தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தரவுகளில் சிக்கல் – இராணுவத் தளபதி

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்...

கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை!!

இலங்கையில் கொரோனா வைரஸின் நான்காவது அலையை எதிர்கொள்ள பொதுமக்கள் முழுமையாக தயாராக இல்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் வைரஸின் மற்றொரு அலை உருவாக வாய்ப்புள்ளது என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார். இலங்கை விழிப்புடன் இருப்பதாகவும் உலக முன்னேற்றங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார். வைரஸை ஒழிக்க முடியாது என்பதை...
Ad Widget

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பு!!

நாட்டில் பாரிய அளவில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென்றால் செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றப் பின்னர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புபவர்களுக்காகவும் நாட்டை திறக்க...

மன்னாரில் 3 கத்தோலிக்க சொரூபங்கள் மீது தாக்குதல்!

மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது நேற்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள்...

சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை தொழிலாளர்களுடன் கலந்துபேசியே பரீட்சார்த்தமாக நடத்தப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை அப்பகுதி கடற்தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவாதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,...

வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவேன் – மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர்!

வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன் என மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார,...

தரம் 5 புலமைப்பரிசில், உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பில் அடுத்த வாரம் முடிவு!!

ஒக்டோபர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை ஒத்திவைப்பது குறித்த முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஒன்பது மாகாணங்களின்...

இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் விதமான கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள்

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பில் யாழில் கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கடந்த 2 வாரங்களாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில், கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை இந்த கட்சி ஒட்டி வருகின்றன. கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பிலுள்ள...

சீனாவின் கடலட்டைப் பண்ணை- அரசாங்கத்துக்கு சிவாஜிலிங்கம் முக்கிய அறிவிப்பு

கிளிநொச்சி பூநகரிப் பகுதியிலுள்ள சீனாவின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது...

தொடர்ந்தும் ஆபத்தில் யாழ்ப்பாணம்! மரணங்ளின் எண்ணிக்கையும் அதிகரிப்பு!!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா மரணங்களில் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதான மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். அத்தோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6ஆயிரத்து 15 ஆக அதிகரித்துள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்தோடு மாவட்டத்தில் தற்போது 3 ஆயிரத்து 604...

யாழிற்கு நன்னீர் திட்டம் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ்.மாவட்டத்திற்கான நன்னீரை பெற்றுக்கொள்ளும் திட்டத்தினை செயற்படுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இதுதொடர்பான கலந்துரையாடல் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. யாழ்.குடாநாட்டிற்கு நன்னீரை கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு...

தடுப்பூசி ஏற்றிய சுன்னாகம் பாடசாலை அதிபர் திடீர் உடல்நலக் குறைவால் மரணம்

யாழ்ப்பாணம் சுன்னாகம் ஸ்கந்தவரோதயா ஆரம்பப் பாடசாலை அதிபர் தயானந்தன் நேற்று முன்தினம் திடீர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கடந்த 9ஆம் திகதி ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டபோது அவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப் பட்டிருந்த அவா் திடீரென உயிரிழந்துள்ளார். இதேவேளை, யாழ்.குடாநாட்டில் 50 ஆயிரம் பேருக்கு 2 கட்டங்களாக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன....

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி த. மங்களேஸ்வரன் நியமனம்

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும்...

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மீனகம் இணையத்தளத்தை நடத்துவது நீங்களா எனவும் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத...

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம் ஆண்டு கட்டாருக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவரை கைதுசெய்ய இன்டர்போல் நீல நோட்டீஸ் அனுப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர் கட்டாரில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு...

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல்!!

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும். அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப்...

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை!!

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும்...
Loading posts...

All posts loaded

No more posts