- Wednesday
- June 10th, 2026
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இன்றைய தினம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற 235 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் 8.30 மணியளவில் ஆரம்பமாகி 5.30 மணி வரை இடம்பெறவுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவில் இருந்தும் காணாமல்...
நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் புதிய அரசாங்கமும் வடமாகாண சபையுடன் கலந்தாலோசித்து ஒத்துழைத்து செயற்படாமல், முன்னைய அரசாங்கம் போன்று தனித்து முடிவெடுத்து வடமாகாணத்தில் செயற்றிட்டங்களை செய்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடிகயில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது, வடமாகாண...
தனியார்துறை ஊழியர்களுக்கு, சம்பள உயர்வைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவரவுள்ளதாக தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, நேற்று வியாழக்கிழமை(10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இதற்கான சட்டமூலம், ஏற்கெனவே வரையப்பட்டுள்ளது என்றும் கூறினார். தனியார்துறை ஊழியருக்கான சம்பளத்தை 2,500 ரூபாயினால் உயர்த்துமாறு அரசாங்கம் கேட்டதற்கு,...
யாழ்ப்பாணம் பலாலியில் இராணுவத்தின் வசமுள்ள ஒரு தொகைக் காணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். 'சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவோம்' என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை மாலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும்...
"வடக்கில் அடையாளம் காணமுடியாத புலனாய்வுப் பிரிவினர்களால் மக்களின் உளநலம் பாதிக்கப்படுகின்றது'' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்தார். "முள்ளிவாய்க்காலில் கொலைகளைக் கண்டு சடலங்கள் மீதேறி தப்பித்த தமிழ் மக்கள் இன்று உளநல பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, வடபகுதிக்குத் தேவையான உளநல வைத்தியர்களை அரசு பெற்றுக்கொடுக்கவேண்டும்" என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்....
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் தாமதமின்றி உடனே விடுவிப்பது அரசின் தலையாய கடமையாகும். அவ்வாறு விடுவித்தால்தான் எமது நாட்டில் எமது ஆட்சியாளர்களிடையே மனித உரிமையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கம் உண்டென்று உணரக் கூடியதாக இருக்கும்." - இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு, சர்வதேச மனித...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போது நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சின் செயலாளர் மற்றும் 7 மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமித் தசநாயக்க ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை....
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், சர்வமத குழுவினர் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்துடன், கையெழுத்துப் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, யாழ். நகரப்பகுதியில் சர்வமத தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதேவேளை, யாழ். நகரப் பகுதியில் உள்ள ஜும்மா...
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் (HNDA) தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். கிருலப்பணை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே, பொலிஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அபராதம் செலுத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் 20க்கு இருபது போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று டியூநிடினில் (Dunedin) ஆரம்பமானது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து, முதலாவது...
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையைமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான மெலோடி பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இது படம் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இப்படத்தின்...
2002-ம் ஆண்டு போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். முன்னதாக, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த சல்மான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, ‘சல்மான்...
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்ற இப்படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமி தற்போது மீண்டும் புதிய படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக...
தமிழ் நாடு காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களும் நேற்று முன்தினம் இரவு பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களிடமிருந்து 1 படகு கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு - மெகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதி ஒருவர் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ். அச்சுவேலி வடக்கை சேர்ந்த இவர் கடந்த 8ஆம் திகதியில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவரது தந்தை ஜ.பி.சி செய்திக்கு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 37 வயதான சிவராஜா...
தமிழ் மக்களின் மனித உரிமையை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும், வடபகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவம் வெளியேறவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்திய வடமாகாண சபை உறுப்பினர்கள், இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10)...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா இன்று வியாழக்கிழமை (10) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், சங்கிலியன் பூங்காவையும் அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியையும் பார்வையிட்டார். இன்று மற்றும் நாளை வெள்ளிக்கிழமை (11) ஆகிய இரண்டு நாட்கள் வடபகுதியில் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்கின்றார்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் வேண்டும். அது சர்வதேச விசாரணையா?, உள்ளக விசாரணையா?, கலப்பு நீதிமன்ற விசாரணையா? என்பது தொடர்பில் தேவையற்ற விவாதங்களையும், கால இழுத்தடிப்புக்களையும் நாம் விரும்பவில்லை. விசாரணைப் பொறிமுறையானது, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற விதமாகவும் அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர்...
தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு, அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக இலங்கையில் இருந்து ஒரு வைத்தியர் குழு யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக ஏற்பாட்டில் தமிழ்நாடு செல்லவுள்ளது. வரும் ஞாயிறு 13ஆம் திகதி பின்னிரவு இலங்கையில் இருந்து புறப்படும் இந்தக் குழு திங்கள் 14ஆம் திகதி முதல் சென்னை...
வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை எவ்வாறு செலுத்த போகின்றோம் என்ற சவால்களுடன் பயணத்தை ஆரம்பித்ததாகவும் அமைச்சர் சபையில் குறிப்பிட்டார். நேற்று புதன்கிழமை பாராளுமன்றில் கடற்றொழில் நீர்வளத்துறை...
Loading posts...
All posts loaded
No more posts
