பல மோசமான நோய்களால் பாதிப்பு – இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார்

பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

எரிபொருள் விநியோகம் யாருக்கு?? – முழு விபரம் இதோ!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போக்குவரத்து, சுகாதாரம், விமான நிலையங்கள், புகையிரதம், துறைமுகங்கள், முப்படைகள் மற்றும் விவசாய போக்குவரத்து போன்ற அத்தியாவசிய...
Ad Widget

எரிபொருளை இறக்குமதி செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

சுகாதார தொழிசங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!!

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இடைநிலை சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் உபுல் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் சிறுமி கடத்தல் விவகாரம் ; இருவர் கைது!! பொலிஸாருக்கு எதிராக பெற்றோர் ஆளுநரிடம் முறைப்பாடு!!

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால்...

அமெரிக்கா; டெக்சாஸில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து 46 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், லொறியிலிருந்து...

யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில்...

நாட்டில் தற்போது போதியளவு மருந்து கையிருப்பு இல்லை – அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக மக்கள் இந்த நேரத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசன்ன கொலம்பகே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

வடமராட்சி கிராமசேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த கிராம சேவகர்களால் நடாத்தப்படும் கவனயீர்ர்ப்பு போராட்டத்தில் கிராம சேவகர்கள் அத்தியாவசிய அலுவலர்களா?...

மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் வெளியாகின!

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய 0 முதல் 30 அலகுகள் வரையிலான வீட்டு மின்சார உபயோகத்திற்கான தற்போதைய மாதாந்த நிலையான கட்டணத்தை 150 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை மின்சார சபை 430 ரூபாயினை முன்மொழிந்திருந்தது. அத்துடன், 1 தொடக்கம் 30 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார...

உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!!

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில்...

அவுஸ்ரேலியா செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 47 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களில் 280 பேருக்கு அதிகமானவர்கள் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர்.

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்....

பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட பின்னரே தேர்தல்!- பிரதமர்

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்....

அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்றுவது தொடர்பில் அவதானம்!

அரச ஊழியர்களுக்கு தனியார் துறையில் பணி புரிவதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய இவ்வாறு தனியார் துறையில் பணி புரிய விரும்பும் அரச ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடயம்...

யாழில் பத்திரிகைகள் முடங்கும் அபாயம்!!

யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பத்திரிகைகள் முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக குறித்த பத்திரிகைகள் விநியோகத்தில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. பத்திரிக்கை விநியோக பணியில் ஈடுபடும் பணியாளர்கள் எரிபொருள் இன்மையால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதால் விநியோக பணிகள் பாதிக்கப்படவுள்ளன. அதனால் பத்திரிகைகள் முடக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. இது தொடர்பில் பத்திரிக்கை நிறுவன...

பேருந்துகளை தள்ளிக்கொண்டு வந்து பருத்தித்துறையில் போராட்டம்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இருந்து இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை தமது...

எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் பயணிக்கும் அருட்தந்தை!

யாழில் எரிபொருள் தட்டுப்பாட்டினால் குதிரை வண்டியில் தனது பயணத்தை அருட்தந்தையர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார். நாடு பூராகவும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அருட்தந்தை ஒருவர். தனக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள்காணப்படுவதன் காரணமாக குதிரை வண்டியில் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

வடமாகாண வைத்தியர்களின் சம்பளம் குறைப்பு!

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது வைத்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், வடமாகாணத்தில் அவர்களுக்கான சம்பளம் குறைக்கப்பட்டு முழுமையாக வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பல்வேறு நெருக்கடிகள் தற்போது நாட்டில் காணப்பட்டாலும் கூட அதை எதிர்கொண்டு வைத்தியர்கள் தங்களால் இயன்றவரை...

யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ளவர்களால் தாக்கப்பட்ட இளைஞன் பரிதாபச் சாவு!!

யாழ்ப்பாணம் மாநகர் மகாத்மா காந்தி (மணிக்கூட்டு) வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவ சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அழைத்து வரப்பட்டிருந்த சிலரே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாக அவரது ஊரவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உடனடியாக...
Loading posts...

All posts loaded

No more posts