இந்தோனேஷியா தாக்குதல் சம்பவம்; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் நேற்று காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் தர்ஷன பெரேரா கூறியுள்ளார். இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவில் சுமார் 130 இலங்கையர்கள் வசிப்பதாகவும் அவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக எந்த தகவலும் இதுவரை இல்லை என்றும் அவர் எமது செய்திப்பிரிவிடம் தெரிவித்தார். இந்தோனேஷியாவின் தலைநகர்...

வடக்கு புகையிரத சேவைகளில் மாற்றம்

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு, கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த...
Ad Widget

யாழ் பிரதேச செயலகத்தில் பதிவுச் சான்றிதழ்கள் எடுப்பதற்கான விரைவுச் சேவை இல்லை!

யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகத்திலும் இணைய ரீதியில் விரைவாக பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாணப் பிரதேச செயலகம் மாத்திரம் அதனை தபால் மூலம் அனுப்பும் பழைய நடவடிக்கையை தொடர்ந்தும் பேணி வருகின்றது. சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள், பிரதேச செயலகம் சென்று தங்கள் விண்ணப்பத்தைக் கொடுத்து உடனடியாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் முறையானது பிரதேச...

விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தவணைப் பரீட்சைகளில் அதிக புள்ளிகள்!

பாடசாலைகளில் கல்வி பயிலும் ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டு நிகழ்ச்சியிலாவது பங்குபற்ற வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், விளையாட்டு மற்றும் உடல் நல அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்து பாடசாலைகளிலும் கட்டாய பாடமாக உள்ளடக்கப்படுவதோடு ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது ஒரு விளையாட்டிலேனும் பங்குபற்றி...

தமிழ்த் தொலைக்காட்சிகளின் ‘பொங்கல்’ சிறப்புப் படங்கள் : முழுப்பட்டியல்!

இந்த வருட பொங்கல் பண்டிகையின்போது, இந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சிறப்புத் திரைப்படங்களின் முழுப்பட்டியல். வெள்ளிக்கிழமை சன் டிவி காலை 11 மணி - சிங்கம் மதியம் 2 மணி - ஜில்லா மாலை 6 மணி - பாபநாசம் விஜய் டிவி மாலை 6 மணி - 10 எண்றதுக்குள்ள கலைஞர் டிவி காலை...

ஜப்பானில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்!

ஜப்பானின் ஹொக்காய்டோ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ளது ஹொக்காய்டோ தீவு. அந்த தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகியிருந்தது. ஷிசுனாய் நகரில் இருந்து தென்கிழக்கில் 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை...

நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது?

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி விசாரணைப் பிரிவு அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட கூடும் என தெரியவருகிறது. நாமல் ராஜபக்ஸவை கைது செய்வதற்கு தேவையான சாட்சியங்கள் தேவைக்கு மேலதிகமாக தயாராக இருப்பதாகவும் இதனை அரசியல் பிரச்சினையாக காட்டி அரசியல்...

பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடுங்கள்: – மார்க் ஸக்கர்பெர்க்

பேஸ்புக் பிறந்த நாளான பிப்ரவரி 4-ம் தேதியை நண்பர்கள் தினமாக கொண்டாடும்படி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் “பிப்ரவரி 4-ம் தேதி பேஸ்புக்கின் 12-வது பிறந்த நாள். இந்த ஆண்டு விழாவானது ஒரு சமூகமாக இணைந்து நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்தும்...

போர்க்குற்ற விபரங்களை அறிந்த ஜெனரலுக்கு இராஜதந்திரப் பதவி! – இராணுவத் தரப்புக்குள் பதற்றம்

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்துள்ள மேஜர் ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது இராணுவத்தினர் மத்தியில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே புலிகளுக்கு எதிரான போரில் இராணுவத்தினர் வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக...

மயில் மாளிகை தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கவிருந்த மயில் மாளிகையின் நீச்சல் தடாகம் மண் இட்டு மூடப்பட்ட போது, அதற்குள் தங்கங்களும் பணமும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விடயம் குறித்து விசாரணைகளை நடத்துமாறு, அம்மாளிகையின் உரிமையாளரான ஏ.எஸ்.பி.லியனகே, பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி, தனது நற்பெயரைக் காக்குமாறு மயில்...

கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்பு! – நீதிமன்றில் ஏற்றுக்கொண்டது கடற்படை

திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு அதிகாரியாக சேவைபுரிந்த கடற்படை சிப்பாயின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் வீட்டுத் தொலைபேசிகளுக்கு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை ஏற்றுக்கொண்டுள்ளது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளில் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கடற்படை முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை நீதிமன்றத்தில் வைத்து கடற்படை...

ஜனாதிபதியின் சிரேஷ்ட தலைமைத்துவ பண்புகளுக்கு இந்திய அரசு பாராட்டு!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காட்டும் சிரேஷ்ட தலைமைப் பண்புகளை எடுத்துக்காட்டும் மனப்பாங்கு தொடர்பாக இலங்கை மாத்திரமன்றி இந்திய அரசும் இந்திய மக்களும் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜயசங்கர் குறிப்பிட்டார். இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த...

யாழ் பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில்...

VAT மற்றும் NBT தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியன பாராளுமன்றில் அனுமதி பெறும் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ​2016ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் குறித்த வரிகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல கதை அமைந்தால் சரத்குமாருடன் நடிக்க தயார் – விஷால்

நடிகர் சங்க தேர்தல் பொதுத்தேர்தல் போன்று பரபரப்பாக பேசப்பட்டதற்கு விஷால் அணியினர் களம் இறங்கியதே முக்கிய காரணமாக இருந்தது. தேர்தல் முடிவுக்குபிறகு, ‘அனைவரும் இனி சமம்’ என்று விஷால் கூறினார். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர்... நடிகர் சங்க பொதுச்செயலாளராக நான் இருக்கிறேன். என்றாலும், சங்கம் வேறு, நடிப்பு தொழில்...

தணிக்கை குழு உறுப்பினராகும் கமல்ஹாசன்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் திறம்பட தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் கமல்ஹாசனையும் தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோல் பிரபல இயக்குனர்கள் ஷாஜி கருன், கவுதம் கோஷ் ஆகியோரும் தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிறார்கள். பிரபல டைரக்டர் ஷியாம் பெனகல்...

முல்லைத்தீவு பழம்பாசியில் பழப்பொதியிடல் நிலையம்

பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் முல்லைத்தீவு பழம்பாசிக் கிராமத்தில் பழங்களைப் பொதிசெய்யும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (11.01.2016) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார். விவசாய அமைச்சு முல்லைத்தீவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பழச்செய்கையை ஏற்றுமதி நோக்கில் ஊக்குவித்து வருகிறது. இளைஞர்களை ஒருங்கிணைத்து இளைஞர் விவசாயக் கழகம் உருவாக்கப்பட்டு, அதனூடாகப்...

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!

இன்று (13) நள்ளிரவு முதல் ஒரு இறாத்தல் பாணின் விலையை ஒரு ரூபாவினால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (12) இடம்பெற்ற சங்கத்தின் கலந்துரையாடலை அடுத்தே இம் முடிவு எடுக்கப்பட்டதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார். அதன்படி, தற்போது ரூபா 54 ஆக...

பணம் கேட்டால் எம்மிடம் சொல்லுங்கள்: ஆசிரியர் சங்கம்

தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது பணம் அல்லது நன்கொடை தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களென யாராவது கேட்டால் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. பணம் அல்லது நன்கொடை ஆகியவற்றின் ஊடாக பெற்றோரிடம் இலஞ்சம் வாங்கும் சகலருக்கும் எதிராக தமது சங்கம், நீதிமன்ற...

இலங்கை கிரிக்கெட் அணியினரின் நடத்தை குறித்து குற்றச்சாட்டு

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக மதுபான விருந்துகளில் கலந்து கொண்டமை மற்றும் அணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் போன்றன குறித்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் நியூஸிலாந்து அணியுடனான கிரிக்கெட்...
Loading posts...

All posts loaded

No more posts