மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் சோதனைகளை தீவிரப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர...

எரிபொருள் விலையில் திருத்தம்?

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிபொருள் விலை திருத்தம் ஒன்று அறிமுகப்படுத்தப்படலாம் என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். பல எரிபொருள் விநியோக நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
Ad Widget

உயர்தர பாடத்தொகுதியில் சட்டம், சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட புதிய பாடங்களை உள்ளடக்க திட்டம்!!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் உள்ளிட்ட 7 பாடங்களை உள்ளடக்குவதற்கும், 10 மற்றும் 11 ஆம் தரங்களில் இருந்து தொழிற்கல்வியை அறிமுகப்படுத்துவதற்கும்,12 மற்றும் 13 ஆம் தரங்களுக்கு சமூக நல்லிணக்கம், சட்டம் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான தொகுதிகளை உள்ளடக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மறுசீரமைப்புகள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உபகுழுக் கூட்டம்...

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு

கொடிகாமம் - மீசாலை வடக்கு புத்தூர் வீதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்று, சமிக்ஞையை மீறி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற இரு டிப்பர் வாகனங்களை புத்தூர் வீதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர். இருப்பினும்,...

செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைகளுக்கு நீதிகோரி கிட்டுபூங்காவில் தமிழ்த்தேசியப்பேரவை பிரகடனம்!!

செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் இனப்படுகொலைக்கான சான்றுப்பொருட்களாக காணப்படுகின்ற நிலையில் தமிழனப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச நீதி விசாரணைப்பொறிமுறையொன்று தாமதமின்றி உருவாக்கப்பட வேண்டும் என்று கிட்டு பூங்காவில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பேரவையின் அழைப்பில் ஈழத்தமிழ் குடிசார் அமைப்புக்களும் பொதுமக்களும் செம்மணி உள்ளிட்ட தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை...

நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் வெப்பநிலை!!

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல மாவட்டங்களில் இன்று (14) பகல் வேளையில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நேற்று (13) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பின்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின்...

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கின் விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத்...

பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்காத பேருந்தின் அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம்!!

சேவையில் ஈடுபடும் போது பயணிகளுக்கு உரிய பயணச்சீட்டுகளை வழங்காமல் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட பேருந்தின் அனுமதிப்பத்திரத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த பேருந்து தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி, சேவையின்போது...

வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடு!!

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்துக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 1979 ஆண்டு இலக்கம் 15ம் குற்றவியல் நடவடிக்கை சட்டக் கோவை சட்டத்தின் 106 (1)இன் பிரகாரம் வவுனியா நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் (G.C.E. A/L) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், வெற்றிடங்களை நிரப்பும் இரண்டாவது கட்டத்தின் கீழ் அரச பல்கலைக்கழகங்களின் இளமானி பட்டப் படிப்புகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) குறித்த மாணவர்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன....

முற்பகையால் யாழில் இடம்பெற்ற கொடூர கொலை!

நேற்றிரவு பருத்தித்துறை – துன்னாலையில் கொடூர கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில் ஒரு ஊரைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே தொடர்ச்சியான பகை இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கொல்லப்பட்ட நபரை நேற்றிரவு பின்தொடர்ந்த நால்வர் கொண்ட...

நாகை – காங்கேசன்துறை இடையேயான கப்பல் சேவை ரத்து

நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கப்பல் போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு, ஆய்வு சான்றிதழ்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்வதற்காகச் சென்னையில் இருந்து வருகை தந்த வணிக கடல்சார் துறை அதிகாரிகள் நாகையில் இயக்கப்படும் கப்பல்களை ஆய்வு செய்தனர். இந்த...

மன்னார் கடலில் எரிபொருள் ஆய்வு – கத்தோலிக்க ஆயர் பேரவை கவலை

எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடலில் பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்யப்படுவது குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு தகவல் கிடைத்துள்ளது. மன்னார் தீவில் மணல் அகழ்வுப் பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் சேதம் குறித்தும் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதகமான...

நீதிமன்றில் சாட்சியமளித்து வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு!!

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (9) பதிவான நிலையில், காயமடைந்த 31 வயதுடைய இளைஞர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில்...

கவிஞர் சோ. பத்மநாதனுக்கு ஜனாதிபதியால் ‘சாஹித்யரத்ன’ விருது வழங்கி கௌரவம்!

அரச இலக்கிய விருது விழா 2026, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (08) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய குழு ஆகியவை இணைந்து 67 ஆவது...

டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும்!!

இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என வலியுறுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினார் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

வடக்கில் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை!!

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், இவ்வருடத்திற்குள் 50 வீத ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மேலும், பாடசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கருவிகளைப் பழுதுபார்த்தல் போன்ற விடயங்களுக்கான நிதியும் மாகாண சபைகள் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாகாண சபைகள் கோரினால் மேலதிக நிதியையும்...

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்!

நாளை (09) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவிக்கையில், அரச பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் கடுமையான நெருக்கடிகள் தொடர்பில் தமது சங்கம் கடந்த வாரம் முழுவதும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். அரசுப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களின்...

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன்களுடன் பெண் கைது!!

இலங்கை கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன் இணைந்து முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் நடத்திய கூட்டுச் சோதனை நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட மீன் தொகுதி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (07) கிழக்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பலான கோட்டாபய நிறுவனம், முல்லைத்தீவு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள...

செம்மணி படுகொலை: கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவுவேந்தல் நிகழ்வு

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவி குமாரசாமி கிருஷாந்தி உள்ளிட்டோரின் நினைவுவேந்தல் நிகழ்வு, செம்மணி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டு, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி, 18 வயதுடைய யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான...
Loading posts...

All posts loaded

No more posts