ஜனாதிபதி மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – சமந்தா பவர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாகவும், ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம்...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு சீல்

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு உணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்- மாநகரசபை சுகாதர பரிசோதகர்களால், சபை எல்லைக்கு உட்பட்ட குருநகர், வண்ணார்பண்ணை மற்றும் யாழ்.நகர் பகுதிகளிலுள்ள உணவகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது ஏழு உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவதனை கண்டறிந்து, அதற்கு...
Ad Widget

மஹிந்தவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள் என்னை வலியுறுத்தினர்: மனோ கணேசன்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையுமாறு புலம்பெயர் தமிழர்கள், என்னை வலியுறுத்தினார்களென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது,...

மகிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்த ஐதேக

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி நேற்றையதினம் சபாநாயகரிடம் கையளித்தது. பிரதமர் வெற்றிடம் காணப்படாத நிலையில் அரசியலமைப்புக்கு முரணாக பிரதமர் பதவியேற்றமை தொடர்பிலேயே மகிந்த ராஜபக்ச மீது நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்கியமைக்கான 2094/43இலக்க வர்த்தமானி அறிவிப்பு மற்றும் அமைச்சரவையைக்...

கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா? உடனடி விசாரணை நடத்தப்படும் என்கின்றார் நாமல்!

கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க....

வியாழேந்திரனின் கட்சி தாவலிற்கு 48கோடியா? மேலும் மூவர் அரசுடன் இணைய தயார்?

கூட்டமைப்பின் புளொட் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மஹிந்த அரசின் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிராந்திய அபிவிருத்திக்கான (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சர் எஸ். விஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளநிலையில் அவருடைய கட்சி தாவலிற்கு 48 கோடி கைமாறப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தவிர்ந்த மேலும்...

யாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப....

சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் – சம்பந்தன்

சட்டத்திற்கு அமைவாகவே பிரதமர் நியமிக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சி தலைவர்களுடனான கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்றத்தின் அதியுயர்தன்மையை உறுதிபடுத்த வேண்டியது கட்டாயமாகும். பழைய பிரதமரை பதவியில் இருந்து...

கூட்டமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனுக்கு அமைச்சுப் பதவி

பிராந்திய அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) பிரதி அமைச்சராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கலாசார அலுவல்கள், உள்நாட்டலுவல்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக S.B. நவீன்ன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இலங்கை...

மழையுடனான வானிலை இன்றும் தொடரும்

நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் சாத்தியமும் உள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது வடக்கு, வடமத்திய, கிழக்கு,...

சீனி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் குறைப்பு

சீனி உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்கள் மீதான தீர்வை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. சீனி மீதான சிறப்பு வரி 10 ரூபாவாலும் பருப்பு மற்றும் கடலை மீதான தீர்வை 5 ரூபாவாலும் உழுந்து மீதான தீர்வை 25 ரூபாவாலும் கோதுமைத் தானியம் மீதான தீர்வை 3 ரூபாவாலும் குறைக்கப்படுகின்றன.

ரணிலைத் தேடிச் சென்று சந்தித்தார் கோத்தாபய – மைத்திரியுடன் சஜித் பேச்சு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சில தினங்களுக்கு முன்னர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். எனினும் கோத்தாபய – ரணில் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்தத்...

மீண்டும் விவசாய பிரதி அமைச்சராக பதவியேற்றார் அங்கஜன்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அங்கஜன் இராமநாதனனுக்கு கடந்த அரசாங்கத்தில் வகித்த விவசாய பிரதி அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். அதன் படி...

எரிபொருளின் விலை அதிரடியாக குறைப்பு!

எரிபொருளின் விலை நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு அதிரடி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. அந்தவகையில், பெட்ரோலின் விலை 10 ரூபாயாலும், டீசலின் விலை 7 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் ஒரு லீட்டர் 155 ரூபாயிலிருந்து 145 ரூபாயாக குறைவடைகிறது. அத்துடன் டீசலின் விலை 123 ரூபாயிலிருந்து...

சம்பந்தனை மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல்!

இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமாறு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் தனது உத்தியோகப்பூர்வ...

எஞ்சிய முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் விடுதலை – நாமல் உறுதி!

பிரதமர் மஹிந்த – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலானபுதிய அரசாங்கம் முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வளிப்பதுடன் முன்னாள் போராளிகளுக்கான நிலையான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த உதவிபுரியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த...

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்- பொ. ஐங்கரநேசன்

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகப் போற்றப்படுகின்றது. அதேபோன்றுஇ வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும்...

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர் – பெண் சட்டத்தரணி

“யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் மீட்டதாக நீதிமன்றில் முற்படுத்துகின்றனர்” இவ்வாறு யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துத்துரைத்தார் சட்டத்தரணி மேனகா ஜீவதர்ஷன். யாழ்ப்பாணம் – கொக்குவில் தொடருந்து நிலையத்துக்கு அருகில் முச்சக்கர வண்டியில் ஆபத்தான சிறியரக வாள் ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில்...

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக வித்தியாதரனை தெரிவு செய்ய மகிந்த முடிவு?

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக தமிழரான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தேசித்துள்ளதாக மஹிந்தவுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து அறிய முடிகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த சகோதரியான நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருகுமார் நடேசனுடைய நெருங்கிய சகாவான சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரனை வட...

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவராக இருந்த செல்லத்துரை புருசோத்தமன் கடந்த 2008.11.01 ஆம் திகதி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தினை யாழ்.பல்கலை வளாகத்தில்...
Loading posts...

All posts loaded

No more posts