Ad Widget

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் – உக்ரைன் எச்சரிக்கை

ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் விழும் பனி போல் இறந்து விடுவார்கள் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 185வது நாளை தொட்டிருக்கும் நிலையில், ரஷ்ய படைகளின் தாக்குதல் ஜபோரிஜியாவிலும், உக்ரைனின் தெற்கு பகுதிகளிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் நாட்டின் விமானப் போக்குவரத்து தினத்தில் பேசிய உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய படைகள் உக்ரைனை விட்டு வெளியேறும் நாள் விரைவில் வரும் என தெரிவித்தார்.

மேலும் உக்ரைனிய வீரர்கள் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் திறனை படிப்படியாக அழிப்பார்கள், அத்துடன் எதிரிகள் ஜபோரிஜியாவிலும், தெற்கிலும், நாட்டின் கிழக்கிலும், கிரிமியாவிலும் இறக்கும் நாள் விரைவில் வரும் என தெரிவித்தார்.

உக்ரைனில் எங்கள் வீரர்களின் பாதுகாப்பு சூரியன் போல் இருக்கும் என்றும், ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் சூரியனில் பனி போல இறந்துவிடுவார்கள் என்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts