கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கியது கனடா!

கனடா நாடு கஞ்சா பயன்பாட்டை தற்போது சட்டபூர்வமாக்கியுள்ளது. அக்டோபர் 17, 2018 அன்றுமுதல் கஞ்சா என்று தமிழில் அழைக்கப்படும் கன்னாபிசு (Cannabis) என்னும் வயப்பொருளை அகவை 19 ஐத் தாண்டிய யாரும் உட்கொள்வது சட்டப்படி குற்றமில்லை. இதனால் உலகின் மிகப்பெரிய சட்டரீதியான கஞ்சா விற்பனை சந்தையாக கனடா உருவெடுத்துள்ளது. கஞ்சா பயன்படுத்துபவர்கள் மற்றும் அந்த தொழிலில்...

கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில்...
Ad Widget

நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுமாறு கோரிக்கை!

நவ்ரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான MSF இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. MSF தொண்டு நிறுவனம் கடந்த 11 மாதங்களாக அவுஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாமில் பணிகளை மேற்கொண்டது. எனினும், நவ்ரு அதிகாரிகளால் குறித்த தொண்டு நிறுவனம் வெளியேற்றப்பட்டது. தாம்...

9 கோடி முகநூல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக முகநூல் நிறுவனம் அதிர்ச்சித் தகவல்!!!

சுமார் 5 கோடி பேரின் முகநூல் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 கோடி பேரின் கணக்குகள் பாதுகாப்பற்று இருப்பதாகவும் முகநூல் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலகின் பிரபல சமூக வலைத்தளமாக முகநூல் உள்ளது. முகநூல் பயனர்களின் கணக்குகள் செயற்படும் முறையில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக அந்தநிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு...

புலிகளால் மலேசியாவுக்கும் அச்சுறுத்தல் என்கிறார் முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

விடுதலைப் புலிகளை தோற்கடித்திருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்தியல் இன்னும் பல நாடுகளில் காணப்படுகின்றது என மலேசியாவின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் டன் ஸ்ரீ முசா ஹசன் தெரிவித்துள்ளார். கோலாலம்பூர் தொலைக்காட்சி சேவையொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் விரவிக் காணப்படுகின்றனர் என்றும், அவர்களால் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் உண்டு என்றும்...

எண்ணெய் கப்பலில் ஆஸி. பயணித்த 131 இலங்கையர்கள் கைது!

ஆஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 131 இலங்கையர்கள் மலேசியக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மலேசியாவின், ஜோகோர் மாகாணத்தின், தன்ஜுங் ஜெமுக் துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த எற்ரா ( Etra) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 131 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மே முதலாம்...

அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில்...

சன்சீ கப்பலில் கனடா சென்ற யாழ் இளைஞன் வெட்டிக் கொலை

கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் உட்பட 8 பேர் அங்கு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இந்த கொலைகள் இடம்பெற்ற போதும், தற்போது வெளிவந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடம் கனேடிய பொலிஸார் உறுதி செய்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கச்சேரியடியை சேர்ந்த 40 வயதான கனகரட்ணம்...

கோத்தாவின் கீழ் இயங்கியோரே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தினர் ; ஜெனிவாவில் ஜயனி தியாகராஜா

முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. கப்பம் பெறும் நோக்கத்திலேயே இவ்வாறு எனது சகோதரர் கடத்தப்பட்டார் என்று ஜெனிவா வந்துள்ள பாதிக்கப்பட்ட ஜயனி தியாகராஜா என்ற பெண் ஜெனிவா மனித உரிமை பேரவையில் தெரிவித்தார். ஜெனிவாவில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான...

கூகுள் அதிபரின் புதிய வகை விமானம் சோதனைக்கு அனுமதி!!

கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ் புதிதாக உருவாக்கி இருக்கும் விமானம் சோதனை ஓட்டத்துக்கு நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. கூகுள் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான லேரிபேஜ். இதுவரை பயன்பாட்டில் இல்லாத புதிய வகை விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவருடைய கிட்டிகாவ்க் நிறுவனமும், மற்றொரு நிறுவனமும் பங்குதாரராக சேர்ந்து சிபீர் என்ற நிறுவனத்தை...

கடைசி நிமிடத்தில் தமிழ்க் குடும்பத்திற்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த விமோசனம்!

அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர்,நாடு கடத்தப்படுவதற்காக அவுஸ்ரேலிய அதிகாரிகளால்...

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம்

உலகின் தலைசிறந்த அறிவியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங், 76-வது வயதில் இன்று காலமானார். அவரின் இறப்புச் செய்தியை அவரின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். ஸ்டீபனின் பிள்ளைகளான லூசி, ராபர்ட், டிம் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எங்கள் அன்புமிகு தந்தை இன்று காலமானார். அவர், பெரிய விஞ்ஞானி அசாதாரண மனிதர். அவரின் பெயரும் புகழும் காலம் கடந்து நிற்கும்....

பூமியின் மீது மோதவுள்ள “டியாங்கோங்- 1”

சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான "டியாங்கோங் – 1" பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி...

நவுரூ தீவில் இருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அவுஸ்ரேலியாவின் நவுரூ தீவில் குடிவரவுத் தடுப்பு முகாமில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 29 பேர் கொண்ட இந்தக் குழுவில் மூன்று குழந்தைகளை உள்ளடக்கிய இலங்கையைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கங்களுடன் ரோஹிங்யா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இரு குடும்பங்களும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனி...

நாடு கடத்தப்பட இருக்கும் முன்னாள் போராளி!

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளார். முன்னாள் போராளியான சாந்தரூபன் தங்கலிங்கம் (வயது-46) என்பவரே இன்று (வியாழக்கிழமை) நாடு கடத்தப்பட இருக்கின்றார் என அவுஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும், சாந்தரூபனின் பின்னணி தொடர்பாக சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் விடுதலைப் புலிகளால் பயிற்சி அளிக்கப்பட்டவர் என்பதற்கோ படகுத் தளத்துக்குப் பொறுப்பானவராக இருந்தார்...

லண்டனுக்கான இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கம்!

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புலம்பெயர் தமிழர்களால் குறித்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் உள்ள உலக இலங்கை பேரவை சந்தேகம் வெளியிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அந்த தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக செயற்படும்...

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கிப் பிரயோகம் : 17 பேர் பலி! டொனால்ட் ட்ரம்ப் இரங்கல்!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், பார்க் லேண்டில் உள்ள மர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலை கல்லூரியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றபோது கல்லூரியில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். துப்பாக்கிச் சுட்டுச் சத்தம் கேட்டதும் பல மாணவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். உடனடியாக பொலிஸாரும் அப்பகுதியை சுற்றி...

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெபின்சன் றொட்ரிகோ துஸான் றொன்சின்ரன்(வயது 20) என தெரியவருகின்றது. குறித்த இளைஞன் சுவிட்சர்லாந்தின் ECUBLENS VD பகுதியில் கடந்த 3...

யுத்த பாதிப்பிற்குள்ளானோர் நிலை கண்டு உருகிய ஹொலிவூட் நடிகை!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை, அவர்களுடைய இடத்தில் இருந்து தன்னால் உணரக்கூடியதாக இருந்ததென விருதுவென்ற பிரபல ஹொலிவூட் நடிகையும் ஐ.நா.வின் நல்லெண்ணத் தூதுவருமாகிய ஆஷ்லி ஜூட் தெரிவித்துள்ளார். அம்மக்களின் நிலையறிந்து தான் மிகவும் வேதனையடைவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். பாலின ரீதியிலான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்காகக் கொண்டு, ஐ.நா.வின் நல்லெண்ணத்...

ஐ.நா.வில் இலங்கை மீது அதிருப்தி வெளியிடவுள்ள ஹுசைன்?

ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இதன்போது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை தாமதமடைந்தால்...
Loading posts...

All posts loaded

No more posts