- Saturday
- June 7th, 2025

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக,...

யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

பல்கலைக்கழகத்தின் மாணவிகளின் புதிய விடுதியில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் மின் ஒழுக்கு அல்ல. இருப்பினும் சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போது குறித்த விடுதியில் இருந்த மாணவிகளிற்கு மாற்று விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தினில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்திற்குப்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் விடுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.மின் ஒழுக்கினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

யாழ்பாண பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது....

யாழ்.பல்கலைகழக தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவ வழக்கு விசாரணை மாணவர்கள் பரஸ்பரம் சமாதானமாக செல்வதாக மன்றில் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டு உள்ளது. யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்வு கடந்த யூலை மாதம் 16ம் திகதி நடைபெற்றது. அந்நிகழ்வில், சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் இணைத்து...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி...

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த இந்த போராட்டம் ஊழியர்களுக்கு இடையே இருந்த சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு தவறுகளை திருத்தி செயற்படுத்த இரு மாத கால அவகாசம் கேட்டுள்ளதாக...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று இரவு ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சுவர்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் மாவீரர் நாள் நவம்பர் 27 யாழ் பல்கலைக்கழக சமுகம், மற்றும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் ஆயுதம் தரித்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மாணவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் பிறந்த தினத்தை கொண்டாடும் நோக்கில் மாணவர்கள் பலர் ஒன்றுகூடிய நிலையில், சுமார் இரவு 11 மணியளவில் திடீரென விடுதிக்குள் நுழைந்த பொலிஸார் மாணவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஏனைய மாணவர்களின்...

யாழ் பல்கலைக்கழகத்தின் இரு கலைத்துறை மாணவர்களின் உயிரிழப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பீடங்களின் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத் தலைவர் கே.றஜீவன் தெரிவித்தார். எவ்வாறாயினும் ஒரு மாத காலத்தில் நீதி கிடைக்காவிட்டால் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் பேராட்டத்தை ஆரம்பிப்பதாக அவர் கூறினார். கடந்த மாதம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கற்றச் செயற்பாடுகள், இன்று புதன்கிழமை (02) முதல் ஆரம்பமாகியுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம், 21ஆம் திகதி அதிகாலை, கொக்குவில், குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் தொடர்ச்சியாக வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் – மாணவர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டம் மத்திய அமைச்சர் சுவாமிநாதன் உடனான பேச்சுவார்த்தைகளின் பின் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து மதியம் 12.30 மணியளவில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று காலை விஜயம் செய்த மீள்குடியேற்ற இந்துமத சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையிலான குழுவினருடன் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்தைகளில் ஈடுபட்டனர்....

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார். இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தனர்...

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலிவடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை கையளிக்கவுள்ளதுடன் வலிவடக்கில் மேலதிகமாக 460ஏக்கர் காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்கவுள்ளார். கடந்த 26வருடங்களுக்கு முன்னர் வலிவடக்கு பகுதியில் இருந்து குடாநாட்டில் அப்போது காணப்பட்ட அசாதாரண நிலமையினால் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான...