- Tuesday
- April 7th, 2026
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். (more…)
தைப் பொங்கலுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் இதன்போது முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கு கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஜப்பானின் ஜெய்க்கா நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய மாடிக்கட்டிடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். (more…)
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் உள்ள உயர் கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருத்து தெரிவிக்கையில், (more…)
யாழ். நகரத்தில் வைத்திசாலை வீதியில் உள்ள வாகனத் தரிப்பிடங்களை அகற்றி அவற்றை பிறிதொரு இடத்திற்கு மாற்றுவதற்கு யாழ். மாநகர சபையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.பெரும்பாலும் யாழ். வைத்தியசாலை வீதியில் பெருமளவு வாகனத் தரிப்பிடங்கள் காணப்பட்டு வருகின்றது (more…)
இந்திய அரசாங்கத்தினால் யாழில் 12 கோடி ரூபாவில் அமைக்கப்படவுள்ள கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு விரைவில் இடம்பெறுமென்று யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார்.யாழ். மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். (more…)
நல்லூர்க் கந்தன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலரணை அகற்றுவதற்கு படைதரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை யாழ் மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். (more…)
இலங்கைக்கு அண்மையில் விட்டுவிட்டு வீசும் கிழக்கு நோக்கிய காற்று உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் முகில் மூடிய வானம் காணப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . (more…)
வடமாகாண ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பாக வடமாகாண ஆளுநரினால் அமைக்கப்பட்ட விசேட இடமாற்ற சபையின் கூட்டம் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றய தினம் நடைபெற்றது. (more…)
யாழ். கொடிகாமம், புத்தூர்ச் சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பரஹவத்த அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த வீவத்தாஹே நிஹால் (வயது 38) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார். (more…)
போரினால் பாதிக்கப்பட்டும் இடம்பெயர்ந்துமுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களின் திருத்தப்பணிகளுக்கென நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் - பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி (more…)
சினிமாத்துறையில் எப்போதுமே புதிய முயற்சிகளையும், புதிய விஞ்ஞான வளர்ச்சிகளையும் வரவேற்று ஆதரிப்பவர் கமல்ஹாசன். இவர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஸ்வரூபம் AURO 3D என்ற புதிய ஒலியமைப்பில் உருவாகிவருகிறது. மேலும் விஸ்வரூபம் படத்தை டி.டி.எச் சேவை மூலம் ஒளிபரப்ப முயற்சி நடக்கிறது. படம் வெளியாகும் அதே நாளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். (more…)
பல்கலைக்கழகங்களின் இராணுவ மயமாக்கலைத் தடுத்து நிறுத்த என்ன விலை கொடுக்கவேனும் தயாராக உள்ளோம். யாழ். பல்கலையில் அத்துமீறி செயற்பட்ட இராணுவத்தைக் கண்டித்தும் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தேசிய மாணவர் ஒன்றியம் நடத்திய துண்டுப் பிரசுரப் போராட்டத்தின் போது அதன் செயலாளர் அசங்கபுளேகொட தெரிவித்துள்ளார். (more…)
வல்வெட்டித்துறையின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை நகர சபைத் தலைவர் ந.அனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வாக்கெடுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட போது தலைவர் மட்டும் ஆதரவளித்த நிலையில் (more…)
இலங்கையின் தலைமை நீதிபதியை குற்றஞ்சாட்டி பதவி நீக்கம் செய்ய எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் தொடர்பில், நாடாளுமன்ற தேர்வுக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சிலர் நீதிமன்றத்தின் அறிவிப்பை ஏற்று தமது கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர். (more…)
கடந்த இரண்டு நாள் களில் நான்குபேர் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப் பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றுப் புதன்கிழமையும் நேற்றுமுன்தினம் செவ் வாய்க்கிழமையும் உடுவில், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு பேர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)
மண்டைதீவில் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலையைக் கண்டித்து இன்று பெரும் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டம் இன்று காலை மண்டை தீவு பிரதேச சபையின் உப அலுவலகத்துக்கு அண்மையில் நடைபெறவுள்ளது. (more…)
யாழ்.தேர்தல் மாவட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை விடக் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரத்து 948 பேர் புதிய வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர். (more…)
உயிரிழப்புகள் அதிகரிக்கும்போது விசாரணை செய்து சுகாதார அமைச்சுக்கு அறிவித்துத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகள் தொடர்பாக வைத்தியசாலைப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்கள் உரிய விசாரணை நடத்தவேண்டும். (more…)
அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. தடுத்து வைத்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் (more…)
Loading posts...
All posts loaded
No more posts
