பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுக்கும் எச்சரிக்கை!!

யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும், நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எனவே...

யாழ்ப்பாணத்திற்கு 3,700க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வருகை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (02) 3,729 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் எடுத்துவரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எரிவாயு விநியோகம் குறித்துத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், இன்று(03) 1,716 சிலிண்டர்களும், நாளை...
Ad Widget

மதியம் 2 மணிக்குப் பின் மழை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில்...

சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இன்று முதல் வழமைக்கு

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பிரதேச அலுவலகங்களிலும் எந்தவிதமான சாரதி அனுமதிப்பத்திர புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். அதன்படி, வேரஹெர பிரதான அலுவலகம் உட்பட...

வடமாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பட்டியல்!

வடக்கு மாகாணத்திற்கான அவசர தேவைகள் மற்றும் வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற பிரச்சனைகள் தொடர்பான பட்டியலை தயாரித்து ஜனாதிபதி செலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு ZOOM செயலி ஊடான கலந்துரையாடலில் ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநருக்கு பணிப்புரை விடுத்திருந்த நிலையில் பட்டியல் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தை விடவும் மன்னார், முல்லைத்தீவு,...

யாழில் இளைஞர் கொலையுடன் தொடர்புடைய 6 பேர் கைது!!

திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவத்துக்கு பின்னர் குறித்த கும்பல் வேன் ஒன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய வேன்,...

வடக்கில் அவசர வைத்திய ஆலோசனை மற்றும் சிகிச்சை உதவிகளைப் பெற தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்படுகின்றன என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா...

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு டிசம்பர் 25 வரை காலக்கெடு!

025 நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் பாதகமான வானிலை மற்றும் இயற்கை பேரிடர் சூழ்நிலை காரணமாக, பல சாரதிகள் தங்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை சரியான நேரத்தில்...

நயினாதீவுக்கான படகு சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவுக்கு பயணிப்பதற்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் படகு சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக தீவகங்களுக்கான கடல் வழி போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்பட்டன. இந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் சீரான காலநிலை நிலவுதானால் தீவகத்திற்கான கடல் வழி...

அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அறிவிப்பு!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் 2025 டிசம்பர் 8ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

முல்லைத்தீவு, நாயாறு பிரதான பாலம் வெள்ளப்பெருக்கு காரணமாக முழுமையாக உடைந்துள்ளது. இதனால், குறித்த வீதியினூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. பாலம் உடைந்ததன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு பகுதிக்கு, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு, முல்லைத்தீவிலிருந்து கோக்கிலாய் பகுதிக்குமான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு!

அல்வாய் கிழக்கை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலின் காரணாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூன்று நாள் தொடர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை , தாயார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

நெடுந்தீவு மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சிற்று காலநிலை காரணமாக கடற்போக்குவரத்து பாதிக்கப்படுள்ளதையடுத்து நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்கும்படி நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையை தொடர்ந்து பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதாக வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயாளிகளை உடனடியாக மாற்றம“ செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவுப் மக்கள் அனைவரையும்...

அவசர வானிலை எச்சரிக்கை..200 மி.மீ இற்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N மற்றும் தீர்க்கரேகை 82.6°E இற்கு அருகில்) மையம் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தத் தாழ்வு மண்டலம் வடக்கு நோக்கிச் சாய்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த...

யாழில் அனர்த்த உதவிக்கு 24 மணி நேர அவசர இலக்கம் அறிவிப்பு

சீரற்ற காலநிலையால் ஏற்படக்கூடிய அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னாயத்தங்கள் குறித்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று (26) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்ற இக் கலந்துரையாடலின் முடிவில், அனர்த்தத்தின் போது பொதுமக்கள்...

யாழில் இளைஞர் படுகொலை: அம்பாறை இளைஞர்கள் கைது!!

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில், அம்பாறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்கள் அம்பாறைப்...

யாழில் பொலிஸாரின் கெடுபிடி!!

மாவீரர் வாரம் நடைபெற்றுவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் புதன்கிழமையும் மாவீரர் நாள் நாளை வியாழக்கிழமையும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் அதற்கான அலங்கரிப்பு பணியில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை...

பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு அறிமுகம்!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் "டிஜிற்றல் ஶ்ரீலங்கா" செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக இலங்கையில் குற்றவியல் அல்லது போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்காகக் குற்றஞ்சாட்டப்படும், கைது செய்யப்படுபவர்களின் விபரங்களை உடனடியாகக் கண்டறிந்து விரைவாக நடவடிக்கை எடுப்பதற்கும், குற்றமற்றவர் எனின் அவரை விரைவாக விடுதலை செய்வவதற்கும் ஏற்ற வகையில் பொலீஸ் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டோர் கண்காணிப்புத் தகவல் அமைப்பு (Arrested...

இன்று முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு!

இலங்கையைச் சுற்றியுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்...

ஆசியர் சங்கம் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடளாவிய ரீதியான பணிபகிஷ்கரிப்பு!

எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை ஆசியர் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியான பணிபகிஷ்கரிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நேற்று (24) யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில்...
Loading posts...

All posts loaded

No more posts