தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை!!

கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு...

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் -புதிய அட்டவணை வெளியானது!

நாடளாவிய ரீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில்...
Ad Widget

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம்!

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத் தூண்டப்படுவார்கள் என்றும், அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்றும் அவர் கூறினார்.கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

இலங்கைக்கு 800 மில்லியன் டொலர் வழங்கிய ரஷ்யா – பயன்படுத்தாமல் விட்ட அரசாங்கம்

ரஷ்யாவிடமிருந்து உதவிகளை பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புகள் எதுவும் இதுவரை இலங்கை பயன்படுத்தப்படவில்லை என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை - ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் மற்றும் இலங்கை - ரஷ்ய நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நேற்று பிற்பகல் நடைபெற்றது....

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளர் அந்தஸ்து!!

உக்ரைனும் மால்டோவாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைன் மற்றும் மால்டோவாவை இக்கூட்டமைப்பில் சேர்வதற்கான வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen இது ஒரு வரலாற்று தருணம் எனவும், "ஐரோப்பாவிற்கு ஒரு நல்ல நாள்" என்று ட்வீட் செய்துள்ளார். "உங்கள் நாடுகள் எங்கள் ஐரோப்பிய...

ரஷ்ய தரப்பிடம் சிக்கிய பிரித்தானியர்களுக்கு மரண தண்டனை!!

உக்ரைனில் சண்டையிட்டதற்காக ரஷ்ய ஆதரவு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய நபருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு (DPR) என்று அழைக்கப்படும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் பிரித்தானியாவை சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகியோருக்கு மரண தண்டனை...

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி!!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள், இலங்கைக்கு சட்டரீதியாக பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார (electronic) வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கக்கப்படும் என்று கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் (22) ஜப்பான் செல்லும் 12 பேர் கொண்ட...

யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்காக மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசைகளில் காத்திருந்த வேளை , நல்லூர் பிரதேச செயலர் , தமது பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்க...

சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்! யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை!!

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், வட மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்குமான ஒரே ஒரு போதனா...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண- அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த 63 வயதுடை நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் தாமதமாகும் பெற்றோல் கப்பல்!

92 ரக பெற்றோல் 40,000 மெட்ரிக் தொன்னுடன் இன்று (23) காலை இலங்கையை வந்தடைய இருந்த கப்பல் சுமார் ஒரு நாள் தாமதமாகும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமைச்சர் கஞ்சன விஜேசேகர தன்னுடைய டுவிட்டர் பகுதியில் பதிவு ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றும் நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட...

அகதிகளை தடுப்பதற்கு இலங்கையில் அலாரம் பூட்டிய படகுகள்!

அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு சிறிலங்காவிலுள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது. இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகைதந்துள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு...

பஸ்ஸில் தவறவிட்ட பணத்தை மீட்டுக்கொடுத்த யாழ்ப்பாண பொலிஸார்!!

யாழ்ப்பாணம் சுன்னாகம் வழித்தடத்தில் பயணித்த பஸ்ஸில் பயணி ஒருவரினால் தவற விடப்பட்ட பணத்தினை போக்குவரத்து பிரிவு பொலிஸார் துரிதமாக செயற்பட்டு மீட்டு கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வங்கியில் 96 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு குறித்த பஸ்ஸில் மூதாட்டி ஒருவர் பயணித்துள்ளார். அவர் யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது...

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு...

குறைந்த விலையில் பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசல்! யாழில் ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர் தகவல்

இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெட்ரோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆய்வு கூட உதவியாளர் தெரிவித்துள்ளார். நவாலியினை சேர்ந்த செல்வராசா சுரேஸ்குமார் நேற்றைய தினம் அதற்கான செய்முறை விளக்கத்தினை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் எண்ணெய்/வேப்பெண்ணெய்,...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண் பதில் அதிபர் ஒருவருக்கு ஏற்பட்ட நிலை!!

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. அரச உத்தியோகத்தர்களிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும்...

ரஷ்யா பலத்த சேதத்தை சந்தித்துள்ளது – பிரித்தானியா உளவுத்துறை தகவல்

உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்ய மற்றும் ரஷ்ய ஆதரவு படைகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் போராளிகள் மட்டும் அதன் படையில் 55 வீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அண்டை நாடான லுஹான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றுவதில் ரஷ்யப் படைகள் கவனம் செலுத்தி, லைசிசான்ஸ்க் நகரைச் சுற்றி வளைப்பதை நோக்கமாகக் கொண்டதாக உக்ரேனியத்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : இறப்பு எண்ணிக்கை 280 ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஏராளமானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் நிலச்சரிவுகள் மற்றும் பல வீடுகள் சேதமடைந்தமையை காணொளிகள் காட்டும் அதேவேளை மீட்பு நடவடிக்கையும் தொடர்கின்றன. தொலைதூர பகுதிகளில், இருந்து ஹெலிகொப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதேவேளை...

தம்மிக்க பெரேரா எம்.பியாகப் பதவியேற்பு!!

பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பதவி விலகல் காரணமாக ஏற்பட்ட சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டார். பதவிப் பிரமாணம் செய்வதற்கு முன்னதாக, தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனத்தையும் வரி...

எரிபொருளுக்கு காத்திருப்பவர்களுக்கு நீராகாரம் வழங்குமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை!

எரிபொருளுக்காக நீண்ட வரிசைகளில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வடமாகாணத்திலும் மக்கள் மணிக்கணக்கில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்தி இருக்கிறார்கள். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகம்...
Loading posts...

All posts loaded

No more posts