இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளமை வரவேற்கத் தக்கது. இளைஞர்கள் விழிப்படைந்தால் குற்றச்செயல்களை முற்றாக கட்டுப்படுத்த முடியும்” இவ்வாறு வடக்கு மாகாண சிறப்பு பொலிஸ் பிரிவின் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார். குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் இளைஞர்களின் நடவடிக்கைக்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லையாயின் தனது கவனத்துக்கு கொண்டு...

மாடு கடத்தலைத் தடுக்கும் நடவடிக்யை மேற்கொண்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு திடீர் இடமாற்றம்!!

தீவுப் பகுதியிலிருந்து இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் கும்பல்களை இலக்கு வைத்து நடவடிக்கை எடுத்து வந்த ஊர்காவற்றுறை தமிழ் உப பொலிஸ் பரிசோதகர் பலாலிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றக் கட்டளை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அலுவலகருக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தீவகத்தில்...
Ad Widget

30 வருடங்களின் பின்னர் இரணைமடுவில் இருந்து குடியிருப்பு நோக்கி நீர்: விவசாயிகள் மகிழ்ச்சி

30 வருடங்களின் பின்னர் இரணைமடு குளத்திலிருந்து நீர், குடியிருப்பு பகுதிகள் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு குளத்தின் ஏற்று நீர்பாசண திட்டம் யுத்தத்தினால் முழுமையாக சேதமடைந்திருந்த நிலையில் அதன் புனரமைப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரணைமடு குளத்தின் அபிவிருத்திக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதியில் குறித்த ஏற்று நீர்பாசண...

போலி நியமனக் கடிதங்கள் மூலம் தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமனம்

போலி நியமனக் கடிதங்கள் மூலம் வட மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற நியமனக் கடிதத்தினை ஒத்த போலி நியமனக் கடிதங்களை தயாரித்து வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கு 63 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கான நூலக உதவியாளர்கள், முகாமைத்துவ ஊழியர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் என்ற பதவிகளுக்கே...

நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றிய கடற்படை

பருத்தித்துறை கடற்பிரதேசத்தில் வழித்தவறி தத்தளித்துக் கொண்டிருந்த 5 மீனவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த மீனவர்கள் கடலில் தளித்தளித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படை தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் அடுத்து 26 மைல்களுக்கு அப்பால் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலில்...

இந்­து, முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் ஜனாதிபதி செயற்­பட்­டி­ருக்­கின்­றார் – மாவை

இந்­துக்­க­ளுக்­கும், முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன செயற்­பட்­டி­ருக்­கின்­றார். இந்து விவ­கார பிரதி அமைச்சை முஸ்­லிம் ஒரு­வ­ருக்கு வழங்­கப்­பட்­ட­மை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நிச்­ச­யம் எதிர்க்­கும். அதில் மாற்­றம் செய்­யா­வி­டின் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான...

நல்லூர் போராட்டத்துக்கு அணிதிரள இந்துக்களுக்கு சைவ மகா சபை அழைப்பு!

இந்துமத விவகார பிரதி அமைச்சராக இந்து அல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமையை எதிர்த்து இன்று (13) புதன்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அரசால் இந்து மக்கள் அவமதிக்கப்பட்மையைக் கண்டித்து அகில இலங்கை சைவ மகா சபையால் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் சைவ சமயிகள்...

புங்குடுதீவு பகுதியில் ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்பு!

தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கி உள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். மற்றொரு சடலமும் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டது. அது தொடர்பில் சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்ளனர். மன்னார் கடலில் கடந்த வாரம் மீன்பிடிக்கச் சென்ற இருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தொழிலுக்குச் சென்ற...

காதர் மஸ்தானின் பொறுப்பிலிருந்து இந்துமத விவகார விடயதானத்தை நீக்கக் கோரி சுவாமிநாதன் அமைச்சரவைக்கு கடிதம்?

நேற்று பிரதி அமைச்சராக பதவியேற்ற காதர் மஸ்தானின் அமைச்சு விடயதானங்களிலிருந்து இந்து விவகார பிரிவை நீக்குமாறு தாம் அமைச்சரவையை கோரவிருப்பதாக இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இரண்டு ராஜாங்க அமைச்சர்களும், 5 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதன்படி, அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் மீள்குடியேற்றத்துறை, புனர்வாழ்வு, வட மாகாண...

