Ad Widget

அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம்

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் ‘பல்ஸ்’ என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். தகவல் அறிந்த போலீஸ் படையினர் விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.இந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலியாகினர். 53 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா கூறும் போது,

”வெறுக்கத்தக்க இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாகும் ஆனாலும், தாக்குதலுக்கு என்ன காரணம் என்ன என்பது குறித்து தெரியவில்லை.

அமெரிக்க வரலாற்றில் கொடூரமான சம்பவம் இன்று நடந்திருக்கிறது.

ஓர்லாண்டோ நகர மேயரிடம் பேசினேன். அரசு சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன். ஓரினசேர்க்கையாளர்கள் மற்றும் லெஸ்பியன்களுக்கு இது நெஞ்சை உடைக்கும் நாள். இந்த துப்பாக்கிச்சூடு அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தாக்குதல்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இது போன்ற மிகப்பெரிய தாக்குதலுக்கு பிறகு ஒபாமா பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுவது இது 15 வது முறையாகும்.

Related Posts