சுகாதார சேவையை மேம்படுத்த புதிய நடைமுறை யாழ். மாவட்டத்திற்கு விசேட ஒருங்கிணைப்பு அதிகாரி

யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பு அதிகாரியாக பாராளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புதிய முறையின் மூலம் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்தி வினைத்திறனான சேவையை வழங்குவதை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பிரதான...

மழை சில நாட்களுக்கு தொடரும்!!

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இந்த தொகுதியின் தாக்கத்தால், நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் நாட்டின் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்...
Ad Widget

முதலமைச்சர் விஜய்க்கு கஜேந்திரகுமார் வைத்த கோரிக்கை!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, ஈழத்தமிழர் சார்பாகத் தமிழ்த் தேசியப் பேரவை முக்கிய கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. இது குறித்து அந்தப் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள கோரிக்கை கடிதத்தின் விபரம் வருமாறு: 10 மே 2026 மாண்புமிகு சந்திரசேகர்...

புதிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று முதல் அமுல்!!

இந்த ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. இதன்போது மின்சாரக் கட்டணங்களை 8% முதல்...

யாழ் தேவி மீண்டும் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது!!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் யாழ் தேவி ரயிலானது கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கவுள்ளது. அதேவேளை, ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த ரயில்...

டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகள் அறிமுகம்; மே 1 முதல் அமுலுக்கு வருவதாக அறிவிப்பு

மோட்டார் வாகனங்களுக்கான காப்புறுதிச் சான்றிதழ்களுக்குப் பதிலாக, மே மாதம் முதலாம் திகதி முதல் 'டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைகளை' விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, இலங்கை காப்புறுதி சங்கம் உள்ளிட்ட துறையின் முக்கிய பங்குதாரர்கள் இணைந்து எடுத்துள்ள இந்தத் தீர்மானம் குறித்து, பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள்...

பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல்!! பாடசாலைகளுக்கு விடுமுறை!!

தெனியாய பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை குறித்துக் கண்டறிய, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு வரவுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுமித் மனதுங்க தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா...

இளைஞன் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!! துணிந்து செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!

பண்டத்தரிப்பில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞன் தாக்கப்பட்ட போது ஏராளமான பொதுமக்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்த்த போது அந்த பகுதியால் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துணிச்சலாக செயற்பட்டு, தாக்கப்பட்ட இளைஞனை காப்பாற்றியதுடன், தாக்குதல் நடத்தியவர்களை விரட்டிச் சென்று ஒருவரை மடக்கிப் பிடித்தார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளைஞன்...

லாஃப் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று புதன்கிழமை (07) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லாஃப் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகளாக, 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 545 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 6,245 ரூபாவாகும். 5 கிலோகிராம் எடையுள்ள சிறிய ரக...

விஜயின் வெற்றிக்கொண்டாட்டம்! யாழில் நபர் ஒருவர் உயிர்மாய்ப்பு!!

விஜயின் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இடம் பெற்ற மது விருந்தில் பகிடிவதைக்கு உள்ளான நபர் ஒருவரு தனது உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பழையைச் சேர்ந்த குடும்பஸ்த்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். தமிழக சட்ட மன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பெரு வெற்றிப்பெற்றுள்ளது. அதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் இளைஞர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு...

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் மே 19 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது. அதன்படி, பல்கலைக்கழக சேர்க்கை கையேட்டை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் பதிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் அதன்...

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழி: எலும்புக்கூடுகள் 254 ஆக உயர்வு

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி எட்டு நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து 249 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய தினம் (05 ஏப்ரல்) ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில்...

யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்குங்கள்!தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்!!

கச்சத்தீவை மட்டுமல்ல யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் தமிழக மக்கள் எங்களைப் பாதுகாப்பார்கள் என யாழ். மாவட்ட எம். பி அர்ச்சுனா இராமநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் வடக்கில் தீவுப் பகுதிகளில் மின்சார விநியோகம் இல்லாமை தொடர்பில் கேள்வியெழுப்புகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் அவர்...

குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதி மீட்பு!!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தையின் என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 4 என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 07 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (04) நடைபெற்றது. அதன்போது 4 என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம்...

கோப்பாய் விபத்தில் இரு இளைஞர்கள் பலி!!

கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று (4) நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் கரவெட்டி...

வடக்கில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

வடக்கில் உள்ள ஊழல்வாதிகள், மோசடியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் மாதங்களில் அவர்கள் கணிசமான வழக்குகளையும், விசாரணைகளையும் எதிர்கொள்வார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதினப் பேரணி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்....

WhatsApp ஆபாச காணொளி அழைப்பு மோசடி; பொது மக்கள் எச்சரிக்கை!

ஆபாசமான காணொளி அழைப்புகள் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய வாட்ஸ்அப் அடிப்படையிலான மோசடி குறித்து பொதுமக்களை எச்சரித்துள்ளதுடன், பயனர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT), கேட்டுக்கொண்டுள்ளது. CERT-இன் கூற்றுப்படி, மோசடி செய்பவர்கள் முதலில் போலி கணக்குகள் மூலம் தனிநபர்களில் சமூக ஊடக வலைப்பின்னல்களில் ஊடுருவி, பெரும்பாலும் முகநூலில்...

தையிட்டி விகாரை வீதி மீட்பு இனவாதிகளுக்கு தீனி!

தையிட்டி விகாரைக்குள் இருக்கும் வீதியை மீட்பதாகக் கூறி சிலர் இனவாதிகளுக்கு தீனி போடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் குற்றம் சாட்டியுள்ளார் தையிட்டி பகுதியில் ஊடகங்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய முயற்சித்த வேளை, காணி உரிமையாளர்கள் சிலருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் காணி அளவீடு...

சட்டவிரோத மணலுடன்பூநகரி பிரதேச சபை உழவு இயந்திரம் STF ஆல் கைப்பற்றப்பட்டது; சாரதி கைது

பூநகரி பிரதேச சபைக்குரிய உழவு இயந்திரம் ஒன்று அனுமதியற்ற மணலுடன் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு பூநகரி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும், கைது செய்யப்பட்ட சாரதியினையும் சட்டநடவடிக்கைக்காக நீதி மன்றில் முற்படுத்த பூநகரி பொலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜெயபுரம் பகுதியிலிருந்து அனுமதியற்றவகையில் மணலுடன் பயணித்த உழவு இயந்திரத்தினை...

மதுபோதையில் தகராறு: நண்பனை போத்தலால் தாக்கி கொலை செய்தவர் கைது!

யாழ். பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த தாக்குதலில் காயமடைந்த நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது நண்பர் ஒருவருடன் மது அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts