- Monday
- July 13th, 2026
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்....
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையில், ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான ‘நம்பியோ’ இணையதளம், தனது 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின்...
நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...
நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை ஆராய்வதற்கும் நோக்கமாக "ஊராட்சி முற்றம்" எனும் ஒருங்கிணைப்புக் கூட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் பிரதான...
யாழ் நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ் பொலிசாரின் பங்களிப்புடன் வெளியேற்றபட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாத்துறை தலைவர் வைத்தியர் விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில்.. சுற்றுச் சூழலை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்...
சமகால சமூகத்தில் சிறுவர்களை இலக்கு வைத்து பல்வேறு நுணுக்கமான குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாக இலங்கை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தலில், அறிமுகமில்லாத நபர்கள், சிறுவர்களைத் தன்பால் ஈர்ப்பதற்காக இனிப்புகள், சொக்லேட், ஐஸ்கிரீம் அல்லது பல்வேறு விளையாட்டுப் பொருட்களைக் காட்டி ஆசை காட்டுகிறார்கள். இத்தகைய உணவுப் பொருட்களில் போதைப்பொருட்களையோ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை முன்றலில் நேற்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப்...
அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் நேற்றைய தினம் காலையில் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக...
சட்டபூர்வமான வருமான வழிமுறைகள் ஏதுமின்றி, திடீரென ஈட்டப்பட்ட பெருமளவிலான சொத்துக்கள் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) தங்களும் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சட்டவிரோத சொத்துக் குவிப்புகள் தொடர்பான...
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விடுத்த கோரிக்கையையடுத்து அவரது ஆசனம் இடமாற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த இராமநாதன்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் உட்பட இருவர் மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த விசாரணைக் காலத்தை மேலும் இழுத்தடிக்காது உடனடியாகத் துரிதப்படுத்துமாறு கோரி, இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் "பாலியல் வன்முறைகளுக்கு எதிரான...
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக இம் மாதம் - ஜூலை 13 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தி வீடுகள், பாடசாலைகள், தனியார், உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையாக சிரமதானப்பணிகளை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...
பாராளுமன்றில் சுயேட்சைக்குழு உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்சுனாவின் இருக்கையை மாற்றித் தருமாறு கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். இது தொடர்பில் அவர் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தில், தாங்கள் அறிந்தவாறு, பாராளுமன்றத்தில் எனக்கு இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், மாவட்ட...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச மாநாட்டினை நடாத்தவுள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,...
பலாலி இராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். மக்களின் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கினார். அதன்படி, பாராளுமன்ற...
வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...
2025(2026) கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மறுபரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலவகாசம் இன்றுடன் (08) நிறைவடைகிறது. கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி முதல் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததுடன், பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவரும் தாமாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வேறு வழிமுறைகள் ஊடாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள்...
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் (ATI - Jaffna) 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கணக்கியல் (HNDA), முகாமைத்துவம் (HNDM), ஆங்கிலம் (HNDE), தகவல் தொழில்நுட்பம் (HNDIT) மற்றும் பொறியியல் சார்ந்த (Civil, Electrical, Quantity Surveying) உயர்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளதாக , வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் கபிலன் போல் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் நேற்றைய தினம் (06) நடைபெற்ற ஊடக சந்திப்பின்...
Loading posts...
All posts loaded
No more posts
