- Thursday
- July 10th, 2025

உக்ரைனை அடுத்து நேட்டோ நாடுகளை சீண்டினால், உண்மையில் ஒட்டுமொத்த கூட்டணியும் எதிர்வினையாற்றும் என நேட்டோ தலைவர் ரஷ்ய ஜனாதிபதிக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பானது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் காட்டமாக பதிலளித்துள்ள நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்,...

உக்ரைன் மீதான படையெடுப்பை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதன்படி, உலோக நிறுவனமான MMK மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய தொடர்புடையது என அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது. அமெரிக்க திறைசேரி இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் புட்டினுடன் நெருங்கிய உறவைக்...

ரஷ்யப் படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் ஆலோசகர் புதன்கிழமை தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள சோவியத் கால நிலக்கரி எரியும் Vuhlehirsk மின் உற்பத்தி நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய படையினர் ஒரு சிறிய தந்திரோபாய நன்மையை...

ஹைட்டியில் குழுக்களுக்கு இடையே இந்த மாதம் நடந்த கடுமையான மோதல்களின் விளைவாக குறைந்தது 471 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மற்றும் சிறுவர்கள் கும்பல்களால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதும் பதிவாகியுள்ளது" என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று...

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எரிபொருள் விநியோகத்தை கடுமையாக குறைப்பதாக ரஷ்ய எரிசக்தி நிறுவனமான Gazprom அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பிரதான குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கடுமையாகக் குறைப்பதாக அறிவித்துள்ளது. Nord Stream 1 குழாய் வழியில் மற்றொரு விசையாழியை நிறுத்துவதன் மூலம் நாளாந்தம் எரிவாயு உற்பத்தியை 20 வீதமாக குறைந்துள்ளது....

பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 4 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூடு நேற்று திங்கட்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரின் 11வது வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. அரோண்டிஸ்மென்ட் மேயர் துப்பாக்கிச் சூடு நடந்ததை உறுதிப்படுத்தியதோடு, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலின் பின்னணியில் உள்ள உள்நோக்கங்களை இந்த கட்டத்தில் எந்த உறுப்பும்...

ரஷ்ய ஏவுகணைகள் மத்திய நகரமான வின்னிட்சியாவைத் தாக்கியதில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் கீவின் தென்மேற்கில் இடம்பெற்ற இந்த தாக்குதலில் மேலும் தொண்ணூறு பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ரஷ்ய ஏவுகணைகள் அலுவலகத் தொகுதியையும் குடியிருப்பு கட்டடங்களையும் சேதப்படுத்தியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி இதை...

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு ரஷ்யாவே காரணம் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், உக்ரைன் படையெடுப்பின் போது உணவுப் பொருட்களை தடை செய்தமை உலகம் முழுவதும் அமைதியின்மையை ஏற்படுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சியோலில் நடந்த ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் தனது உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீதான...

உக்ரைன் நாட்டின் தென் பகுதிகளை, ரஷ்யர்களின் ஆக்கிரமிப்பதில் இருந்து மீட்பதற்காக நேட்டோ ஆயுதங்களுடன் கூடிய பல லட்சம் பலம் வாய்ந்த இராணுவத்தைகளமிறக்க திட்டமிடப்படுவதாக உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். கருங்கடல் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்டெடுப்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது என்று அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறியுள்ளார். கிழக்கு டான்பாஸ் பகுதியில் ரஷ்யா முன்னேற்றம் அடைந்துள்ள...

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் நெஞ்சில் படுகாயமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் NHK செய்திச் சேவை தெரிவித்துள்ளது. ஜப்பானில் கடந்த 2006 - 2007 மற்றும் 2012 - 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர் ஷின்சோ அபே....

உக்ரைனில் சிறை கைதிகளை களமிறக்கி போரை நீட்டிக்கும் முயற்சியில் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கைதிகள் உக்ரைனில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்தால் அவர்களின் தண்டனைக் காலம் இரத்து செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிறைகளில் இருந்தே தற்போது கைதிகளை தெரிவு செய்து வருவதாக...

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன், அணு ஆயுதங்களை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. உலகின் மிக அழிவுகரமான ஆயுதத்தை உருவாக்கி பாதுகாப்பை பலப்படுத்தினால்தான், ரஷ்யாவின் படையெடுப்பு எதிர்காலத்திலும் தொடராது என்று உக்ரைன் கருதுகிறது. லாஃப்பரோவில் உள்ள சர்வதேச வரலாறு மற்றும் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் டாக்டர் பால் மாட்ரெல், இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதக்...

ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் முன்னாள் சுவிஸ் தூதரான Yves Rossier உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கூறியுள்ளார். ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக...

லிசிசான்ஸ்க் நகரை ரஷ்யா கைப்பற்றியதை அடுத்து, உக்ரைனில் தாக்குதலை தொடர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். "முன்னர் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின்படி" தங்கள் நோக்கங்களைத் தொடர மற்ற முனைகளில் உள்ள படைகளுக்கு புடின் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, லுஹான்ஸ்க் பகுதி முழுவதும் இப்போது ரஷ்ய கைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிராந்தியத்தின்...

கிழக்கு மாகாணமான லுஹான்ஸ்கில் உக்ரைனின் கடைசி கோட்டையான லிசிசான்ஸ்க் முழுவதையும் கைப்பற்றியதாக ரஷ்யா கூறுகிறது. எனினும், இதனை உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரித்துள்ளது. இந்த முக்கிய நகரத்தில் சண்டை இப்போது சிறிது காலமாக மிகவும் தீவிரமாக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்ய படைகள் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களின் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க முயல்வதால், உக்ரேனில் போர்...

பின்லாந்தில் வருங்காலத்தில் அமைய இருக்கும் நேட்டோவின் இராணுவம் தளம் ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள Lappeenranta பகுதியில் அமைய வேண்டும் என பின்லாந்து பரிந்துரைத்துள்ளது. [caption id="attachment_113989" align="aligncenter" width="774"] Corporal Lalabalavu from the Royal Welsh Regiment stands in front of his squad after exiting from a Warrior...

திடீரென ஒருநாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலையில் சுத்தியலால் அடித்துக்கொல்லப்படுவார் என முன்னாள் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் மூத்த உளவாளியான Daniel Hoffman, புடினுடைய ஆலோசகர்கள் உக்ரைன் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதால், அவரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு...

2030 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஐ பிரித்தானிய அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். மாட்ரிட்டில் நேட்டோ மாநாட்டில் பேசிய பிரதமர், "எதிர்கால போர் காற்று போன்ற முக்கிய திறன்களில் நீண்டகாலத்திற்கு முதலீடு செய்ய வேண்டும் எனவும், மிகவும் ஆபத்தான மற்றும் அதிக போட்டி நிறைந்த...

பல மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு ஆண்டுகளில் புடின் இறந்துவிடுவார் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த உக்ரைன் உளவுத்துறைத் தலைவரான மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் ரஷ்ய ஜனாதிபதி புடின் நீண்ட நாட்கள் வாழ்ப்போவதில்லை என்று கூறியுள்ளார். அத்துடன், புடின் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் சான் அன்டோனியோ நகரத்தில் கைவிடப்பட்ட லொறியிலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் என சந்தேகிக்கப்படும் 46 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 16 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேற அகதிகள் லொறியில் வந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், லொறியிலிருந்து...

All posts loaded
No more posts