- Monday
- June 23rd, 2025

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு எழுந்த சுனாமி பேரலைகள் புகுஷிமா அணு உலை பகுதியை ஆக்ரோஷத்துடன் தாக்கியுள்ளன. ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியை மையமாகக் கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் பயங்கரமாக குலுங்கின....

ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத்தின் ஊடாக நிலைத்து நிற்கும் நிலத்தடி நீர் முகாமைத்துவம் என்ற ஒரு மாத காலப் பயிற்சிநெறி அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்று வருகிறது. இலங்கையைச் சேர்ந்த நீர் முகாமைத்துவத்துடன் தொடர்பானவர்களுக்கென மாத்திரமே விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் இலங்கையில் இருந்து 15 பேர் கலந்து கொண்டுள்ளார்கள். வடக்கில் நிலத்தடி நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகள்...

இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார். சிட்னியில் வசித்துவந்த அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாலேயே மரணமடைந்துள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். அஜிதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டதாகவும் அப்போது அவருடன் அருகில் யாரும் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்....

சுவிஸ் அரசாங்கம் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் சுவிஸில் தஞ்சமடைந்துள்ள தமிழர்களுக்கு எவ்வித பாதிப்புமில்லையென அந்நாட்டின் சோசலிச ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் தூன் நகரசபை உறுப்பினருமான தர்சிகா கிருஸ்ணானந்தம் தெரிவித்துள்ளார். சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்சருமான சைமனேட்டா சொமாருகாவின் பிரதிநிதி மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் இடம்பெற்ற முக்கிய சந்திப்பின் பின்...

சமூக ஊடக வலைதளமானஃபேஸ்புக்கில் இருக்கும் அசாதராண செயலி பிழையால், பல பேர் இறந்து விட்டதாக முத்திரை அறிவிப்பு வெளியானது. ஃபேஸ்புக்கின் தலைமை செயலதிகாரியான மார்க் ஸூகர்பெர்க் உள்பட ஃபேஸ்புக்கின் பல பயனாளர்களின் சுயவிவர பக்கங்களில் இந்த செய்தி தவறுதலாக தோன்றியிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சில பயனாளர்கள், தாங்கள் இன்னும உயிருடன் இருப்பதை தெரியப்படுத்துவதற்காக தங்களுடைய நண்பர்கள்...

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச்சென்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டு, நவ்று மற்றும் மனுஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளதாகவும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிவந்த நிலையில் நவ்று மற்றும் மனுஸ் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 1800 பேர் இவ்வாறு அமெரிக்காவில் குடிமர்த்தப்படலாம் என...

சாரண சாரணிய இயக்கத்தினருக்கு வாழ்க்கையின் பிந்தைய கட்டத்தில் மன நோய் ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என பிரிட்டனின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 1958 ல் பிரிட்டனில் பிறந்த சுமார் பத்தாயிரம் மக்களிடம் அவர்கள் வாழ்நாள் முழுதும் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளது. சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், பதற்றம் மட்டும் மனநிலை ஊசலாட்டம்...

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு சினிமாவில் நடித்திருக்கிறார். அதுவும் இலங்கையின் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான சந்தரன் ரத்னம் தயாரித்த ஒரு படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தின் பெயர் 'Ghosts Can't Do It'. இது குறித்து சந்தரன் ரத்னம் கூறுகையில், "நானும் போ டெரிக் (Bo Derek)கும்...

அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் 3 தமிழர்கள் உள்பட 4 இந்தியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுடன் பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மேல்-சபையான செனட் சபைக்கும், கீழ் சபையான பிரதிநிதிகள்...

உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லையென்றும் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாவே செயற்படுவேன் என்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். உலகின் மிகவும் பலம் பொருந்திய பதவியாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை தனதாக்கிக்கொண்ட குடியரசுக் கட்சியின் டொனால்ட் டரம்ப், தனது வெற்றியை அடுத்து நேற்று (புதன்கிழமை) ஆற்றிய கன்னி உரையிலேயே இவ்வாறு...

