- Friday
- June 26th, 2026
அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்,...
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவருமான மாண்புமிகு தொல். திருமாவளவன் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில், ஈழத் தமிழர்களின் இன விடுதலைக்கான பயணத்தில் கடந்த காலங்களிலும் தற்போதைய காலகட்டத்திலும் ஆற்றப்பட்டு வரும் முக்கியமான பங்களிப்புகளுக்காக...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசிய குற்றத்தில் , நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோரை வடமாகாண ஆளுநர், உப தவிசாளரின் பதவியை...
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது தொடர்பாக, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று வியாழக்கிழமை (25) அவ் அலுவலகத்தின் பிராந்திய ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வட மாகாணத்தில் பல வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கோரியும்...
தீவக வலய கல்விப்பணிப்பாளராக து.லெனின் அறிவழகன் அவர்கள் நேற்றைய தினம் (24.06.2026) புதன்கிழமை கடமைகளை தீவக வலயக் கல்வி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இவர் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றி இடமாற்றம் பெற்று தீவக வலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா.கிசோர், உள்ளூராட்சி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனைத் தூக்கி வீசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் வடமாகாண ஆளுநரால்...
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...
வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறு தனியார் பஸ் சங்கங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. நேற்று புதன்கிழமை (24) இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.இலங்கை செய்திகள் இதன்படி, அடுத்த ஐந்து நாட்களுக்குள்...
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள்...
உலக சந்தையில் ஒரு பெரல் கச்சா எண்ணெயின் விலை இன்று (25), 75 அமெரிக்க டொலரை விட குறைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கமைய இன்று ஒரு பெரல் WTI எரிபொருளின் விலை 70.05 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. மேலும் Brent வகை பெரல் கச்சா எண்ணெயின் விலை 73.32 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. இதற்கிடையில்,...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் காப்பகங்களாக முக்கிய மையங்களாக விளங்கும் காக்கைத் தீவு மற்றும் கல்லூண்டாய் கழிவு சேகரிப்பு நிலையங்கள் தொடர்பில் மாநகர சபை தொடர்ச்சியாக தன்னுடைய பொறுப்பற்றதன்மையினையும் அணுகுமுறையினையும் வெளிப்படுத்திவருவது என்பது மறுக்க முடியாத உண்மையுமாகும். இது மிகுந்த கவலையளிக்கும் விடயம். கடந்த 23ஆம் திகதி காக்கைத் தீவில் ஏற்பட்ட பாரிய தீ...
இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390...
கடந்த 22 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இவரின் இறப்புக்கு நீதி...
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமூலம் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் "சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்" (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைக்...
கிராம உத்தியோகத்தர்கள் இன்று (24) முதல் அனைத்து வகையான களப்பணிகளில் இருந்தும் விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில், எதிர்வரும் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையைப் பதிவு செய்து தொழிற்சங்க...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு என அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.வீ.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், அண்மையில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலியில் உள்ள...
Loading posts...
All posts loaded
No more posts
