Ad Widget

விஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முந்தன்குமாரவெளி ஆற்றில் இன்று (திங்கட்கிழமை) சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தப்பிச் செல்லும்வேளை ஆற்றில் குதித்த நபர்களில் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts