இந்து கோவிலில் லண்டன் மேயர் சாதிக் கான்

பிரித்தானிய நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் டிரைவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஸ் டிரைவரின் மகனான சாதிக் கான்(45), தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையில் மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன்...

கணவரின் கைப்பேசியை அனுமதியின்றி மனைவி சோதனையிட்டால் சிறை!!

சவுதியில் அனுமதியின்றி கணவரின் கைப்பேசியை மனைவி சோதனையிட்டால் சவுக்கடி அல்லது சிறை என்ற புதிய சட்டம் அங்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனிமனிதரின் சுதந்திரத்தை இது பாதிப்பதாக கூறி வழக்கு தொடர்ந்தால் அது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என சட்ட வல்லூநர்கள் கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே புதிதாக அறிமுகப்படுத்தவுள்ள இந்த சட்டம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான...
Ad Widget

உகண்டாவில் பதற்றம், மஹிந்தவுக்கு அதிவிசேட பாதுகாப்பு!

உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவருடன் உகண்டா சென்ற கல்கிஸ்ஸ நகரபிதா தனசிறி அமரதுங்க தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியாக யொவேறி முசவேனி பதவியேற்புடன் அந்நாட்டில் பதற்றநிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போதே, மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நகரபிதா கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின்...

இளம் கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டு கொலை!

வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...

10 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

போலிக்கடவுச் சீட்டுடன் பத்து இலங்கையர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய காவல்துறையினர் நடத்திய சுற்றி வளைப்பில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பத்து பேர் இலங்கையர்களாவர். போலி கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி மலேசியா வழியாக ஜெனீவா பயணிக்க முயற்சித்த இலங்கையர்களே கைது செய்யப்பட்டனர். கோலாலம்பூர் விமான நிலையத்தில் கடமையாற்றி வரும் மலேசிய குடிவரவு திணைக்கள அதிகாரிகள்...

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், சிறீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையினரால் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் உரையாற்றும்போது, நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போதுதான் போர்க்குற்றம்...

பேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை

உங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதனை வலியுறுத்த தனது குழந்தையின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்யும் பெற்றோர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் சிறைத்தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்குமாறு ஒரு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து தனது சிறுவயது புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யு வகையில் அந்தச்...

நடேசனின் மகன் பிரித்தானியா பாராளுமன்றில் சாட்சி

வெள்ளைக் கொடியோடு சென்று சிங்கள ராணுவத்திடம் சாரணடைந்த, நடேசன் படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் நடேசனின் மகன் பல பிரித்தானிய MP க்களுக்கு முன்னதாக முதல் தடவையாக சாட்சியம் அளித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்றும். இலங்கை ராணுவம் தனது அப்பாவை கொலைசெய்தது என்ற உண்மையை அவர்...

ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி

ஈராக்கில் அன்பர் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தற்போதைய முக்கிய தலைவர்களில் ஒருவரும், ஈராக்கில் இயங்கி வந்த அல்-கொய்தா அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான அபு வஹீப், அன்பர் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட வான்தாக்குதலில் கொல்லப்பட்டதாக பென்டகன் மேலும்...

தொழில் நுட்பத்தின் உதவியுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடி

தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம்...

பாகிஸ்தான் பேருந்து ஓட்டுநரின் மகன் லண்டன் நகரின் மேயரானார்

பாகிஸ்தான் நாட்டில் பேருந்து ஓட்டுநராக  பணியாற்றியவரின் மகன் லண்டன் நகரின் புதிய மேயராக நியமிக்கபட்டுள்ளார். முஸ்லீம் ஒருவர் இந்த பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுதான் முதல் முறையாகும். லண்டன் மேயருக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்ற நிலையில், தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான், கன்சர்வேட்டிவ் சார்பில் போட்டியிட்ட ஜாக் கோல்ட்ஸ்மித்தை விட சுமார் ஒன்பது...

10 ஆண்டுகளின் பின் வானில் நிகழவுள்ள அபூர்வம்!!

10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த...

அமெரிக்காவில் முதன் முறையாக தமிழ் தொலைக்காட்சி துவக்கம்!!

அமெரிக்காவின் தலைநகரமான வாஷிங்டனில் இன்று முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து ஒளிபரப்பாகக் கூடிய வகையில் 'அமெரிக்கத் தலைநகரில் தமிழ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி துவங்கப்பட்டது. குளோபல் டெலிவிஷன் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தின் வாயிலாக இத் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பப் படுகிறது. மேரிலாண்ட் மாநிலத்தின் வெளியுறவுத் துறை இணைச்செயலராகப் பணியாற்றி, தற்போது அம்மாநில போக்குவரத்துத் துறை ஆணையராகப் பதவி...

இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் பலர் சுட்டுக்கொல்லப்படலாம்

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் பெரிய குற்றமாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சிக்குகிறவர்களுக்கு அங்கு தயவுதாட்சண்யமின்றி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அங்கு மயூரன் சுகுமாரன் என்ற ஆவுஸ்திரேலிய தமிழர் உள்பட போதைப்பொருள் கடத்தில் வழக்கில் சிக்கி மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேர் ஒரே நேரத்தில் நுசகம்பங்கன் தீவு சிறையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இது...

மனிதர்கள் வாழக்கூடிய 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுதியுள்ள 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் சுற்றித்திரியும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுந்த 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு...

கனடாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் பரிதாப பலி!

வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர்கள் இருவர் படகில் பயணித்தவேளை பரிதாபமாக அகால மரணமாகியுள்ளனர். கனடா ஒன்ராரியோவில் உள்ள ஈகிள் பார்க் நீர்ச்சுணையில் படகுப் பயணம் சென்று கொண்டிருந்தவேளையே இப் பரிதாபம் நிகழ்ந்துள்ளது. உறவினர்களான 7 இளைஞர்கள் இப் படகுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த போது படகு கவிந்து மூழ்கியதில் இரு இளைஞர்கள்கள் உயிரிழந்துள்ளனர். 24...

இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்கா முக்கியத்துவம்!

இலங்கையுடனான உறவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூடுதல் முக்கியத்துவம் வழங்குகின்றார் என்று ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமெரிக்க - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு பேரவை மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் உலகின் வேறு எந்த நாடும்...

சுட்டெரிக்கப் போகிறது ‘எல் -நினோ’! மூழ்கடிக்க வருகிறது ‘லா -நினோ’!!

ஆசிய நாடுகளை வாட்டியெடுத்து வரும் வெப்ப சலனத்தின் (எல்-நினோ) தாக்கம் இந்த ஆண்டு மத்தியில் குறைந்தாலும், அதனைத் தொடர்ந்து வரும் 'லா -நினோ' சலனம் காரணமாக பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய வெப்ப சலனம் காரணமாக, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வரலாறு காணாத...

பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!

உலகில் தற்போது நிகழும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் உருகுவதனால் உலகம் முழுவதும் கடல்மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. இதனால் கலிப்போர்னியா சிலிகன் வெலி பகுதியில் அமைந்துள்ள பேஸ்புக், கூகுள், சிஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் அலுவலகங்கள் நீரில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்புக்கு அமைவாக கடல்மட்டம் வேகமாக உயர்ந்து...

எரியும் நதி அவுஸ்திரேலியாவில் பரபரப்பு! (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துப் பகுதியில் நிலத்திலிருந்து ‘பிராக்கிங்’ மூலம் நிலத்திலிருந்து மெதேன் வாயு எடுக்கும்போது அந்த வாயு அருகிலுள்ள நதியில் சேர்வதாக அனைவரும் கவலைவெளியிட்டு வந்தனர். இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் அந்த நதிக்குத் தீ வைத்தார். நீருக்குமேலே தீ பெரிதாகப் பரவுவதை அவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts