லண்டன் பிரிட்ஜ், பரோ தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது

லண்டன் பிரிட்ஜ், மற்றும் பரோ பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கிழக்கு லண்டன் பாக்கிங் மாடிக் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட சுற்றி வளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பெரு நகர காவற்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பெரு நகர காவற்துறையின் பயங்கரவாத எதிர்ப்பு கட்டளைப் பிரிவினர்,...

மலேசிய விமானத்தில் குண்டுப்புரளியை ஏற்படுத்திய இலங்கையர் கைது

அவுஸ்ரேலியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கையைச் சேர்ந்த பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தம்மிடம் குண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டுள்ள குறித்த பயணி, விமானியின் அறைக்குள் பிரவேசிக்கவும் முயன்றுள்ளார். இதனால் பயணிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். எனினும், சாமர்த்தியமாக செயற்பட்ட சக பயணிகள் குறித்த பயணியை மடக்கிப்...
Ad Widget

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் மருத்துவ வசதியின்றி உயிரிழப்பு!!

அவுஸ்திரேலியாவில், இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உரிய முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகள் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான ஆஸ்துமா நோயாளியான குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு உரிய மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவுகளுக்குள் பிரவேசித்து சில மணித்தியாலங்களில் அருள்செல்வம்...

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற வெடிப்பில் 19 பேர் பலி

இங்கிலாந்து, மெஞ்சஸ்டரில் இடம்பெற்ற ´அரியானா கிரான்ட்´ ன் இசை நிகழ்ச்சியில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் 19 பேர் பலியாகினர். 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க பாப் பாடகரான அரியானா கிராண்டின் இசை நிகழ்ச்சி நடந்த திடலில்இ இசை கச்சேரி முடிந்த பிறகு திங்கள்கிழமை...

அமெரிக்க அழகியாக தேர்வு செய்யப்பட்ட இளம் விஞ்ஞானி!

அமெரிக்க அழகிக்கான போட்டியில் 25 வயது விஞ்ஞானியான காரா மெக்குல்லாக் வெற்றி பெற்றார். அமெரிக்க அழகிக்கான போட்டி, லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியாளர் யார் என்ற அறிவிப்புக்காக அரங்கமே அமைதியுடன் காத்திருந்தபோது, காரா மெக்குலாக்கின் பெயர் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூக்ளியர் ஒழுங்காற்று...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மூடப்பட்டது!

அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் தடுப்புவேலியை தாண்டி குதித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கிறது வெள்ளை மாளிகை. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் காணப்படும். இம்மாளிகை உலகின் அதிபாதுகாப்பான இடங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையின் தடுப்பு வேலியை...

உலகளாவிய இணையத் தாக்குதல் ; பல அரச அமைப்புகள் முடக்கம்

உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமானதொரு இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணையச் சேவைகள் மீது இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரிட்டனின் தேசிய...

பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இம்மானுவல் மேக்ரன்

ஃபிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல் மேக்ரன், பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல்,...

தமிழீழ இலட்சினைகளுடன் புடைவை விற்பனைக்கு!

தமிழீழ தேசிய இலட்சினைகளுடனான புடைவைகள் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. பிரான்ஸின் வர்த்தக நிலையமொன்றில் குறித்த புடைவை வகைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரியில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசிய மலரான கார்த்திகை பூவும், இலங்கை வரைபடத்தின் தமிழீழ இராச்சியத்தைக் குறிப்பிடும் பகுதியும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கிய ஒபாமா

மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க சர்வதேச ரீதியாக செயற்பட்ட படைகளுடன் பராக் ஒபாமா அமெரிக்க வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 454 மில்லியன் நிதியை ஒதுக்கியதாக, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதனை தற்போ​தைய அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் வௌிப்படுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...

மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் தொழில்நுட்பம்!

ணினிகளை நேரடியாக நமது மூளையின் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க முயன்றுவருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களை ஒரு நிமிடத்துக்கு 100 வார்த்தைகளை தட்டச்சு செய்ய அனுமதிக்கும் ''அமைதியான பேச்சு'' என்ற மென்பொருளை உருவாக்கி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. ஆரம்ப நிலையில் உள்ள இந்தத் திட்டத்துக்கு, எவ்வித அறுவை சிகிச்சையும்...

மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில...

இலங்கை அகதிமீது ஜேர்மனியில் தாக்குதல்

ஜேர்மனியில் தஞ்சம் புகுந்துள்ள 22 வயதான இலங்கை அகதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று, ஜேர்மனிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தனது வசிப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த நபர் மீது, மூன்று பேரினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஸ் தரிப்பிடமொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இத்தாக்குதலில், இலங்கைப் பிரஜையொருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும்...

2 படகுகள் கடலில் முழ்கியதில் 200க்கும் மேற்பட்ட அகதிகள் பலி!

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர். சட்ட விரோதமாக படகுகளில் புறப்பட்டு வரும் அவர்கள் மத்திய தரைக்கடலில் மூழ்கி உயிரை விடுகின்றனர். இச்சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அகதிகள் படகுகளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களது...

அவுஸ்திரேலிய அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பம்!

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளின் அங்க அடையாளங்கள் மற்றும் கைரேகை அடையாளங்களைப் பதியத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றும் ஒப்பந்தம் கைச்சாத்தாகியிருந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச்...

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ்: 2 தமிழர்களும் இடம் பிடித்தார்கள்

இந்த வருடத்திற்கான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் பணக்காரர்கள் வரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில் கேட்ஸ். இந்த வருடம், உலகளவில் பெரும் பணக்காரர்கள் 13 சதவீத அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ள நிலையிலும் பில் கேட்ஸ் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டு பணக்காரர்கள் பட்டியல் படி, பில் கேட்ஸின்...

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல்! ஐவர் பலி!

பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. லண்டணில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திலே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி மற்றும் பெண்னொருவர் உட்பட 5 பேர்...

மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் நோர்வே முதலிடம்!

ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச மகிழ்ச்சி தினம் நேற்று (20) அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்படி, மகிழ்ச்சியான நாடுகள் பற்றிய ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அதன் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இலங்கை இந்த வருடம் 120ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன், இந்தியா 122 ஆவது இடத்தையும் அமெரிக்கா 14 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த வகையில்,...

இலங்கை அணியினர் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதி பலி

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் குவரி யாசீன், அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் பக்டிக்கா மாகாணத்தில் வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாசின், 2009ம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் வைத்து இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர் என கூறப்பட்டு வந்தது....

இலங்கையர்களுடன் கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்க கப்பம் கோரும் கடற்கொள்ளையர்கள்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், இலங்கைக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிவந்த வர்த்தகக் கப்பலை விடுவிக்க கப்பம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது. கப்பலை தேடும் பணிகளில் ஈடுபட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட படகில் எட்டு பேர் அடங்கிய குழுவினர் பயணித்திருந்ததாகவும், அவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் வெளிவிவகார...
Loading posts...

All posts loaded

No more posts