த.தே.கூ தொடர்பில் சிங்கள மக்களை குழப்பவும் நாட்டில் பலர் உள்ளனர்; விக்னேஸ்வரன்

வடமாகாணசபையுடன் இணைந்து செயற்பட தயார் என அமைச்சர் பசில் கூறியிருந்த கூற்றில் நம்பிக்கை உள்ளது எனினும் விமல் போன்றவர்களது கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்பாரோ என்ற ஐயப்பாடும் எம்மிடம் உண்டு என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஊர்காவற்துறையில் தாக்குதல்

வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பயணித்த வாகனத்தின் மீது ஊர்காவற்துறை பகுதியில் வைத்து கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

காணி அதிகாரத்துக்கு தீர்ப்பினால் பாதிப்பில்லை – மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன்

காணி அதிகாரம் மத்திய அரசுக்குரியது என்று உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினால், மாகாண சபைக்குரிய காணி அதிகாரங்கள் பறிபோய் விடும் என்று எவரும் கிலேசம் அடையத் தேவையில்லை என்று மூத்த சட்டத்தரணி சி.வி.விவேகானந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மத்திய மாகாண சபையில் அமைந்துள்ள தோட்டக் காணி ஒன்று தொடர்பான வழக்கில், காணி அதிகாரம் மத்திய...

வடக்குக்கு பொலிஸ் அதிகாரம், பிள்ளையான் வலியுறுத்து!

வட மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.இவர் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே ஆட்சிக்கு யார் வந்துள்ளார்கள் என்பதை பார்க்காமல் இவ்வதிகாரங்கள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். “...

குடும்ப அரசியலுக்குள் கூட்டமைப்பு குதிக்கின்றதா?

மகிந்த இராஜபக்ச ,கருணாநிதி, காந்தி குடும்ப அரசியல்களினை பெரும்பாலும் மக்கள் பொதுவாக எதிர்த்தே வருகின்றனர். ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறேது என்று கேட்பது தமது இனத்தின் பரப்பரையினை குறித்தா அல்லது குடும்பங்களைக்குறித்தா என்ற கேள்விகள் காலத்துக்கு காலம் மக்களை சிந்தனையில் உதித்தவண்ணம் இருந்தாலும் ஏதோ சாட்டுக்களை முன்வைத்து அல்லது இயலாமையின் வெளிப்படையாக இது...

மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் – கமலேந்திரன்

மக்கள் ஆணையைத் துஷ்பிரயோகம் செய்தால், மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி. அமைப்பாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தள்ளார் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது. (more…)

“காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கே உரியன” – சம்பந்தன்

"காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கே உரியன. மத்திய அரசுக்கு இந்த அதிகாரங்கள் போகுமானால், சட்டத்தில் உடனடியாகத் திருத்தம் கொண்டுவரப் பட்டு அவை மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டும்'' (more…)

சட்டம், ஒழுங்குகள் அமைச்சின் செயலாளர் யாழ். விஜயம்

புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று வெளள்கிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளளர். (more…)

யாழ்.வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!- பணிகளை முடக்கும் நடவடிக்கை!- சுரேஸ் பா.உ.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 85 வைத்தியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முடக்கும் நடவடிக்கை, என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (more…)

கூட்டமைப்பின் வெற்றி முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சி

வடமாகணசபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள க.வி. விக்னேஸ்வரனுக்கு யாழ் முஹம்மதியா ஜீம்மா பள்ளி வாசல் பிரதம இமாம் மஹ்மூத் பலாஹி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். (more…)

முஸ்லிமுக்கு போனஸ் ஆசனம் தமிழ்க் கூட்டமைப்பு முன் மாதிரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கு கிடைத்த போனஸ் ஆசனத்தில் ஒன்றை முஸ்லிம் ஒருவருக்கு வழங்க முன் வந்துள்ளமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி வரவேற்றுள்ளார். (more…)

ஆளுநர் சந்திரசிறி தேர்தல் காலத்தில் வழங்கிய அதிபர் நியமனம்! யாழ். மேல்நீதிமன்றம் இடைக்கால தடை!

அரசியல் பின்னணியில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறியினால் செய்யப்பட்ட அரச நியமனமொன்றிற்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. (more…)

வைத்தியர்கள் இடம்மாற்றம் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் வருடாந்த இடமாற்றம் பெற்றுள்ள சுமார் 44 வைத்தியர்களை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பவானி பசுபதிராஜா விடுவிக்க மறுத்து வருவதால் (more…)

வடக்குமாகாணசபை மற்றும் கூட்டமைப்பு தொடர்பில் வதந்திகள்!

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பதவியை சம்பந்தன் அவர்கள் விக்கினேஸ்வரனிடம் கையளிக்கவுள்ளார் என்ற வதந்தியினை இணையத்தளம் ஒன்று பரப்பிவருகின்றது. அதில் எந்தவித உண்மையும் இல்லை என கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்திருக்கின்றன. மேலும் போனஸ் ஆசனங்கள் அமைச்சர் தெரிவுகள் தொடர்பிலும் வதந்திகைள் உலாவருகின்றன. அதற்காக சிலர் பொது அமைப்புகள் ஊடாக கூட்டமைப்பின் தலைமையிடம் சிபார்சுகளை அனுப்பிவருவதாக கூட...

புலமைப்பரிசில் பெறுபேறுகள் அடுத்த மாதம் வெளிவரும்!

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எச்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார். (more…)

இராணுவம் தாக்கியதாக அரச ஊழியர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட மாகாண சபைத் தேர்தல் தினத்தன்று இராணுவத்தினர் தன்னை அடித்துக் காயப்படுத்தியதாக அரச ஊழியர் ஒருவர் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். (more…)

கீரிமலை நகுலேஸ்வரத்தில் ஜனாதிபதிக்கு வாசஸ்தலம்!

மக்கள் மீளக் குடியமர்வதற்கு அனுமதிக்கப்படாத வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியினுள் ஜனாதிபதிக்கான வாசஸ்தலம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. அதன் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருணத்தை எட்டியுள்ளன. (more…)

வடக்கு மக்கள் அரசுக்கு துரோகம் செய்துவிட்டனர் :- பசில்

துப்பாக்கிக்கும் சயனைட் குப்பிகளுக்கும் பணிந்து போயிருந்த வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி, மக்கள் விருப்பப்படி வாக்களிக்கக்கூடிய ஒரு அமைதியான சூழலை நாமே அமைத்துக்கொடுத்தோம். (more…)

கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனங்கள்! ஒன்று முஸ்லிம் உறுப்பினருக்கு.. மற்றையது ஐவருக்கு பகிர்ந்தளிப்பு?

வட மாகாண சபை தேர்தலில் அமோக வெற்றியீட்டி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் ஒன்றை முஸ்லிம் பிரஜை ஒருவருக்கு வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அயூப் நஸ்மீன் என்பருக்கே அந்த தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று  வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்....

காணி அதிகாரங்கள் மத்திய அரசிற்கு மாத்திரமே

காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமே என உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காணி உரிமை தொடர்பில் பெருந்தோட்ட அமைச்சு தாக்கல் செய்த மனுவொன்றிற்கு தீர்ப்பு வழங்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்...
Loading posts...

All posts loaded

No more posts