகனம் உட்பட கனரக வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது என கடந்த 30ஆம் திகதி மாவட்டச் செயலக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைவாக, இன்று வெள்ளிக்கிழமை (3) கிளிநொச்சி நகர்ப்பகுதியில் ரிப்பர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி...

திருநெல்வேலி அம்மாச்சி : ஒரு விழிப்புணர்வுப் பார்வை!

 திருநெல்வேலியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாரம்பரிய உணவகமான "அம்மாச்சி" உணவகத்திற்கு அண்மையில் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் எழும் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரக் கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது தற்பொழுது பலரினதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது பதிவின் விபரம் வருமாறு: "நீண்ட நாட்களுக்குப் பிறகு திருநெல்வேலி அம்மாச்சி உணவகத்திற்குச்...
Ad Widget

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி!! நீதிமன்றம் விடுத்த உத்தரவு!!

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'அபினவ நிவஹல் பெரமுன'வின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நேற்று (02) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் மஹேன்...

பயங்கரவாதத் தடைச் சட்டக் காவலில் இருந்து விடுக்கப்பட்ட இனியபாரதி விளக்கமறியலில்!!

திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரை...

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டில் திருத்தம்!!

சீனி அடங்கிய திரவ உணவுகளுக்கான வர்ண குறியீட்டு லேபலிடும் உத்தரவுகளை திருத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் இந்த திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அவை ஜூன் 23ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில்...

பிள்ளைகள் போதைக்கு அடிமையா? — பெற்றோரே வீட்டில் சோதிக்கும் புதிய வசதி விரைவில்!!

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள் மூலம் இலகுவாகக் கொள்வனவு செய்யக்கூடிய வகையில் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளது. நச்சுப் போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து ஒழிப்பதற்காகச் செயற்படுத்தப்படும் முழு நாடுமே ஒன்றாக தேசிய செயல்பாட்டுச் சபை,...

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வௌியான தகவல்!!

அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை இன்று (03) முதல் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர்களுக்காக மொத்தம் 3,108,805,000.00 ரூபாய் பணம் பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70...

போதைப் பொருள் அச்சுறுத்தல் : பாடசாலைகளைப் பாதுகாக்க 225 விசேட திட்டங்கள்!!

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டுச் சபை, மூன்று பீடங்கள் மகா சங்த்தினத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (02) முற்பகல் ஜனாதிபதி...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (02) காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி...

மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே...

சொந்த மண்ணை மீட்க ஒன்றுபட்ட பலாலி மக்கள்!!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தங்களது பூர்வீகக் காணிகளை மீட்டெடுப்பதற்காக, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து 'பலாலி மீள்குடியேற்ற அமைப்பு' என்ற பெயரில் புதியதொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் எனக் கூறி, கடந்த 36 வருடங்களாக...

விடுதலைப் புலிகளின் ஸ்னைப்பர் துப்பாக்கி மீட்பு!

அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் (STF) கடந்த திங்கட்கிழமை(29) மாலை மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய காட்டுப் பகுதியில்...

எனது மனைவியின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம்!! – கண்ணீருடன் கணவர்

எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்" தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...

பதின்ம வயதினரிடையே பாலியல் நோய் அதிகரிப்பு!!

பதின்ம வயது பிள்ளைகளிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் தொற்றும் போக்கு அதிகரித்து வருவதாக ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அரசாங்கம்...

முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கு புதிய நோயாளர் காவு வண்டி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரச் சேவை, நோயாளர் போக்குவரத்து மற்றும் அவசரச் சிகிச்சைச் சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்தியசாலைக்கான புதிய நோயாளர் காவு வண்டி (Ambulance) ஒன்று நேற்று முன்தினம் (30) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுகாதார மற்றும் வெகுஜன...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு!!

பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த கட்டண திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. சாதாரண சேவையின் கீழான பேருந்து கட்டணத்தை 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு 12 சதவீதத்தினாலும், 100...

பேருந்து ஊழியர்களுக்கு முறைப்பாடு இலக்கத்துடன் சீருடை!

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (01) நடைபெற்றது. அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்....

‘மேல் நடுத்தர வருமான’ நாடாக இலங்கை! – உலக வங்கியின் புதிய தரவரிசை

கடந்த 2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள இலங்கை, தற்போது உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலில் 'மேல்-நடுத்தர வருமான' (Upper-middle Income) நாடாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 01 ஆம் திகதி வெளியிடப்படும் உலக வங்கியின் வருமானக் குழு வகைப்படுத்தலின் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய...

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

விசர் நாய்க்கடி நோயை இல்லாதொழித்தல் மற்றும் செல்லப் பிராணிகளை பதிவு செய்தல் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதனடிப்படையில் அதனை வர்த்தமானியில் வௌியிடுவதற்கும், பாராளுமன்றில் முன்வைப்பதற்குமான யோசனை ஒன்றை பொது நிர்வாகம், மாகாண சபை...

பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகம் துரிதம்!

இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்தார். சாதாரண தரப் பரீட்சையை...
Loading posts...

All posts loaded

No more posts