காங்கேசன்துறை கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை!

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது- 65), டேவிட் ரேகன் (வயது – 22) ஆகிய இருவரையுமே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று முன்தினம்...

மக்களின் உணர்வுகளை வடக்கு மாகாணசபை புரிந்துகொள்ளவில்லை – கிழக்கு பல்கலை மாணவர்கள்

வடக்கில் பாரம்பரியமாக உள்ள சாதி அமைப்புக்குப் புறம்பாக புதியதொரு உயர்சாதி அமைப்பொன்று உருவாகியுள்ளது போல உள்ளது. அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அதனை நியாயப்படுத்தும் அல்லது பூசிமெழுகும் போக்கு வெளிப்படுகிறது என்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய்...

பாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை தவராசா திருப்பிக் கேட்டதால் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு மக்களிடம் இருந்து சேர்த்துக் கொண்டு வந்து தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால்...

அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சர் பதவியை வழங்கியிருக்கலாம் – சிவாஜிலிங்கம்

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் இந்து கலாச்சார அமைச்சின் பிரதி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இந்து கலாச்சார அமைச்சுக்கு ஓர் இந்துவை நியமித்திருக்காலம். அங்கஜனுக்கோ அல்லது விஜயகலாவுக்கோ மாற்றிக் கொடுத்திருக்கலாம். மஸ்தானுக்கு வேறு ஒரு பிரதி அமைச்சினைக் கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் 124...

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதம் 3 ஆயிரம் பேருக்கு மலேரியா இரத்தப் பரிசோதனைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாதாந்த 3 ஆயிரம் பேருக்கு மலேரியா தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி ம.ஜெயராஜா தெரிவித்துள்ளார். மலேரியாவை முற்றாக தடைசெய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை கிளிநொச்சி மாவட்டத்திலும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை...

இலங்கையில் முதன் முதலாக புதிய வகை எரிபொருள் அறிமுகம்

இலங்கை எரிபொருள் சந்தையில் புதிய எரிபொருள் வகையான யூரோ 4 (Euro 4) எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக பெற்றோலிய வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த எரிபொருளானது சுப்பர் டிசல் மற்றும் 95 ஒக்ரைன் பெற்றோலுக்கு பதிலாகவே யூரோ 4 எரிபொருள் அறிமுகப்படுத்தப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் இந்த எரிபொருள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என...

மணல் அகழ்வினைத் தடுக்க ஜனாதிபதிக்கு மகஜர்: வட.மாகாண சபையில் தீர்மானம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகளை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் அனுப்புவதற்கு வட.மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வட.மாகாணசபையின் 124வது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு சமர்பித்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் கருத்துத் தெரிவிக்கையில், “முல்லைத்தீவு...

விக்கியையும், சிவாஜியையும் அவமானப்படுத்திய வடக்கு மக்கள்? – தெற்கில் எதிரொலி

“கேர்ணல் ரட்ணபிரியபந்துவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் கண்ணீருடன் பிரியாவிடைக் கொடுத்த சம்பவமானது வட முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு கன்னத்தில் அறைந்ததைப் போன்ற செயற்பாடாகும்” என ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எளிய (வெளிச்சம்) என்ற அமைப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடத்திய ஊடக...

விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்க முடியாது!! – அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

விடுதலைப்புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மூலமாக போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகளின் குடும்பத்தாருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று...

இராணுவத்தின் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

இாணுவத்தின் யாழ்.மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிதமான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்ட்டுள்ள கண்புரை நோயாளரகளுக்கான இலவச சத்திரசிகிச்சைத் திட்டம் முதியோர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதமாகும் என கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.ரகுபதி தெரிவித்தார். பலாலி இராணுவ வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்களிப்புடன் கண்புரை நோயாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை...

தவராசா கோரிய பணத்துடன் மாகாண சபையில் கிழக்கு மாணவர்கள்!

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் திருப்பித்தருமாறு கோரிய 7 ஆயிரம் ரூபாவை அவரிடம் ஒப்படைப்பதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் வடமாகாண சபைக்கு வருகைத் தந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கமைய,...
Loading posts...

All posts loaded

No more posts