மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றையதினம் இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான். அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு...

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன்...
Ad Widget

A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர்!!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் அவர் கூறினார். நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள் தித்வா...

யாழ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பண்ணை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞரை, இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடல்பகுதியில்...

பட்டதாரிகளை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவோம் – யாழ்,பல்கலை புதிய துணைவேந்தர்

பட்டதாரிகள் தொழில் தேடுபவர்களாக இருக்காது , அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும் அதற்கான வழிகாட்டல்கள் , பயிற்சிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தொடர்ந்து வழங்கும் என புதிதாக துணைவேந்தராக பதவியேற்றுள்ள தி. வேல்நம்பி தெரிவித்துள்ளார். யாழ் . பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும்...

அடுத்த மாதம் வரை கடும் வெப்பநிலை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ், சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி...

சிமெந்து விலையும் அதிகரிப்பு!!!

சிமெந்து விலையை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிமெந்து மூட்டை ஒன்றின் விலை 150 ரூபா முதல் 175 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கட்டுமானத் துறையில் மணல், கல் மற்றும் இரும்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலைகளும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உட்பட அனைத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை 11.00 மணி முதல் மீண்டும் அனைத்துப் பொதுச் சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று திங்கட்கிழமை (23) ஏற்பட்ட இந்தக் கணினி...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!!

கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள்...

யாழ்.ஒட்டகப்புலத்தில் 02 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் சுமார் 36 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 2 ஏக்கர் காணி நேற்று திங்கட்கிழமை (23) இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது. வசாவிளான் கிழக்கு (J/244) பகுதியிலுள்ள ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவ பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டள்ள காணிகளில் 02 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவத்தினர் விடுவித்துள்ளனர். குறித்த பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளில் 234.8...

யாழில் மீட்கப்பட்ட பெருமளவான எரிபொருள்கள்!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவான எரிபொருள்கள் ஞாயிற்றுக்கிழமை (22) மீட்கப்பட்டன. ஊரெழு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 4700 லீட்டர் டீசல், 800 லீட்டர் பெற்றோல் மற்றும் 400 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன யாழ். மாவட்ட குற்றதடுப்புபிரிவால் கைப்பற்றப்பட்டது. இதன்போது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர்...

அதிகரிக்கும் வெப்பநிலையால் சிறுவர்களுக்கு பாதிப்பு: நீர்ச்சத்து குறைபாடு தொடர்பில் வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் சிறுவர்கள் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்ப பக்கவாதத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வெப்பமான காலநிலையில் சிறுவர்களின் உடலில் நீர்ச்சத்து விரைவாகக் குறையக்கூடும்....

QR முறைமையில் இன்னும் சிக்கலா?

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel Pass) முறைமையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய உடனடி உதவிச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பதிவு செய்யும் போதோ அல்லது முறைமையைப் பயன்படுத்தும் போதோ எதிர்கொள்ளும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் மற்றும் தடைகளை விரைவாகத் தீர்ப்பதே இதன் நோக்கமாகும். அதன்படி, வாகனங்களைப் பதிவு செய்யும் போது...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணி மணிவண்ணன் கருத்து!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியை ஏற்றினார்கள் என விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்கு எமது பூரண ஆதரவினை தெரிவித்து , அவர்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கறுப்பு கொடியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர்...

Heat Stroke-லிருந்து தப்புவது எப்படி?

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தர். வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோட்டமின்மை போன்ற காரணிகளால் Heat stroke ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை...

இன்று முதல் ஒற்றை, இரட்டை எண்களுக்கு அமைய எரிபொருள் விநியோகம்!!

QR முறையின் கீழ் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்கும் போது, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக இன்று (19) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை ​பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் இரட்டை எண் அல்லது பூஜ்ஜியம் (0) ஆக இருந்தால் இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளிலும், ஏனைய...

யாழில் மாணவிகளை சமூக ஊடகங்களில் அவதூறு செய்த மாணவருக்கு நேர்ந்த கதி!

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாட்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின்...

விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை...

யாழில் வீதி விபத்து: சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் திங்கட்கிழமை (16) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி...

எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...
Loading posts...

All posts loaded

No more posts