இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி வீடுகள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் பணியிடங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்காக இராணுவம், பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது

முல்லைத்தீவு கொக்குதுடுவாய் மனித புதைகுழி தோண்டுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது. சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு...
Ad Widget

வீடுகளை உடைத்தெறிந்து முன்னாள் பெண் போராளியை தாக்கிய அதிகாரிகள்!!

முல்லைத்தீவில் வனவள திணைக்கள அதிகாரிகள், முன்னாள் போராளி உள்ளிட்டவர்களின் வீடுகளை உடைத்தெறிந்து பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட பகுதியில் கொட்டில்களை அமைத்து மக்கள் குடியேறியுள்ளனர். இந்நிலையில்...

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா! பகிரங்கமாக பைடன் வெளியிட்ட தகவல்

ரஷ்யா- உக்ரைன் போரில் நேட்டோ மீதான உக்ரைனின் ஒற்றுமைத்தன்மை குறைந்துவிடும் என புடின் நினைத்தது தவறானது என பைடன் தெரிவித்துள்ளார். லிதுவேனியாவின்- வில்னியஸ் நகரில் இடம்பெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,"போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் நேட்டோ மற்றும் உக்ரைனுக்கு இடையிலான உறவு நீங்கி விடும் என ரஷ்யா ஜனாதிபதி...

யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவு : புள்ளிகளின் அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா முன்னிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் பேரவையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரை நியமிப்பதற்கான சுற்றுநிருபத்துக்கு அமைவாகத் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்தவர்களின் தகுதி, தராதரங்களின் அடிப்படையில் திறமைப் புள்ளியிடலுக்காகப் பல்கலைக்கழகப் பேரவை...

மனிதப் புதைகுழி தொடர்பாக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சர்வதேச நியமங்களுக்கு அமைய அகழப்பட வேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டமொன்றில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என...

காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு : குளிர்பானங்களை வழங்கிய கடற்படையினர்!

மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. குறித்த எதிர்ப்புப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன், சிறிதரன், வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அப்பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில்...

ஒரு வருடம் கழித்துப் பழி தீர்ப்பு; மூவர் மீது வாள் வெட்டு

ஒருவருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பிரச்சினையொன்றுக்குப் பழிதீர்க்கும் விதமாக மூவர் மீது வாள்வெட்டுத்தாக்குதல் நடத்திய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர், வலந்தலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் இடையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப் பகுதியில் எரிபொருள் நிரப்புவது தொடர்பில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலை...

க.பொ.த உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!!

2033 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக பரீட்சையை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஓகஸ்ட்...

மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என...

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு: அணிதிரண்டு தடுக்க அழைப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்காக மேற்கொள்ளப்படவுள்ள காணி சுவீகரிப்பு நடவடிக்கையை தடுப்பதற்கு அனைவரையும் இன்றைய தினம் (12.07.2023) மண்டைதீவில் அணிதிரளுமாறு யாழ், கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் சிவஞானம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வேலணைப் பிரதேச...

மர்ம நபரால் பட்டப்பகலில் ரஷ்ய கடற்படை தளபதி சுட்டுக்கொலை!!

உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்ய கடற்படை தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய கடற்படை தளபதியான ஸ்டானிஸ்லாவ் (Stanislav Rzhitsky, 42) என்பவரே வெளியில் சென்றபோது மர்ம நபர் ஒருவரால் கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையில், ஸ்டானிஸ்லா கொலை தொடர்பில் நீல நிற தொப்பி அணிந்த நடுத்தர வயது ஆண் ஒருவரை தேடிவருவதாக ரஷ்ய...

தமிழ் நீதிபதிகள், சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் போராட்டம்!!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் செவ்வாய்க்கிழமை (11) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவரது கருத்தை கண்டித்து சட்டத்தரணிகள் முன்னெடுக்கும் போராட்டம் காரணமாக வடக்கு கிழக்கில் நீதிமன்ற...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடிதம்!

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இந்தியப் பிரதமருக்கான இக்கடிதத்தை யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் அக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் கையளித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாத இறுதியில் இந்தியாவிற்கு...

யாழ்ப்பாணம் – சென்னை இடையில் 16ம் திகதி முதல் தினமும் விமானசேவை!!

யாழ்ப்பாணம் - சென்னை இடையில் எதிர்வரும் 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் விமானசேவை முன்னெடுக்கப்படும் என இந்திய மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த வாரம் இடம்பெற்ற இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் வெளியிட்டிருந்த செய்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்....

பிரான்பற்றில் 4 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தி கொலை!

இளவாலை - பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்மீது கத்திக் குத்தும் நடாத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, படுகாயமடைந்த நபர் தெல்லிப்பழை...

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவது யார்? – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை கடல் பரப்பில் அத்துமீறல்களில் ஈடுபடுவது தமிழக கடற்றொழிலாளர்களே அன்றி, இலங்கை கடற்படையினர் அல்ல எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக வடக்கு கிழக்கின் சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக தலைவர்களுக்கும் – மக்களுக்கும் தெளிவுபடுத்த முன்வர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நெடுந்தீவு...

முல்லைத்தீவில் பெருமளவிலான வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு !!

நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு – அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 13 பெரிய பராக்களும் ஒரு சின்ன பராவும் 82 மில்லிமீட்டர் மோட்டார் குண்டுகள் 49 உம 60 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும், 6 ஆர்...

யாழ். மக்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு!!

யாழ்ப்பாணத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வடக்கு - தெற்கு என்ற பாகுபாடு இன்றி அரசாங்கம் முன்னெடுக்கும் குளோபல் ஃபேர்-2023 எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்...

வாக்னர் கூலிப்படைத் தலைவரை சந்தித்த புடின்!

வாக்னர் கூலிப்படைத் தலைவரை ரஷ்ய அதிபர் புடின் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாக்னர் குழுவினர் திடீரென புடினுக்கே எதிராக திரும்பிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதம் 29ஆம் திகதி, புடின், வாக்னர் கூலிப்படைத் தலைவரான பிரிகோஜினை சந்தித்ததாக கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்...
Loading posts...

All posts loaded

No more posts