- Friday
- April 10th, 2026
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை பழிவாங்குவதற்காக , இளைஞனின் தம்பியான 14 வயதான சிறுவனை கடத்தி சென்ற ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார். மருதனார்மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞனின் 14 வயதான தம்பியை இருவர் கடத்தி சென்று இரகசிய...
அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து நேற்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும். இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு...
வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரை வடக்கு மாகாண அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக சாட்சிகளுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை என மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த...
வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரை, வடக்கு மாகாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக குறித்த மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பான ஏதாவது ஒரு முறைப்பாட்டுக்காவது அமைச்சர் சந்திரசேகரன் இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? என யாழ்.மாவட்ட பாராளுமன்ற...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம்...
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பரிசுகளை ஏற்கக் கூடாது மற்றும் நிதி ஏற்பாடுகளைச் செய்யக் கூடாது என்பது தொடர்பாக பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்குமான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார். தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்காகப் பல பொலிஸ் நிலையங்கள் அதிகாரிகளிடமிருந்து பணம் வசூலிக்கத் தயாராகி வருவதாகவும், வணிகர் சமூகத்தினரின் பங்கேற்புடன் புத்தாண்டு விழாக்கள்...
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது. சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய வைத்திய...
வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாணம் நகரங்களுக்கு இடையிலான ரயில் மற்றும் யாழ்ப்பாண இரவு நேர தபால் ரயில் ஆகியன இன்று முதலும், யாழ் தேவி ரயில் நாளை முதலும் தினசரி...
செம்மணி சிந்துப்பாத்தி மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழி தொடர்பிலான மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கான நிதி குறித்த பாதீட்டுக்கு இதுவரை நீதி அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என செவ்வாய்க்கிழமை (07) யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வெளிப்பட்டது. செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று (7) யாழ். நீதிவான் லெனின் குமார் முன்னிலையில்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (7) இரவு பதிவாகியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி...
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணற்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த கோபாலபிள்ளை கமலதாஸ் (வயது 39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணற்றுக்கு அருகில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அநாதரவான நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து தோட்ட உரிமையாளர் அப்பகுதியில் தேடுதல் நடாத்திய வேளை...
அனலைதீவு பகுதியில் நேற்றைய தினம் (07) துருப்பிடித்த நிலையிலான கைக்குண்டு ஒன்றும், துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அனலைதீவு பகுதியில் உள்ள காணி ஒன்றினை அதன் உரிமையாளர் நேற்றைய தினம் துப்புரவு செய்துள்ளார். இதன்போது, மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த குறித்த கைக்குண்டையும் துப்பாக்கியையும் அவர் அவதானித்துள்ளார். இது குறித்து ஊர்காவற்துறை...
சாவகச்சேரி, மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், பெண் ஒருவரை உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதி பங்குனித் திங்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெண்ணின் தாலிக்கொடி அறுக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில், பெருங்குற்றப் பிரிவு...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம், பூவாடை வீதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, குறித்த கிணற்றிலிருந்து விவசாயப் பயிர்களுக்கு நீர் இறைப்பதற்காகச் சென்ற விவசாயி ஒருவர், கிணற்றிற்கு அருகாமையில் பாதணி (செருப்பு) இருப்பதைக் கண்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர் கிணற்றினுள்...
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விசேட விடுமுறை முறையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த விசேட விடுமுறை முறைமை இரத்து செய்யப்படுகிறது. அரசாங்க ஊழியர்கள்,...
உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலைகள் நேற்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 அதிகரித்து, புதிய விலை ரூ. 4765 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. . ஒரு 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 அதிகரித்து, அதன் புதிய...
பண்டிகை காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது.உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால் அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்குவோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திக்குமாரகே தெரிவித்தார்.
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி...
அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கம் (GMOA), வியாழக்கிழமை (02) காலை 8 மணி முதல் மற்றொரு 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. சுகாதார அமைச்சகத்தால் பின்பற்றப்படும் சட்டவிரோத இடமாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் திங்கட்கிழமை (30) முதல் பெறப்படுகின்றன. மாணவர்கள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியும். பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் (www.doenets.lk) மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்...
Loading posts...
All posts loaded
No more posts
