இலங்கை குறித்த அறிக்கையை வெளியிடவுள்ள ஐ.நா. ஆணையாளர்

ஜெனீவா மனித உரிமை பேரவையில் கடந்த நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது தொடர்பான எழுத்து மூலமான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பேரவையில் வெளியிடவுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதிவரை...

புலிகள் மீதான தடையை நீக்குமாறு பதவிவிலகும் ஒபாமாவிடம் கோரிக்கை

அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற புலம்பெயர் அமைப்பு அந்த நாட்டு ஜனாதிபதி பரக் ஒபாமாவை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒபாமா, இன்னும் ஒரு சில தினங்களில் இந்த உத்தியோகபூர்வாக ஒய்வுபெற்றுள்ள நிலையிலேயே இந்த குறித்த அமைப்பு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு...
Ad Widget

ட்வீட் செய்த ஏழு வயது சிறுமி பத்திரமாக மீட்பு

உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் சிரியாவின் அலெப்போ நகரில் இருந்து ட்விட்டர் உதவியோடு ஏழு வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி உள்நாட்டுப்போர் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் சிரியாவின் பல்வேறு பகுதிகளிலும் கிளிர்ச்சியாளர்கள் மற்றும் அதிபர் ஆதரவு படையினர்...

ஜேர்மனி, சுவிஸ், துருக்கி தாக்குதல்களால் அதிர்ச்சியில் ஐரோப்பா!

ஜேர்மனியின் பேர்லின் நகரில் பார ஊர்தி ஒன்றை சந்தைக்குள் செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும், துருக்கியில் ரஷ்யத் தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்பன ஐரோப்பாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்லின் நகரின் இதயப் பகுதியில் உள்ள, பிரதான வணிகத் தெருவான, Kurfuerstendamm, இற்கு அருகேயுள்ள, Breitscheidplatz சந்தையில் நேற்றிரவு நத்தார் சந்தை களைகட்டியிருந்த போது, பாரஊர்தி...

ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண்

ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு...

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகியாக கல்லூரி மாணவி தேர்வு

‘மிஸ்வேர்ல்டு 2016’ உலக அழகிப்போட்டி அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள அக்சான் கில்நகரில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. அதில் கென்யா, பிலிப்பைன்ஸ், புவேர்ட்டோ ரிக்கோ, டொமிகன் குடியரசு மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் கலந்து...

உலகையே உருகவைத்த இந்திய சிறுவனின் கிறிஸ்துமஸ் கடிதம்

இந்தியவம்சாவளி சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று உலகையே உருக வைத்துள்ளது. இங்கிலாந்தின் மிட்லேடண்ஸ் பகுதியில் வசிப்பவர் ஆரூஷ் ஆனந்த் . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு ஏழு வயதுதான் ஆகிறது. இவர் நட்டிகாம் உயர்நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலை ஆரூஷ் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு எழுதிய கடிதம்...

பபுவா நியூ கினியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பபுவா நியூ கினிக்கு அருகாமையில், 8.0 ரிச்டர் அளவிலாள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறையினால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அழகியாக இலங்கைத் தமிழ் பெண்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வருடம் கலந்துகொண்ட 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக இலங்கைத் தமிழ் பெண் சபறினா கணேசபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலராக 65 வயதான போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பதவியேற்றார். ஐ.நா. பொதுச்செயலர் பான் -கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலரை தேர்ந்தெடுக்க கடந்த ஜூலை முதல் பல்வேறு கட்டங்களாக இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம்...

இந்தோனேசிய நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

இந்தோனேசியாவின் அசெக் மாகாணத்தில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவானது. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அசெக் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 500க்கும்...

47 பேருடன் சென்ற விமானம் விபத்து

பாகிஸ்தானில் 47 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனத்தின், PK661 என்ற பயணிகள் விமானம், நேற்று மாலை வடக்கு பாகிஸ்தானின், சித்ராலில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் அபோதாபாத் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. இதனால் பரபரப்பு நிலவிய...

இந்தோனேசியா நிலநடுக்கத்துக்கு 18 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாக பதிவான இன்றைய நிலநடுக்கத்தால் பலவீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்கள் மரணபீதியில் ஓலமிட்டனர். பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த...

இத்தாலி, நியூசிலாந்து பிரதமர்கள் பதவி விலகல்!

இத்தாலியின் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் குறித்து நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பெரும் தோல்வியடைந்ததால், இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி பதவி விலகியுள்ளார். நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு மேம்பாட்டுக்கு ஆதரவாக எந்த வாக்கும் பதிவாகவில்லை என்ற தரப்பு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி...

கொலம்பிய விமான விபத்து: 75 பேர் பலி, 6 பேர் உயிர் தப்பினர்

சப்பகோயென்ஸ் கால்பந்து குழுவினரை ஏற்றி சென்ற ஒரு விமானம், கொலம்பியாவில் விழுந்து நொறுங்கியுள்ளது. அதிலிருந்து 75 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் 6 பேர் உயிர் தப்பியுள்ளனர். கொலம்பியாவின் மெடலின் நகரை அந்த விமானம் அணுகிக் கொண்டிருந்த வேளையில் மலைப்பாங்கான பகுதியில் இந்த விமானம் விழுந்துள்ளது. கால்பந்து விளையாட்டு வீரர்களையும், அதிகாரிகளையும், மெடலின் அணிக்கு...

பிரேசில் கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் விபத்து

பொலிவியாவில் இருந்து கொலம்பியாவிற்கு பயணித்த விமானம் மேடெல்ளின் பகுதியை அண்மித்த வேளை ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிலர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. பிரேசில் கால்பந்து வீரர்கள் அடங்களாக 72 பயணிகள் மற்றும் 9 விமானப் பணியாளர்கள் அடங்கலாக 81 பேருடன் குறித்த விமானம் விபத்திற்கு முகம்கொடுத்துள்ளது. குறித்த விபத்தின் போது விமானம் முற்றுலுமாக நொருங்கியுள்ளதாகவும்,...

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் கைது

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 70 இலங்கையர்கள் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 200 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு நோர்வே காவல்துறையினர் 70 இலங்கையர்களை கைது செய்துள்ளனர். நோர்வேயில் துப்புரவு தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். தூய்மைப்படுத்தும் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 34 வயதான இலங்கையரே...

பிடல் கெஸ்ட்ரோ காலமானார்!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிடல் கெஸ்ட்ரோ மரணத்தை அதிபரும் அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.  கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் பிடல் கெஸ்ட்ரோ. இவர் வயோதிபத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் கெஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு...

ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா

சிரியாவில் குண்டுவெடிப்பால் தரைமட்டமான கட்டிடத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பீதியில் உறைந்துப்போய் இருந்த சிறுவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வந்த ஆறுவயது சிறுவனை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த ஒபாமா, அவனை பாராட்டி, வாழ்த்தினார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு...

பிரான்சில் ஈழத் தமிழர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஈழத் தமிழரான ஜெயக்குமார் என்பவர் மீது நேற்றைய தினம் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் லாச்சப்பல் பகுதியில் மாவீரர்நாள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்தவேளையிலே இனந்தெரியாத நபர்கள் குறித்த இளைஞன்மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். வாள் வெட்டில் காயமடைந்த இளைஞர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை...
Loading posts...

All posts loaded

No more posts