Ad Widget

முல்லை மக்களின் காணியை சுவீகரிக்க முயற்சி! : பரந்தன் வீதியில் மறியல் போராட்டம்

முல்லைத்தீவு மக்களின் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நில அளவீட்டு முயற்சி, மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது.

வட்டுவாகல் கடற்படை முகாம் அமைந்துள்ள மக்களுக்குச் சொந்தமான காணி, மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அளவிடுவதற்கு அரச அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இதனை அறிந்த மக்கள், முல்லைத்தீவு – பரந்தன் வீதியை மறித்து கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து, நில அளவீட்டு அதிகாரிகளுடன் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, நில அளவிட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளன.

தம்மிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவற்றை நிரந்தரமாக பறித்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சி தம்மை வெகுவாக பாதித்துள்ளதாக இம் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

Related Posts