Ad Widget

பல மோசமான நோய்களால் பாதிப்பு – இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார்

பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஷ்ய செல்வந்தர் ஒருவர் புடினுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்திருந்தார். எப்போது வேண்டுமானாலும், அவர் அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்படலாம் என்றும் புடினுக்கு எதிர் கோஷ்டியில் இருந்து சில தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், புடின் பார்க்கின்சன் முதலான பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. என்றாலும், அந்தக் கூற்றுகளுக்கு ஆதாரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.

இதேவேளை, பெப்ரவரியில் உக்ரைன் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய ஜனாதிபதியின் உடல் நலக்குறைவு தொடர்பான பரவி வருதம் வதந்திகளை தொடர்ந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகோவை சந்தித்த போது புடின் மேசையை இறுக்கமாக பிடித்துக்கொண்டது படமாக்கப்பட்டது.

பின்னர் மொஸ்கோவில் ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர் நிகிதா மிகல்கோப்பிற்கு பரிசு வழங்கும்போது புடின் கால்களை அசைக்காமல் இருந்தார்.

மே மாதம், டெலிகிராம் சேனல் ஜெனரல் எஸ்.வி.ஆர், அதிகாரிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸின் போது, ​​”கடுமையான நோய், பலவீனம் மற்றும் தலைச்சுற்றல்” போன்ற உணர்வின் காரணமாக, புடின் நாற்காலியில் இருந்து எழும்பும்போது பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts