அலுகோசுப் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிலிடுவதற்கான அலுகோசு பதவிகளுக்கு சுமார் 150 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் நடைபெறுவதகாவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றும் நேற்று முன்தினமும் மூவர் கொண்ட குழுவொன்றினால் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டன. (more…)

பல்கலைக்கழக ஆசிரியர்களை விசேட பிரிவினராக வகைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உயர்கல்வி சேவைத் துறையொன்றை உருவாக்குவதற்குமான அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைச்சரவை நேற்;று அங்கீகாரம் அளித்துள்ளது. இதனால் தற்போது நடைபெறும்  பல்கலைக்கழக ஆசிரியர்களின் பகிஷ்கரிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. (more…)
Ad Widget

முன்னேஸ்வரம் ஆலய மிருகப் பலி விவகாரம்! வேறு சமய குழுக்கள் தலையிட வேண்டாம்! அகில இலங்கை இந்து மாமன்றம்

இந்து ஆலயங்களில் மிருகப்பலி செய்ய வேண்டாமெனக் காலத்துக்குக் காலம் நாங்கள் வேண்டுகோள் விடுத்து வந்திருக்கின்றோம். இது எமது சமயத்திற்கு ஒவ்வாத, ஏற்றுக்கொள்ள முடியாத பாவச்செயல் எனச் சுட்டிக்காட்டி வந்திருக்கின்றோம். என அகில இலங்கை இந்து மாமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. (more…)

பரந்தன் பகுதியில் மீண்டும் இராணுவப் பதிவுகள் ஆரம்பம்! மக்கள் அச்சம்!

பரந்தன் பகுதியில் இராணுவத்தினரின் பதிவு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் பயப்பீதி ஏற்பட்டுள்ளது.இப் பகுதியில் உள்ள வீடுகளுக்குப் பதிவுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும் ௭னவும் மறுநாள் தாம் பதிவுகளை மேற்கொள்ளப்போவதாகவும் கூறிச்செல்கின்றனர். (more…)

இன்னும் அமைக்கப்படவில்லை லிப்ற்; சிறுவர் விடுதியை ஆரம்பிக்க தடை யாழ்.போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் தெரிவிப்பு

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்குமாடிக் கட்டடத் தொகுதியின் நான்காவது மாடியில் சிறுவர்களுக்கான மருத்துவ விடுதியை ஆரம்பிப்பதற்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்து பல மாதங்களாகிவிட்டது.இருந்தபோதிலும், "லிப்ற்' அமைக்கப்படாததனால் குறித்த சிறுவர் மருத்துவ விடுதியை ஆரம்பிக்க முடியாதுள்ளது இவ்வாறு போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார். (more…)

அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை தத்துக் கொடுங்கள் ; அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை

கைதடி அரச சிறுவர் இல்லத்தில் உள்ள குழந்தைகளை குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு தத்துக் கொடுக்குமாறு அரச அதிகாரிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கைதடி அரச சிறுவர் இல்லத்தில் 31 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். அவர்களை பராமரிப்பதற்கு 7 பெண்கள் மாத்திரமே இருக்கின்றனர். (more…)

வலி.தென்மேற்கு தவிசாளரின் கோரிக்கையை அடுத்து பிரதேசசபைக் கட்டடம் பொலிஸ் பாதுகாப்பில்

வலி தென்மேற்கு பிரதேச சபையின் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வலி தென்மேற்குப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக புதிய கட்டடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கும் படியாக பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசனால் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. (more…)

வடக்கு கிழக்கில் இராணுவ வீடமைப்புக்கு சீனா 100 மில். டொலர்

வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவத்தினருக்கு வீடமைப்பதற்கு என சீனா 100 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும், இராணுவ நலன்புரித் திட்டங்களுக்கென இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவை போரால் பாதிக்கப்பட்ட இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய வருகிறது. (more…)

யாழிலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 58 பேர் கைது

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியிலிருந்து  சட்டவிரோதமாக படகுமூலம்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 58 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் இரு மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்தபின் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  இவர்கள் கடற்படையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரத்வத்தையின் பெட்டகத்தில் யாழ்.குடாநாட்டு மக்களின் நில ஆவணங்கள்?

