Ad Widget

விடுதலை செய்யப்பட்டதும் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டு அழுத சல்மான் கான்

2002-ம் ஆண்டு போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்துள்ளது மும்பை உயர்நீதிமன்றம். முன்னதாக, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த சல்மான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார்.

நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, ‘சல்மான் கானுக்கு எதிராக அரசு தரப்பிலும், மனுதாரர் தரப்பிலும் சமர்ப்பிக்கபட்ட ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறினார். மேலும் மும்பை செசன்சு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்கிறோம் என அறிவித்தவுடன் நீதிமன்ற அறையில் இருந்த சல்மான் குடும்பத்தினர் மற்றும் வழகறிஞர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

பார்வையாளர் பகுதியில் இருந்த சல்மான் சுவரில் சாய்ந்துக் கொண்டு ஒரு பாடலை முணுமுணுத்தப்படி நின்றார். பாடலை பாடி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அது முடியாமல் போகவே அழத் தொடங்கினார். இதனைப் பார்த்த அவரின் பாதுகாவலர் ஷேரா, சல்மானிடம் சென்று மக்கள் பார்க்காதவாறு சுவரை நோக்கி திரும்பிக்கொள்ளும்படி கூறினார்.

தீர்ப்பால மிகவும் மகிழ்ச்சியடைந்த சல்மானின் தங்கை அல்விராவால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அவர் செய்தியாளர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Posts