வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக போராட்டம் !!

வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும்...

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் நியமனம்!!

தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

ஆளுநரால் பதவி பறிக்கப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கண்டனம்!!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனைத் தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண ஆளுநரால்...

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...

பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளுமாறு தனியார் பஸ் சங்கங்கள் கோரிக்கை!

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று புதன்கிழமை (24) இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை செய்திகள் இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள்...

வவுனியா முதல்வர், சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கம்

வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள்...

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. இதற்கிடையில்,...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க கைது!!

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காக்கைத் தீவு இன்று கல்லூண்டாய்… நாளை……?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் காப்பகங்களாக முக்கிய மையங்களாக விளங்கும் காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ச்சியாக தன்னுடைய பொறுப்பற்றதன்மையினையும் அணுகுமுறையினையும் வெளிப்படுத்திவருவது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இது மிகுந்த கவலையளிக்கும் விடயம். கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ...

இனி யாருக்கு அஸ்வெசும கிடைக்கும்?

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் பன்னாட்டு விசாரணை நடத்த நாடாளுமன்றில் வலியுறுத்தல் !

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390...

பொலிசாரை கண்டித்து கிளிநொச்சியில் போராட்டம்!

கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் இறப்புக்கு நீதி...

16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை!!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் "சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்" (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக்...

கிராம உத்தியோகத்தர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!!

கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க...

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.   குறித்த கடிதத்தில், அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலியில் உள்ள...

பருத்தித்துறை வெளிச்ச வீட்டு பகுதியை இராணுவத்திடமிருந்து விடுவிக்க நடவடிக்கை!

பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு பகுதியை ஆக்கிரமித்து இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். அதனால் வெளிச்ச வீட்டு பகுதியை மக்கள் பார்வையிடவே , அவற்றை புகைப்படம் காணொளி எடுப்பதற்கோ இராணுவத்தினர் அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் ,...

இலங்கையில் இனி தேர்தல் வாக்களிப்பில் ‘அழியாத மை’ பூசும் நடைமுறை நீக்கம்!

இலங்கையில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களின் போதும், வாக்காளர்களின் விரல்களில் அழியாத மை பூசும் பாரம்பரிய நடைமுறையைச் சட்டப்பூர்வமாக முற்றாக நீக்குவதற்கு அமைச்சரவை உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தின் மூலம், தேர்தல் வாக்கெடுப்பு நிலையங்களின் பணிகள் மேலும் வினைத்திறனாக மாறும் என்றும், அரசுக்கான மேலதிக செலவுகள் பெருமளவில் சேமிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை!

வவுனியாவின் பல வர்த்தக நிலையங்களில் இறைவரி திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை நேற்று (23) மேற்கொண்டனர். இறைவரி திணைக்களத்தின் வருமான வரி அறவீட்டு அதிகாரிகள் தமது செயற்பாட்டை நாடு முழுவதும் முன்னெடுத்து வரி அறவீட்டு நடவடிக்கைகளை சீர் செய்தும் ஒழுங்கமைத்தும் வருகின்றனர். அதற்கமைவாக வவுனியாவிலும் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரி அறவீடு...

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் – அர்ச்சுனா

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் உறுதியளித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்கிழமை (23) அமர்வில் இடம்பெற்ற கரைவலை மீனவர்கள் பிரச்சனை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு...

இன்று முதல் 3 நாட்களுக்கு நாடு தழுவிய விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் நேற்று (23)...
Loading posts...

All posts loaded

No more posts