கிளிநொச்சி விபத்தில் இருவர் பலி

கிளிநொச்சி-யாழ்ப்பாணம் வீதியில் ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், திங்கட்கிழமை மாலை 6:40க்கு இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ஆனையிறவு, தட்டுவாங்கொட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் (வயது 28), யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நல்லத்தம்பி துஷாந்தன் (வயது 36) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இறுதிப்போரில் சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுங்கள்! : பிரித்தானியா

இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், 300 நாட்களை கடந்துள்ளன. இந்நிலையில், இலங்கை...
Ad Widget

உள்ளுராட்சி சபைத் தேர்தல் பெப்ரவரி 10!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

சந்திரகுமாரை கூட்டமைப்பில் இணைத்தால் கட்சியை விட்டு வெளியேறுவதாக சிறிதரன் எச்சரிக்கை!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைத்தால் கட்சியைவிட்டுத் தான் வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எச்சரித்துள்ளார். தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக...

மக்களிடமிருந்து தப்பித்த வாள்வெட்டுக்குழு பொலிஸாரால் மடக்கிப்பிடிப்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அப்பகுதி மக்களால் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். யாழ். மக்களை அண்மைய காலமாக அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவினர், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்தனர். இதன்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து வாள்வெட்டுக் குழுவினரை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க...

முல்லைத்தீவில் ஒருவகை காய்ச்சல்: 9 பேர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்!

யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர...

8 விக்கெட்டுக்களால் இலங்கை தோல்வி: தொடர் இந்தியா வசம்

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியுள்ளது. பகலிரவு ஆட்டமாக விசாகப்பட்டனத்தில் தொடங்கிய நேற்றய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. எனவே, குணதிலக மற்றும் உபுல் தரங்க ஆகியோர்...

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிங்கள்: சீ.வி.விக்னேஸ்வரன்

கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை (உள்நாட்டு நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கிலோ மீற்றர்...

அளவெட்டியைச் சேர்ந்த பெண் கனடாவில் கொலை

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார் என ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். "கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மல வேர்ன் பகுதியில் அந்தப் பெண் உடலில் கடுமையான காயங்களுடன் மல்வேர்ன் வீதியில்...

யாழ். உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்!

யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது. சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குங்கள் : ஐ.நா

இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்...

தேர்தலுக்கு பின்னர் வேலையற்றபட்டதாரிகளுக்கு நியமனம்: ஆளூனர் உறுதி

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினர். கடந்த முறை வழங்கப்பட்ட பட்டதாரிகளது ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றிருந்த முறைகேடுகள் குறித்தும், எஞ்சிய பட்டதாரிகளின் நிலை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆளூனர்,...

யாழ்-கிளிநொச்சி குடிநீர் விநியோகத்திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 27கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி

ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம்...

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை

எதிர்வரும் சில நாட்களில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பமாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம். நாட்டின் பெரும்பாலான இடங்களில்; மழை பெய்யும்.என்று திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றறுக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகும் என்று...

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல்!!!!

வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கு கந்தையா அருந்தவபாலன் தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தயாரிப்பின் போது வேட்பாளராக முன்னர் நிறுத்துவதாக சம்மதிக்கப்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. அதனால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முரண்பட்டு கொண்டனர். முரண்பாட்டின் உச்ச கட்டத்தில்...

கடற்படையினரால் வீட்டுத்திட்டம் பறிபோனது: கவலையில் காரைநகர் மக்கள்

யாழ்ப்பாணம் காரைநகர் மடத்துவெளி மாதிரி கிராமத்தை கடற்படையினர் சுவீகரித்துள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கிடைக்கவிருந்த வீட்டுத்திட்டம் சங்கானை மாவட்ட செயலகப் பிரிவிற்கு உட்பட்ட மாதிரி கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான மடத்துவெளி மாதிரி கிராம மக்களுக்கு வீட்டுத்திட்டத்தை வழங்கவென, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 24 வீடுகளை...

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்தால் ஆண்மை நீக்கம்!

பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட வேண்டுமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் ஆமோதித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறிப்பாக, வேலியே பயிரை மேய்வதைப் போன்று வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஆசிரியர்களே துஷ்பிரயோகத்திற்கு...

அரியாலை படுகொலைச் சம்பவம்: STF அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் இரு அதிகாரிகளையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை, நேற்று (வியாழக்கிழமை) மீள நடைபெற்றதோடு சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் சந்தேகநபர்கள் அடையாளம்...
Loading posts...

All posts loaded

No more posts