Ad Widget

யாழில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்கின்றார் தம்மிக்க பெரேரா

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ், முதலீட்டு ஊக்குவிப்புச் சபை, கொழும்பு துறைமுக நகர்,பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகரை அண்டிய அபிவிருத்தித் திட்டம், குடிவரவு, குடியகல்வு திணைக்களம், கொழும்பு தாமரைத்தடாக முகமைத்துவ நிறுவனம்,டொக்னோ பார்க்க கம்பனி பிரைவட் லிமிட்டட் தகவல், தொழில்நுட்ப மையம், ஆகிய நிறுவனங்கள் குறித்த அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான வர்த்தமானியும் நேற்றிரவு வெளியிடப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related Posts