முல்லைத்தீவில் கடல் சீற்றம்: பல கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்தது

முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது....

விசாரணைக்காக முன்னாள் போராளிகளைத் துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும்: சீ.வீ.கே

விசாரணை என்ற பெயரில் முன்னாள் போராளிகளை துன்புறுத்துவதை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என வட.மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்தும் முன்னாள் போராளிகளை விசாரணை என்ற பெயரில் நான்காம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்தும் செயற்பாடானது கண்டிக்கத்தக்கது....
Ad Widget

போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் : விக்னேஸ்வரன்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர்...

யாழ் கலட்டி பகுதியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் – கலட்டி பகுதியில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ். கலட்டி சீனியர் ஒழுங்கையிலுள்ள வீடொன்றின் மீது இத்தாக்குதல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், இத்தாக்குதல் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனவும் யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பெற்றோல் குண்டுத் தாக்குதலில் வீட்டின் ஒருபகுதி...

ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கவே ரணிலுக்கு பதவி வழங்கினேன்: ஜனாதிபதி

நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயே ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “225 நாடாளுமன்ற உறுப்பினர்களும்...

புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (திங்கட்கிழமை) பதவியேற்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் கடந்த ஆறு வாரமாக நீடித்த நெருக்கடி நிலைமை நேற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இறுக்கமான தீர்மானத்திலிருந்து விலகி, நாடாளுமன்றின் பெரும்பான்மைக்கு இணங்க ரணில்...

வீதியைக் கடக்க முயன்றவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் வீதி­யைக் கடக்க முற்­பட்ட ஒரு­வரை வேக­மாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி­ய­தில் அவர் உயி­ரி­ழந்­துள்ளதாக யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் தெரி­வித­த­னர். யாழ்ப்­பா­ண நக­ரப் பகு­தி­யைச் சேர்ந்த முச்­சக்­க­ர­வண்­டிச் சார­தி­யான தன­பால் (வயது-45) என்­ப­வரே இவ்வாறு உயி­ரி­ழந்­துள­ளார். இந்நிலையில். இது தொடர்­பில் பொலி­ஸார் தெரி­விக்கையில், யாழ்ப்­பா­ணம் பண்­ணைப் பாலப் பகு­தி­யில் முச்­சக்­க­ர­வண்­டியை நிறுத்­தி­விட்டு...

புதிய பிரதமர் நியமனத்திற்கு இடமளித்து பதவி விலகினார் மஹிந்த!

புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து பதவி விலகலுக்கான ஆவணத்தில் மஹிந்த கையெழுத்திட்டுள்ளார். புதிய பிரதமரொருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு இடமளித்து தனது பதவியிலிருந்து விலகியதாக, இதனை தொடர்ந்து இடம்பெற்ற...

மஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பின்னர் தனது இராஜினாமா தொடர்பில் அறிவிப்பார் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினை தீர்ப்பதற்கு த.தே.கூ ஏன் நீதிமன்றம் செல்லவில்லை?

நாட்டில் ஐனநாயகத்தை பாதுகாப்பதற்காக எனக்கூறி நீதிமன்றம் சென்று நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளதாக தம்பட்டம் அடிக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற போது அதனைத் தீர்ப்பதற்கு ஏன் நீதிமன்றம் செல்லவில்லை என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஐனநாயகத்தை...

புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை

புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல்...

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை நேற்று மாலை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா...

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் – சிறிதரன்

அரசியல் ரீதியில் இராஜதந்திர அரசியலையே நாம் பின்பற்றுகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சிங்கள குடியேற்றம் தொடர்பில் அந்தந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்களிடம் தொடர்ந்தும்...

கூட்டமைப்பின் முடிவு தமிழ் மக்களுக்கு பயனற்றது என்கிறார் கஜேந்திரன்

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்மானத்தினால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கூட்டமைப்பு, ரணிலுக்கு வழங்கிய ஆதரவு...

ரணில் அதிகாரத்திற்கு வந்தாலும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவது சந்தேகம்: சுரேஸ்

ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்க தூதுவர், இந்திய...

மர்ம காய்ச்சலால் யாழ்.மாணவன் உயிரிழப்பு

யாழில்.மர்ம காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவனொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் விக்ரோரியா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சுழிபுரம் மேற்கை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விதுர்சன் (வயது 14) என்ற மாணவன் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த மாணவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் வீட்டுக்கருகிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை...

பேத்தை அபாயம் இலங்கைக்கு நீங்கியது!

“வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திராவை நோக்கி நகர்துள்ளது. அது அடுத்த 24 நான்கு மணித்தியாலயங்களில் ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனினும் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று வானிலை ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். இந்தப் புயலுக்கு பேத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத்...

நீதிமன்ற தீர்ப்பை ஜனாதிபதி மதிக்க வேண்டும் – சம்பந்தன்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதித்து நடக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகார நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம்...

மூவின மக்களுக்கும் ஜனாதிபதி துரோகமளித்துவிட்டார் – விஜயகலா

நாட்டில் உள்ள மூவின மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துரோகமிழைத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு ஓரிரு நாட்களில் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்பார் என்றும் அவர் கூறியிருந்தார். இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட விதம் அரசியலமைப்பிற்கு முரணானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றின் ஏழு நீதியரசர்கள் அடங்கிய குழாம்...

சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது – சுமந்திரன்

சட்டத்தை மீறி ஜனாதிபதியால் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை இன்றைய தீர்ப்பானது எடுத்து காட்டுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த அவர் தனியார் செய்திச்சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts