Ad Widget

இயல்பு வாழ்வை மீட்டெடுக்கும் விதமான கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள்

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பில் யாழில் கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களாக யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில், கொரோனா விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை இந்த கட்சி ஒட்டி வருகின்றன.

கொரோனாவைத் தடுக்க எங்கள் பங்களிப்பு என்ன? என்ற தலைப்பிலுள்ள இந்தச் சுவரொட்டியில் முகக் கவசத்தை முறையாக அணிவோம், தனிமனித இடைவெளியைச் சரியாகப் பேணுவோம், கைகளை நன்றாகச் சவர்காரமிட்டுக் கழுவுவோம், இயல்பு வாழ்வை மீட்போம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts