- Monday
- April 6th, 2026
செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி... பிப்ரவரி 14, 1995ஆம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு...
பிறந்து 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை தனது நுரையீரலை தானம் கொடுத்து உலக வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்தில் ஒரு பெற்றோருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு தியோ ஆர்மோண்டி எனப் பெயர் சூட்டினார்கள். 40 நாட்கள் வரை நன்றாக இருந்த அவனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர்...
நியூசிலாந்து நாட்டின் சவுத் ஒக்லாந்துப் பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று ஈழத் தமிழர்கள் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் விபத்துச் சம்பவத்தின்போது கைலேஸ், தனபாலசிங்கம் என்ற அகதிகள் நலனுக்கான சட்டவாளர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது மனைவி (39 வயது),...
சிரியாவில் மக்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு உதவிய சிறுமி துருக்கியின் ஜனாதிபதியை சந்தித்தார். சிரியாவின் கிழக்கு அலெப்போ பகுதியிலிருந்து மீண்டு வந்த பானா அல் அபேத் என்ற ஏழுவயது சிறுமியை துருக்கி ஜனாதிபதி தயீப் ஏர்டோகன் தனது மாளிகைக்கு அழைத்து பாராட்டியுள்ளார். அலெப்போவில் தாக்குதல்களின் போது துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் பொது மக்கள் தாக்கப்படுகின்றார்களா என்பதை...
ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை...
அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு அந்த நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒபாமா, இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உத்தியோகபூர்வாக ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த குறித்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு...
உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர்...
ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நகரின் இதயப் பகுதியில் உள்ள, பிரதான வணிகத் தெருவான, Kurfuerstendamm, இற்கு அருகேயுள்ள, Breitscheidplatz சந்தையில் நேற்றிரவு நத்தார் சந்தை களைகட்டியிருந்த போது, பாரஊர்தி...
ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு...
‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து...
இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று உலகையே உருக வைத்துள்ளது. இங்கிலாந்தின் மிட்லேடண்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆரூஷ் ஆனந்த் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. இவர் நட்டிகாம் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலை ஆரூஷ் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம்...
பபுவா நியூ கினிக்கு அருகாமையில், 8.0 ரிச்டர் அளவிலாள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் கலந்துகொண்ட 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக இலங்கைத் தமிழ் பெண் சபறினா கணேசபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம்...
இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அசெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும்...
பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், நேற்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய...
இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் மரணபீதியில் ஓலமிட்டனர். பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த...
இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் குறித்து நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும் தோல்வியடைந்ததால், இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகியுள்ளார். நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்ற தரப்பு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி...
சப்பகோயென்ஸ் கால்பந்து குழுவினரை ஏற்றி சென்ற ஒரு விமானம், கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்து 75 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் மலைப்பாங்கான பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களையும், அதிகாரிகளையும், மெடலின் அணிக்கு...
பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த விமானம் மேடெல்ளின் பகுதியை அண்மித்த வேளை ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. பிரேசில் கால்பந்து வீரர்கள் அடங்களாக 72 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 81 பேருடன் குறித்த விமானம் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளது. குறித்த விபத்தின் போது விமானம் முற்றுலுமாக நொருங்கியுள்ளதாகவும்,...
Loading posts...
All posts loaded
No more posts