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியாவதற்குத் தெரிவாவதற்கு 270 பிரதிநிதிகள் தேவை என்ற நிலையில், 276 பிரதிநிதிகளை தற்போது பெற்றுள்ள நிலையிலேயே, ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். ட்ரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், 218 பிரதிநிதிகளின் ஆதரவை இதுவரையில் பெற்றுள்ளார்.

‘சுப்பர் மூன்’ நிலவு, பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வு, எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு, மிகவும் பிரகாசமான சுப்பர் மூனாக, இது அமையுமென, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு அறிய நிகழ்வு இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. சுப்பர் மூன் என்றால், நிலவானது பூமிக்கு மிகமிக அருகில்...

கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூடு இடபெற்றுள்ளது. மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை நேரத்தின் பிரகாரம் இன்று புதன்கிழமை காலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமானது அமெரிக்க தேர்தலை குழப்பும்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது முடிவுகள் தொடர்ந்தும் வௌியாகிய வண்ணம் உள்ளன. கடும் போட்டி நிலவும் பல மாநிலங்களில் வெற்றி பெறப் போவது யார் என்ற கேள்வியுடன் உலகளாவிய ரீதியில் முடிவுகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இதன் அடிப்படையில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்ப்பை பின் தள்ளி...

இங்கிலாந்தில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம் கார்டில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் பொறிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதுகுறித்த படமும் செய்தியும் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பாக்கிளேஸ் பேங்கில், நீங்கள் விரும்பும் புகைப்படத்தைக் கொடுத்து உங்கள் ஏ.டி.எம் கார்டில் பிரின் செய்ய முடியும். அந்த வகையில் பலர் இது போல...

அதிக வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி கனடாவில் பலரின் பணத்தை ஏப்பம் விட்ட இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 52 வயதுடைய சிங்களப் பெண் ஒருவருக்கு கனேடிய நீதிமன்றம், ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. அதேவேளை மூன்று மில்லியன் கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முஸ்கொகா என்ற இடத்தில் ஆடம்பர விடுதிகளை அமைப்பதாகக் கூறி 2004 ஆம்...

கல்வியில் சாதிக்க நோய் ஒரு தடையில்லை என நிரூபித்த இலங்கையர் குறித்து, அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன. தினேஷ் பலிபனய எனும் குறித்த இளைஞர், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்தியப் படிப்பை மேற்கொண்டு வந்தபோது, திடீர் விபத்தொன்றுக்கு முகம்கொடுத்தார். பிலிஸ்பேனில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க காரில் சென்றவேளையே அவர் இவ்வாறு விபத்துக்குள்ளானார்....

ஆர்டிக் கடலின் அடிப்பகுதியில் இருந்து வெளிப்படும் மர்மமான ஒலி ஒன்றை நாட்டின் ராணுவம் ஆய்வு செய்து வருவதாக கனடா அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். கனடாவின் தொலைதூர வட பகுதி எல்லையில் ஃபியுரி மற்றும் ஹெக்லா நீரிணை முழுவதும் பல மாதங்களாக இந்த ஓசை கேட்டு கொண்டிருக்கிறது. பெரிய வாய் உடைய திமிங்கலம் மற்றும் சீல் எனப்படும் நீர்...

லிபியாவுக்கு அப்பாலுள்ள கடலில் இரண்டு படகுகள் மூழ்கியதால் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் பலியாகியிருப்பதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறைந்த பட்சம் 239 பேர் மரணித்துள்ளதாக தெரிகிறதென ஐ.நா அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி குறிப்பிட்டார். விபத்தில் உயிர் தப்பிய இரண்டு பேர் இத்தாலியின் லம்பெடுசா தீவின் கரையோரத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை...

சவுதி அரேபியாவில் தற்போது ஆளும் அரச குடும்பத்தின் இளவரசருக்கு, சிறையில் கடுமையான சாட்டையடிகள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்கள் முன்பு, கொலை குற்றத்தில் கைது செயப்பட்ட சவுதி அரசக் குடும்பத்தின் இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதியின் ஆளும் ”அல் சவுத்”(Al...

All posts loaded
No more posts