- Wednesday
- May 20th, 2026
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கில் யாழ். பொலிஸ் நிலைய...
குடிநீர் போத்தலினுள் ஒருவகை மருந்துப்பொருள் கலக்கப்பட்ட நிலையில், அதனை பருகிய மாணவி மயக்கமடைந்த சம்பவமொன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த குடிநீர் போத்தலினுள் ஏதேனும் மருந்துப்பொருள் கலக்கப்பட்டிருந்ததை பாடசாலை ஆசிரியர் ஒருவர் உறுதிபடுத்திய போதிலும்,...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் பூதவுடலுக்கு வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். அன்னாரின் இல்லத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சென்ற முதலமைச்சர், உயிரிழந்த பாதுகாவலரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நல்லூர் வீதியில் நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை...
யாழில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்து, கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் இக்கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சி சேவை சந்தை முழுமையாக முடங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நகர் வீதிகளிலும்...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கனிய எண்ணெய் தொழிற்சங்க ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தலைநகர் கொழும்பில் எரிபொருள் நிலையங்களில் மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்...
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் இன்று காலை பொலிஸில் சரண் அடைந்துள்ளார். புங்குடுதீவுப் பகுதியைச் சேர்ந்த 39 வயதான செல்வராசா ஜெயந்தன் என்பவரே துப்பாக்கி சூட்டுப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்று தப்பி ஓடிய குறித்த நபரை பொலிஸார் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை அவர் தானாகவே...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றுகாலை 8 மணிமுதல் 24 மணி நேர வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மருத்துவபீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைகடத்த முயற்சித்தமை, வைத்திய சபையின் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் உள்ளிட்ட சில முக்கிய விடயங்களை முன்வைத்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக, அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர்...
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனைக் குறிவைத்து நல்லூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நீதிக்காகக் குரல் எழுப்பும் அனைத்துத் தரப்பினராலும் கண்டனம் வெளியிடப்பட்டு வருவதும், உண்மை கண்டறியப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கும் மேலாக, எதிர்வரும் காலங்களில் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறக்...
நீதிபதி இளஞ்செழியனின் செயற்பாடுகளை மழுங்கடிப்பதற்கு அல்லது அவரை இல்லாமல் செய்வதற்காகவே இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டு அவருடைய பாதுகாவலர்கள் இருவரில் ஒருவர் கொலை செய்யப்பட்டதுடன் மற்றவர் காயமடைந்தார். ஆனால் பொலிஸார் அவசர அவசரமாக துப்பாக்கிதாரியின் இலக்கு நீதிபதி அல்ல என கூறுவது பலத்த சந்தேகங்களை உருவாக்கியிருக்கின்றது என்று வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார். நீதிபதி...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.எம்.சபூர்தின் தெரிவித்தார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கண்டித்து நேற்று (திங்கட்கிழமை) மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸாரினதும் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி, மணற்காட்டுப் பகுதியில் அனுமதியற்ற வகையில் மணல் ஏற்றிச் சென்ற வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் என்ற...
படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கில் நீதாய தீர்ப்பாயத்தின் முன்னிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி பண்டார நேற்று (திங்கட்கிழமை) சாட்சியளித்தார். யாழ்.மேல் நீதிமன்றில் வித்தியாவின் படுகொலை வழக்கின் மூன்றாம் கட்ட விசாரணை நீதாய தீர்ப்பாயத்தின் முன் கூடியபோது, 52வது சாட்சியாக அரசபகுப்பாய்வு திணைக்களத்தின் சிரேஸ்ட பகுப்பாய்வாளர் திருமதி. பண்டார...
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து உரிய தீர்வு வழங்காமையால், நாளை நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தப்பிச் செல்லும்வேளை ஆற்றில் குதித்த நபர்களில் ஒருவரே இவ்வாறு நீரில்...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து வடக்கு மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய தினம் (திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பாடசாலைகளில் இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ள...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில், சிவில் உடையுடன் கூடிய இரண்டு விசேட விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் 30 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள்...
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு...
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு இளஞ்செழியன் அவர்களைக் குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அச் சம்பவத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கொல்ப்பட்டதுடன், நீதிபதி தெய்வாதீனமாக காயங்களின்றி தப்பியுள்ளார். அரசியல் அதிகாரம் மிக்கவர்களுக்கு எதிரான வழக்குகளிலும், பொலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளிலும் அரசியல் கட்சிகள் என்னும் போர்வையில் துணை இராணுவக்குழுவாக இயங்கியவர்களிற்கு எதிரான வழக்குகளையும் மிகத் துணிச்சலுடன்...
நல்லூர் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் உடலில் இருந்து 5 லீட்டர் இரத்தம் வெளியேறியமையாலையே மரணம் சம்பவித்ததாக யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நல்லூர் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்....
Loading posts...
All posts loaded
No more posts



