- Monday
- May 18th, 2026
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் செய்யப்பட்ட, கண்புரைப் பாதிப்புக்கான சத்திரசிகிச்சையால், தனது உறவினரின் கண் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவரின் உறவினர்...
இலங்கையில், திங்கட்கிழமைகளில் இறைச்சி தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரியுள்ள நான்கு பௌத்த மற்றும் விலங்கு உரிமைகள் நிறுவனங்கள், வெசாக் வரும் மே மாதத்தில் விலங்குணவுகள் உண்பதை, சகல பௌத்தர்களும் தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன. அநகாரிக தர்மபால மனிதாபிமான நிறுவனம், விலங்குகளுக்கான தர்மத்தின் குரல், போதிராஜா நிறுவனம், இளைஞர் அகிம்சை இயக்கம் என்பவற்றின் தலைவர்களே, இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்....
முதலாவது 20 க்கு 20 போட்டியில் இலங்கையை எதிர்த்து ஆடிய பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி இலங்கை தமது துடுப்பாட்டத்தின் போது 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி...
திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஆட்பதிவு திணைக்களம் 45 வருடங்களின் பின்னர் புதிய தேசிய அடையாள அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தேசிய அடையாள அட்டைகள் நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இது ஸ்மார்ட் காட் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவரினதும் உடல் சார்ந்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே அடையாள அட்டைகளை...
தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணை வவுனியாவிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே தவிர அரசியல் தலையீடு அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (26) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கத்துக்கு மத்தியில், மலேரியா காய்ச்சலுக்கான அனோபிளிஸ் ஸ்ரெ பன்சி எனனும் நுளம்பும் அடையாளம் காணப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மக்களுடைய விழிப்புணர்வும், ஒத்துழைப்பும் இல்லாவிட்டால் டெங்கு மற்றும் நுளம்பு காய்ச்சல்களை பரப்பும் நுளம்புகளை கட்டுப்படுத்தவே இயலாது எனவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று (26) மாலை நடைபெற்ற...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர், 18 வருடங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார். கனகரத்தினம் ஜீவரட்னம் என்ற குறித்த அரசியல் கைதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எவ்வித வழக்கு விசாரணைகளும் அற்ற நிலையில், கடந்த 18 வருட காலமாக இவர் தடுத்துவைக்கப்பட்டிருந்ததோடு, ஆரம்பத்தில் திருகோணமலை...
முல்லைத்தீவு மக்களின் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி, மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணி, மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அளவிடுவதற்கு அரச அதிகாரிகள் சென்றுள்ளனர். இதனை அறிந்த மக்கள், முல்லைத்தீவு – பரந்தன் வீதியை மறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்....
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வீட்டுத் திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கவனவீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனவீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இடம்பெற்றது. “2016ஆம் ஆண்டு...
வடக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களால் கடமையாற்றியோரில் ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்க மத்திய கல்வி அமைச்சால் அனுமதிக்கப்பட்ட 182 பேரின் நியமனத்தை இந்த மாத இறுதிக்குள் வழங்க வடக்கு மாகாண சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்” இவ்வாறு வலியுறுத்தி சம்பந்தப்பட்ட தொண்டராசிரியர்கள் இன்று வடக்கு மாகாண சபைக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண சபையின் 105ஆவது அமர்வு...
கிளிநொச்சியின் வட்டக்கச்சி, இராமநாதபுரம் மாணவர்கள் பேருந்துகளில் பயணிக்கின்ற போது தொடர்ந்தும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதி மாணவர்கள் தனியார் கல்வி நிலையங்களிற்கு மாலை நேர வகுப்புக்களுக்கு சென்று வருகின்ற நிலையில், இவ்வாறான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் வட்டக்கச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் ஆகிய பகதிகளிலும் வன்னேரிக்குளம் ஸ்கந்தபுரம்,...
கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அளவீடு தொடர்பில் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, நில அளவீட்டின் போது, காணிகளை அடையாளப்படுத்துவதற்காக பொதுமக்கள் சிலரையும் அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். எனினும், தமக்குத் தெரியாமல் தற்போது இரணைதீவில் அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் செயற்பாடானது, தமது பூர்வீக பகுதியில் அடையாளம்...
யாழ். திருநெல்வேலியிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கண் புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டபோது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேரில், ஐந்து பேரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த தனியார் வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திரசிகிச்சை மேற்கொண்டவர்கள் ஒன்பது பேர், கிருமித் தொற்று...
யாழ்ப்பாண மணியந்தோட்டம், உதயபுரம் பகுதியில் இளைஞன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள், யாழ்ப்பாணத்துக்குச் செல்லவுள்ளனர். இந்த குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவால் நியமிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மணியந் தோட்டம், உதயபுரம் பகுதியில், அடையாளம் தெரியாத சிலர்,...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான தயசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், திடீர் விபத்து மற்றும் அவசர...
யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து ஒருதொகை வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன. 13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சிறப்பு அதிரடிபடையினரால் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு அரியாலைப்பகுதியில் நேற்று பாதுகாப்பாக...
வவுனியாவில் நேற்று காலை 10.30மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில், நேற்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் கெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார். வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த...
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ். ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலாளரால் அவருக்கான நியமனக் கடிதம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. அவரின் நியமனம் இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படைத் தளபதியாக பதவி வகித்த வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஓய்வு பெற்றதையடுத்தே, இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் இருபது வருடங்களில் தமிழ் மொழி மறைந்து தமிழிஸ் என்ற புது மொழி வழக்கத்திற்கு வந்துவிடும் நிலை உருவாகியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை வெளியிட்டுள்ளார். கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், முன்பு வானொலி ஒலிபரப்புக்களில் பேசப்படுகின்ற தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
