- Wednesday
- August 5th, 2026
யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை...
2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல்...
செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97...
வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை...
காரைநகரில் நேற்று (03) இரவு இடம்பெற்ற விபத்து ஒன்றில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது காரைநகர் - கருங்காலி பகுதியை சேர்ந்த 66 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நேற்று இரவு கருங்காலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த போது அவ் வீதியால் வந்த மோட்டார்...
வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம...
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் திங்கட்கிழமை (03) பிக்மீ செயலியின் கட்டண முரண்பாடுகள் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அலஸ்தோட்டம் சந்தியில் இருந்து பேரணியாக புறப்பட்ட சாரதிகள், மூன்றாம் கட்டை வழியாக பிக்மீ அலுவலகத்தை அடைந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்....
கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த 'ஹையேஸ்' ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது....
வடமாகாண தகவல் தொழில்நுட்ப அமைப்பின் (NCIT) வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (18 ஜூலை 2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மற்றும் ஒருமித்த தீர்மானத்துடன் புதிய இயக்குநர் சபையினரும் நிர்வாகிகளும் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 🏛️ NCIT இயக்குநர் சபை உறுப்பினர்கள்...
06 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...
கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கும் நல்லூரன் வடக்கு வாசல் வளைவின் ஊடாக செல்லும் இரட்டை திருக்கை வண்டி ஏற்றிய நெல்பெட்டகத்தில் அடியார்களும் நெல் இடலாம். நாளை மறுதினம் வியாழக்கிழமை (06.08.2026) ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கின்றது. குறித்த காண்பிய விரிப்பு முன்னர் அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து...
தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (02) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கல் பணிகளை அடிக்கல் நாட்டி...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன...
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நேற்றையதினம் பழைய மாணவன் சதாசிவம் ஊடக சந்திப்பை நடாத்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், பாடசாலையில் பழமையான மதிலை உடைப்பதற்கு பழைய மாணவர்கள் விரும்பாத நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் குறித்த மதில்...
புங்குடுதீவுப் பகுதியில் பனை வெட்டச் சென்ற முதியவர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; உயிரிழந்த முதியவர் பனை வெட்டுவதற்காகப் புங்குடுதீவு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாக அவரைக் கருங்குளவிகள் தீவிரமாகக் கொட்டியுள்ளன. இதனைத்...
தரமற்ற தலைக்கவசங்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகாரசபை, SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், களஞ்சியப்படுத்துதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது. 2015.07.16 ஆம் திகதியுடைய 1923/65 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிப்...
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து இன்று (30) ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம்...
செம்மணியில் புதைக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரிய அமைதி வழி போராட்டம் இன்று (30) காலை அரியாலையில் முன்னெடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது அதிகாலை புனித யூதா ததேயு தேவாலயத்திலிருந்து ஆரம்பித்து செம்மணி சிந்துபாத்தி மயானம் வரை அமைதி வழி பேரணியாக இடம்பெற்றது. இதன்...
Loading posts...
All posts loaded
No more posts
