- Wednesday
- May 20th, 2026
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று கொழும்பு ஆங்கில செய்தி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ்...
யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 483.06 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 செயற்றிட்டங்கள், 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுக்கு இடையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபாலை நீர் வழங்கலை செயற்படுத்த, 64.51 மில்லியன் ரூபாயும் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டத்திலிருந்து இன்பசிட்டி, சக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு நீர்வழங்க...
வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியான சேயா சந்தவமியின் கொலையுடன் தொடர்புடைய ஒப்புதல் வாக்குமூலமடங்கிய போலிப்பத்;திரத்தில், என்னை கட்டாயப்படுத்தி கைச்சாத்திட வைத்தார்கள் என்று 'கொண்டையா' என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த தெரிவித்துள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்காக அவரது தாயார் கையொப்பம் இட்டுள்ளமையால் அவரை விடுதலை செய்ய, கம்பஹா நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (23)...
இலங்கை பொலிஸார் குற்றவியல் கைதிகளை வழமையாகவே சித்திரவதை செய்து, முறையற்ற வகையில் நடத்துகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டித்துள்ளது. இது குறித்து அந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- பொலிஸ் அமைப்பை கண்காணிக்க ஒரு சுயாதீன அமைப்பை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும் பொலிஸாரின் துஷ்பிரயோகங்களை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கை...
"வடக்கில் மீண்டும் ஒருபோதும் ஆயுதப்போராட்டம் உருவாகாது. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வு காணாவிட்டால் ஆயுதப் போராட்டம் உருவாகலாம்'' - இவ்வாறு நாடாளுமன்றில் தெரிவித்தார் ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதான கொரடாவுமான அநுரகுமார திஸாநாயக்க. மேலும் புலிகளின் ஆயுதக் கொள்வனவு தொடர்பில் கே.பியை பகிரங்க நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...
வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள், பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலைசெய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை என்றும், உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அவ்வாறு நடைபெற்றது என்றும் கூறப்படுகின்றது. கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையையும் பரணகம குழு முன்வைத்துள்ளது." - இவ்வாறு வெளிவிவகார அமைச்சர்...
"ஐ.நா. தீர்மானம் வரவேற்கத்தக்கது. இதை ஏற்று அரசு பொறுப்புக்கூறவேண்டும். இதை நாமும் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். போரால் பாதிக்கப்பட்ட மக்களைப் புறக்கணித்துவிடமுடியாது. அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் கௌரவமாக வாழவேண்டும். இழப்பீடு வழங்கப்படவேண்டும். உண்மை கண்டறிப்படவேண்டும். இவற்றை செய்தால்தான் நல்லிணக்கத்துக்கான வழி திறக்கப்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்...
இந்தியாவின் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு முன்னாள் அரசால் (மஹிந்த அரசு) படையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது என்ற தகவலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்டார். 2005 ஆகஸ்டில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், முன்னாள் அரசால் புலிகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்துக்குமிடையில் தொடர்பிருக்கிறது என்றும் அவர் சபையில்...
கமலின் ‘தூங்காவனம்’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் கமலுடன் திரிஷா நடித்து இருக்கிறார். ராஜேஷ் செல்வா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கமல் அடுத்த படத்துக்கான ஏற்பாடுகளை தொடங்கி விட்டார். இளம் தாடியுடன் இருந்த...
தனுஷ் தயாரிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘நானும் ரௌடிதான்’. இதில் விஜய் சேதுபதி நாயகனாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்திருக்கிறார். அவை வருமாறு, கேள்வி: விஜய் பிடிக்குமா?...
நேற்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 10,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று...
கொண்டையா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் இவர் கைதாகி இருந்தார். குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா அந்த வழக்கில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் மீதுள்ள வேறு சில குற்றங்களுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் கம்பஹா நீதவான்...
இலங்கை சிறையில் வாடும் தமிழ மீனவர்கள் 87 பேரை விடுவிக்க வலியுறுத்ததி ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்பவர்கள் 10,000 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்த்திய, மாநில அரசுகள் மீனவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடுபத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த 39...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை வகிக்கிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8...
நடிகர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற விஷால் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் பாண்டவர் அணிக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகர் சூர்யா நேற்று தன் வாழ்த்தை பாண்டவர் அணிக்கு தெரிவித்துள்ளார். இதோடு மட்டுமில்லாமல், ராதிகா, சரத்குமார், ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துக்களை கூறியுள்ளார். ஏனெனில் சரத்குமார் பிரச்சாரத்தின்...
இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இன்று காலை விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொண்ட பின்னர் அவரை கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்ருவன் குணசேகர தெரிவித்தார்....
தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட கடற்படை சிப்பாயின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சக சிப்பாய் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அல்லைப்பிட்டி கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த பசற பகுதியைச் சேர்ந்த எஸ். பி.ஏ. லக்மல் ஜெயதிலக நேற்று முன்தினம் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்றும் அவரின் சடலம் யாழ்....
Yarl IT Hub அமைப்பால் கடந்த வெள்ளிக்கிழமை (16), சனிக்கிழமைகளில் (17) இடம்பெற்ற Yarl Geek Challenge இன் நான்காம் பருவகாலத்தின் வெற்றியாளராக வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தின் அணி ஒன்று தெரிவானது. வெற்றி பெற்ற வவுனியா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் Arduino வன்பொருள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதவொன்றில் கையால் தட்டும் கோலத்தின் மூலம்...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் ஐரோப்பிய பயணத்திற்கு தேவையான சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான காரணம் என்ன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் இன்று வெள்ளிக்கிழமை காலையில் காத்தான்குடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டடிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பு காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில், வீட்டில் வைத்து ஆசிரியரான தமிழ்நாட்டு மனோகரன் எனப்படும் கிருஷ்ணப்பிள்ளை மற்றும் அவரது மனைவி தயாளினி ஆகியோர் ஒரே நேரத்தில் சுட்டுக்...
Loading posts...
All posts loaded
No more posts
