பல்கலை ஊழியர் சங்கச் செயலாளரை காலால் உதைந்ததா பொலிஸ்?

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது ஏ9 வீதியை மறித்து போராட முற்பட்ட யாழ் பல்கலைக்கழக ஊழிய சங்க இணைச் செயலாளரை பொலிஸார் ஒருவர் காலால் தட்டிவிடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

”தமிழ் தலைமைகளே மௌனம் கலையுங்கள்” : கொதித்தெழுந்த பல்கலைக்கழக மாணவர்கள்

இலங்கை தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில், தமிழ் தலைமைகள் இனியும் மௌனம் காக்காது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, யாழ்.பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும், வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கை அநுராதபுரம்...
Ad Widget

யாழ். பல்கலையின் கவனயீர்ப்புப் போராட்டம்!

உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடனடியாகத் தீர்க்கக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வை வழங்கக் கோரியும் இன்று காலை 10 மணிக்கு யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இக்கவனயீர்ப்புப் போராட்டம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனுராதபுரம் சிறையில் உள்ள...

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு வவுனியா வளாக ஊழியர்கள் ஆதரவு!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதுடன், அவர்களது நீதியான போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் தலைவர் கே.பூங்கண்ணன், செயலாளர் எம்.முகுந்தகுமார் ஆகியோர் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”யாழ்....

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க வேலைநிறுத்தம் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியம் அறிக்கை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை (08.09.2017) தொடக்கம் வேலைப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர் ஒன்றியமானது பின்வருவனவற்றை அறிக்கையிட விரும்புகின்றது. ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட எமது பல்கலைக்கழகமானது இன்றுவரை பல்வேறு நெருக்கடிகளையும் எதிர் கொண்டு இயங்கி வருகின்றது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விரும்பத்தகாத சம்பவம் ஒன்று...

யாழ். பல்கலைக்கழக பெண் ஊழியர் மீது இரு அதிகாரிகள் தகாத செயல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பெண் ஊழியர் ஒருவருடன் தகாதமுறையில் இரு நிர்வாக அதிகாரிகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றிருந்தபோதும் இதுவரை குறித்த அதிகாரிகள் இருவர் மீதும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் செயலைக் கண்டித்தும் அவ்விரு நிர்வாக அதிகாரிகள் மீதும் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தியும்...

டெங்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இதுவரை அனுமதிக்கப்படவில்லை : யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

டெங்கு நோய் தொடர்பில்இதுவரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார். டெங்குத் தொற்றால் பல்கலைக்கழக மாணவனொருவன் இறந்ததைதையடுத்து யாழ்.பல்கலைக்கழத்தின் விஞ்ஞான பீடம் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து இது தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தியிடம்...

டெங்கு நோய் தொற்று காரணமாக யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவை சேர்ந்த மாணவரொருவர் டெங்கு நோயினால் மரணமடைந்துள்ள நிலையில் மேலும் 9 மாணவர்கள் டெங்கு நோயினால் பீடிக்கப் பட்டு யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக விஞ்ஞான பீடத்தை எதிர்வரும் மாதம் செப்டம்பர் மாதம் 04ம் திகதி வரை மூட யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ரத்னம் விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்...

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது.

செஞ்சோலை படுகொலையின் 11ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்றய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் இ. விக்னேஸ்வரன் உட்பட பல்கலைகழக கல்வி சார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டடம் நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் கட்டமைப்பு தொழில்நுட்ப பிரிவிற்கான புதிய கட்டிடத்தை அமைப்பதற்கும் , மருத்துவ பீடத்திற்கான 08 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபார்சின் பெயரில் அடிப்படையில் ஒப்பந்தங்களுக்காக முறையே 424.43 மில்லியன் ரூபாவும் மற்றும் 564.67 மில்லியன்...

வித்தியா கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றிலேயே நடத்த கோரி போராட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கை யாழ். மேல் நீதிமன்றத்திலேயே நடத்தக் கோரியும், கடந்த ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்களுக்கு நீதியை வலியுறுத்தியும் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரு விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் எதிர்வரும் 30 நாட்களுக்குள் உரிய பதிலை முன்வைக்க...

யாழ் பல்கலை மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு

இன்று காலை 11.30 அளவில் யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது. புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் விசாரணைகளை யாழ் மேல் நீதிமன்றில் நடாத்த கோரியும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரியும் மேற்குறித்த இரு விடயங்களுக்கும் அரசு 30 நாட்களுக்குள் உரிய பதிலை வழங்க வேண்டும்...

அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை!! ஆயரின் கருத்­துக்­களை வன்மையாகக் கண்டிக்கின்றேன் : ஆர்.விக்­னேஸ்­வ­ரன்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­வேந்­தர் பத­வியை நான் அர­சி­யல்­வா­தி­க­ளின் காலில் வீழ்ந்­து­தான் பெற்­றுக்­கொண்­டேன் என்று யாழ். ஆயர் கூறி­யி­ருப்­பது ஆதா­ர­மில்­லாத குற்­றச்­சாட்டு என்று நிரா­க­ரித்­தி­ருக்­கி­றார் புதிய துணை­வேந்­தர் ஆர்.விக்­னேஸ்­வ­ரன். ஆய­ரின் கருத்­தைத் தான் வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றார் என்­றும் அவர் தெரி­வித்­தார். புல­னாய்­வுப் பிரி­வின் அறிக்­கை­யின் அடிப்­ப­டை­யி­லேயே பேரா­சி­ரி­யர் சிறி சற்­கு­ண­ரா­ஜா­வுக்கு துணை­வேந்­தர் பத­வியை அரச தலை­வர் மைத்திரி­பால...

துணைவேந்தர் பதவிக்காக அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா?...

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக, விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் தமது கடமைகளை போறுப்பேற்றுக்கொண்டார். இது தொடர்பாக நேற்று பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையடுத்து புதிய துணைவேந்தர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன்!

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக தற்போதைய விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று காலை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயகோன் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பணியைத் தொடருமாறு பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்குப் பணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக் காலம் நாளை 23 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில் - புதிய துணைவேந்தர் நியமனம் தொடர்பான இழுபறிகளுக்கு மத்தியில், புதிய துணைவேந்தர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வரை பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தைத் துணைவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக...

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுதுள்ள செய்தி!

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.. 18.04.2017 தினசரியொன்றில் 'புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள்' என்ற தலைப்பில் வெளியான செய்தியொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாக சில விடயங்கள் வெளியாகியுள்ளன. மேற்படி விடயம் தொடர்பாக சங்கத் தலைவரோ அல்லது இணைச்செயலாளர்களோ பத்திரிகையில் வெளியிடும்பொருட்டு செய்தி எதனையும் வழங்கவில்லை என்பதோடு வெளிமாவட்ட மற்றும்...

யாழ். பல்கலையில் 353 விரிவுரையாளர்களுக்கு வெற்றிடம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் 353 நிரந்தர விரிவுரையாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே உயர்கல்வி அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”யாழ்.பல்கலைக்கழகத்தில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். ஸ்ரீசற்குணராஜா!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக தற்போதைய தொழில் நுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் இன்று இது பற்றிய உத்தியோக பூர்வ அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading posts...

All posts loaded

No more posts