அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதியால் செல்ல அனுமதிக்கப்படுவர்

கடந்த ஆண்டு (2024) இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி இன்று (16) முதல் திறக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி அலங்கார திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு செல்வதற்கான பாதை இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்து ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள்...

கிளிநொச்சி DCC கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அரச அதிகாரிகள்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை ஊழல்வாதி என கூறிய அர்ச்சுனா எம்.பியின் கருத்தால் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இருந்து  அரச அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் சந்திரசேகரன் மற்றுமு் எம்பிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி பதற்றமான சூழல் ஏற்பட்டது .அதனை அடுத்து  கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
Ad Widget

பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி!!

தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026: பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி அறிவிப்பு!  தியாக தீபம் திலீபன் ஞாபகார்த்த தமிழ்த் திறன் போட்டிகள் – 2026 இன் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய மட்டக் கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. திலீபன் ஆவணக்காப்பகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போட்டியில் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் அனைத்துத்...

பொதுச்சேவை பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை அறிவிப்பு!

வடக்கு மாகாண பொதுச்சேவையிலுள்ள குறிப்பிட்ட பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகள் - 2026 தொடர்பான அறிவித்தலை வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தலின்படி, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவி இடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026.07.28 ஆகும். விண்ணப்பம் கோரப்பட்டுள்ள...

காக்கைதீவில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அகற்றுமாறு பிரதேச மக்கள் போராட்டம்!!

யாழ்ப்பாணம், காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள்சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) காலை குறித்த போராட்டம் நடத்தப்பட்டது. மாநகர சபையின் கழிவு மீள்சுழற்சி மையம் காக்கைதீவு பகுதியில் அமைந்துள்ளது. தற்போது அங்கு மீள்சுழற்சிகள் இடம்பெறாமல் குப்பைகள்...

3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!!

மன்னார் மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரச நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்ததன் அடிப்படையில், ஒரே நாளில் 3 அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "சட்டம் அனைவருக்கும்...

விஜய் மற்றும் ஜனாதிபதி அநுர அரசு மீதான பழிவாங்கல் குற்றச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரன் பதில்!

சாது மிரண்டால் என்ன நடக்கும் என்பதை இலங்கை மக்களும், அண்மையில் தமிழ்நாட்டு மக்களும் செயலில் காண்பித்துவிட்டனர். இலஞ்ச ஊழலில் இதுவரையில் ஈடுபட்டவர்களை நாம் அடையாளம்கண்டு தண்டிப்போம் என்று கூறியே தற்போதைய தமிழக அரசும், இலங்கை அரசாங்கமும் மக்களின் ஆதரவைப் பெற்றது. இப்போது அன்று இலஞ்ச ஊழலில் ஈடுபட்டவர்களை இந்த அரசாங்கங்கள் அடையாளம்காண விளைந்தால், அவர்கள் பழிவாங்கலில்...

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...

இவ்வருட O/L விண்ணப்பதாரருக்கான முக்கிய அறிவித்தல்!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் விசேட தெளிவுபடுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 03 ஆம் திகதி ஆரம்பமான விண்ணப்பக் கோரல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில்,...

மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...

AI மூலம் பேஸ்புக்கில் பெண்களின் போலி கணக்குகள்: இலங்கையில் வெளிச்சத்திற்கு வந்த பாரிய மோசடி!!

இலங்கையில் பேஸ்புக் (Facebook) தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பெண்களின் பெயர்களில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட ஏமாற்று மற்றும் பணமாக்கும் வலைப்பின்னல் ஆய்வொன்றின் மூலம் முதன்முறையாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளரும் தகவல் ஆய்வாளருமான சஞ்சன ஹத்தொடுவ (Sanjana Hattotuwa) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கையில் இந்த அதிர்ச்சித்...

யாழ். சிறைச்சாலைக்கு மேலே ட்ரோன் பறக்க விட்டவர் கைது!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலாக நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் தெரியாத ட்ரோன் (Drone) ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டுப் பறந்ததால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் அதனை அவதானிப்பதற்குள் அந்த ட்ரோன் அங்கிருந்து மறைந்துள்ளது. இது குறித்து சிறைச்சாலை நிர்வாகம் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை...

போக்குவரத்து அபராதம் செலுத்துமாறு வரும் போலி தகவல்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப்...

பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: சமூக வலைத்தளப் பதிவுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும் இரண்டு வருட காலமாக தற்காலிக...

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு!!

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் நகராந்தர கடுகதி ரயில் சேவையை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மாத்திரம் வரையறுப்பதற்கு ரயில்வே நிர்வாகம் இதற்கு முன்னர் எடுத்திருந்த தீர்மானத்தை மாற்றி, இன்று (14) முதல் அதனை வழமை போல் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில் இயந்திரத் தொகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, இதற்கு முன்னர் செவ்வாய் மற்றும்...

யாழ்ப்பாணத்தின் தனித்துவமான சுவைக்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!

‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 உணவுக்கான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்தத் தரவரிசையில் முதலிடத்தை மெக்சிகோவும், இரண்டாம் இடத்தை இத்தாலியும், 3ஆம் இடத்தை ஸ்பெயினும் பெற்றுள்ளதுடன், இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உணவுக் கலாசார...

காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தான் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டனர்....

இலங்கை ஆசியாவில் முதலிடம், உலகில் மூன்றாமிடம்!!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கிடையில், ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான ‘நம்பியோ’ இணையதளம், தனது 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின்...

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...

நல்லூர் பிரதேச சபையின் “ஊராட்சி முற்றம்”

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை ஆராய்வதற்கும் நோக்கமாக "ஊராட்சி முற்றம்" எனும் ஒருங்கிணைப்புக் கூட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் பிரதான...
Loading posts...

All posts loaded

No more posts