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சரான காலம் சென்ற அநுருத்த ரத்வத்தையின் வங்கி பாதுகாப்பு பெட்டகத்தலிருந்து இரகசியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட எட்டுக் கோடி ரூபாவையும் குறித்த தனியார் வங்கியிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச நேற்று உத்தரவிட்டுள்ளார். (more…)

வட பகுதிக்கு அதிக வெளிநாட்டவர்கள் செல்கின்றனர்!- கோத்தபாய

இந்த வருட ஆகஸ்ட் மாதம் வரையில் இலங்கையின் வடபகுதிக்கு 31,500 வெளிநாட்டு கடவுச்சீட்டை கொண்டிருப்பவர்கள் பயணம் செய்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 2011 ம் ஆண்டில் இருந்து 51.400 பேர் வடக்குக்கு பயணம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 100 நாடுகளின் பயணிகள் இதில் அடங்குகின்றனர். (more…)

கைதடி மத்திய மருந்தகத்தை அகற்றி வடமாகாண சபைத் தலைமையகம் அமைக்கும் திட்டம்:

கைதடி மத்திய மருந்தகம் அமைந்துள்ள இடத்தில் வடமாகாண சபையின் தலைமையகம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதால் அந்த பராமரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடம் மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் இக்கைதடி ஆரம்ப மருத்துவ...

விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்: யாழ்.கொட்டடிப் பகுதியில் சம்பவம்

யாழ்.கொட்டடிப் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு அதிகாலை 1 மணியளவிலேயே விசேட அதிரடிப்படையினர் மீது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. (more…)

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி யமுனாநந்தாவின் வாகன விபத்து!

யாழ்.காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரிவைத்தியக் கலாநிதி யமுனாநந்தா பயணித்த வாகனம் விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.நேற்று வைத்தியர் தனது வாகனம் பழுதடைந்த நிலையில் பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தின் மற்றொரு வாகனத்தில் பயணித்துள்ளார்.இந்நிலையில் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அந்த வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானது. (more…)

நல்லூரில் நல்ல வருமானம்!; மாநகர முதல்வர் மகிழ்ச்சி

கடந்த ஆண்டிலும் பார்க்க இந்த ஆண்டு நல்லூர் உற்சவ காலத்தில் யாழ். மாநகர சபைக்கு 20 லட்சம் ரூபா மேலதிக வருமானம் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா. நல்லூர் உற்சவகால செயற்பாடுகள் இம்முறை முன்னைய காலங்களைவிட சீராகவும் சிறப்பாகவும் இடம்பெற்றி ருந்ததாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்துகூட தமிழ் மக்கள் நல்லூர் திருவிழாவுக்கு...

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள், 40 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா, சிவில் சமூக அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதில் பங்குபற்றினர்....

மக்களது செயற்பாடுகள் எம்மால் பாதிக்கப்படக் கூடாது இன்று முதல் அலுவலக செயற்பாடுகள் ஆரம்பம்; உடுவில் பிரதேச சபை தவிசாளர்

வலி தெற்கு உடுவில் பிரதேச சபைக்கான புதிய கட்டிடத்தில் இன்று அலுவலக செயற்பாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று திறக்கவிருந்த நிலையில் அதிகாலை குறிப்பிட்ட புதிய கட்டிடத்திற்கு; இனம் தெரியாத நபர்களினால் கழிவு ஒயில் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டது. எனினும் திட்டமிட்ட படி குறிக்கப்பட்ட நேரத்தில் ஊழியாகள் ,தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இனைந்து கட்டடத்தை...

புதிய பிரதேசசபை கட்டடம் கழிவு ஓயில் ஊற்றி பாழ்! – ஆயுதமுனையில் காட்டுமிராண்டித்தனம்

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச சபையின் பதிய கட்டித்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி முனையில் காவலர்களை கட்டி பற்றையில் போட்டுவிட்டு கட்டிடத்தின் மீது கழிவு ஒயில் ஊற்றியுள்ளார்கள். இன்று புதன் கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள்...

நாட்டின் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மூடப்படும்; கல்வி அமைச்சர் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடம் தவிர்ந்த மற்றைய அனைத்து பீடங்களும் காலவரையறையின்றி இன்று முதல் மூடப்படுள்ளதாக உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. யூலை 4ஆம் திகதி தொடக்கம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பணிப்பகிஷ்கரிப்பினை மேற் கொண்டு வருகின்றனர். கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிலையில் விடுதிகளில் உள்ள மாணவர்களை கட்டுப்படுத்துவதும்...

விரிவுரைகளை ஆரம்பியுங்கள் – யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் பல்வேறுபட்ட பணிப் புறக்கணிப்பால் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களது கல்விசார் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். (more…)
Loading posts...

All posts loaded

No more posts