Ad Widget

காங்கேசன்துறை கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர்களைக் காணவில்லை!

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11) மாலை தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சின்னமணி இரத்தினசிங்கம் (வயது- 65), டேவிட் ரேகன் (வயது – 22) ஆகிய இருவரையுமே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொழிலுக்குச் சென்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை மாலைவரை அவர்கள் கரை திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடலில் அவர்கள் பயணித்த படகு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். கடற்படையினரின் உதவியுடன் மீனவர்கள் இருவரையும் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts