- Sunday
- May 11th, 2025

ரஷ்யா கடுமையான ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு எரிசக்தியைச் சேமிக்க குடியிருப்பாளர்களை உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு மில்லியன் கணக்கான மக்கள் மின்தடையை எதிர்கொண்டுள்ள நிலையில், மின்சாரத்தைச் சேமிக்க உக்ரேனிய குடியிருப்பாளர்கள் அடுப்பு மற்றும் சலவை இயந்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். திங்களன்று உக்ரைன்...

உக்ரைன் அதிக நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றுவதால் புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக உக்ரைனின் முன்னாள் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் எந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுகிறதோ அந்த அளவுக்கு விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை நாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உக்ரைனின் முன்னாள் பிரதமர் அர்செனி யாட்சென்யுக் தெரிவித்துள்ளார்.. சர்வதேச ஊடகம்...

கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய ஏழு குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் உக்ரேனியப் படைகள் கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தை மீட்டெடுத்த போது விடுவிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களும்,...

உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கிய கிராமத்தை கைப்பற்றியுள்ளதாக உக்ரைனில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், டேவிடிவ் பிரிட் மீது உக்ரைனியக் கொடியை 35ஆவது கடற்படையினர் ஏற்றுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது. அத்துடன், மற்றொரு ரஷ்ய இராணுவப் பின்வாங்கலை தொடர்ந்து, அருகிலுள்ள பல கிராமங்கள் மீண்டும் கைப்பற்றப்பட்டதாக...

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு...

போரை உடன் நிறுத்துங்கள் என்று போப் பிரான்சிஸ் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் தொடங்கிய பின்னர் போப் புட்டினிடம் இது போன்ற கோரிக்கையை வைப்பது இதுவே முதல் முறையாகும். வன்முறை மற்றும் மரணத்தின் இந்த ஆபத்தான சுழற்சியிலிருந்து வெளியேறுமாறு போப் அழைப்பு விடுக்கிறார். (உக்ரைன் போரை நிறுத்துமாறு புடினிடம் போப் பிரான்சிஸ்...

உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம்பெற்ற ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக ஆக்கிரமிப்பு பிராந்தியங்களில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பிறகு, 93.11 சதவீத வாக்காளர்கள் ரஷ்ய இணைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தெற்கு சபோரிஜியா பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும், இது ஒரு முதற்கட்ட முடிவு என்று...

ரஷ்யாவில் நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் ஜோர்ஜியாவை கடக்க காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. லார்ஸ் சோதனைச் சாவடியில் ரஷ்யாவிலிருந்து அதன் தெற்கு அண்டை நாடான ஜோர்ஜியாவிற்கு எல்லையைக் கடக்க நீண்ட வரிசையில் டிரக்குகள் மற்றும் கார்கள் காத்திருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. உக்ரைனுக்கு எதிராக போரிட இராணுவ அணி திரட்டலுக்கு ரஷ்ய ஜனாதிபதி...

ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுவிக்கப்பட்ட பிரித்தானிய போர்க் கைதி, தான் பல நாட்களாக சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜோன் ஹார்டிங், கிழக்கு உக்ரைனில் சுயாதீன பகுதியாக அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் காவலர்களால் குத்தும் பையாக பயன்படுத்தப்பட்டதாகக் கூறினார். மேலும், விசாரணைக்காக...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவ அணி திரட்டலுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்துள்ளன. ரஷ்யா முழுவதும் 37 நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தலைநகர் மொஸ்கோவில் 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுதந்திர OVD-Info...

சீன ஆராய்ச்சியாளர்கள், மக்கள் கொவிட்-19 அல்லது காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதா என்பதை அறிய உதவும் வகையில் முகக்கவசம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவக்கூடியதாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஷாங்காயில் உள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஆறு விஞ்ஞானிகள் தலைமையிலான ஆய்வின்படி, முகக்கவசத்தில் உள்ள ஒரு சென்சார் காற்றில் உள்ள...

உக்ரேனில் மீட்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் ரஷ்ய படையினரால் தாம் சித்திரவதை செய்யப்பட்ட விதத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பெண் ஒருவர் உள்ளிட்ட ஏழு இலங்கையர்கள் முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்தில் குப்யன்ஸ்கில் இருந்ததாக கார்கிவ் ஒப்லாஸ்டில் உள்ள தேசிய காவல்துறையின் புலனாய்வுத் துறையின் தலைவர் Serhii Bolvinov தெரிவித்தார். இந்த குழுவின்ர் மே மாதம் கார்கிவ் நகரை கால்நடையாக...

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து Izyum புதைகுழியில் இருந்து 440 க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான Izyum இல் சுமார் 440 சடலங்கள் அடங்கிய வெகுஜன புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கார்கிவ் பிராந்தியத்திற்கான தலைமை பொலிஸ் புலனாய்வாளர்...

பிரித்தானிய மகாராணியார் மறைந்த அன்று பக்கிங்காம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகிய விடயம் மக்களை நெகிழவைத்தது. இந்நிலையில், மீண்டும் ராஜகுடும்ப ரசிகர்களை நெகிழச் செய்யும் இயற்கை அதிசயம் ஒன்று நடைபெற்றது. மகாராணியாரின் சவப்பெட்டி நன்றியறிதல் ஆராதனை ஒன்றிற்காக ஸ்காட்லாந்திலுள்ள St Giles' தேவாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. தற்போதைய மன்னரான சார்லஸ் அந்த பெட்டியின் பின்னால்...

உக்ரைன் இராணுவம் ரஷ்யாவிற்கு எதிரான சமீபத்திய வெற்றிகளைக் குறிக்கும் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில், துருப்புக்கள் சண்டையிடுவதையும், குடியிருப்பாளர்கள் தங்கள் விடுதலையாளர்களை மீண்டும் வரவேற்பதையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு இந்த காணொளியை வெளியிட்டுள்ளது. World, prepare for the Victory of a nation that puts Freedom above all else!...

உக்ரேனிய எதிர்த்தாக்குதல் காரணமாக ரஷ்ய வீரர்கள் மிக வேகமாக தப்பி ஓடுகிறார்கள் என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நாட்டின் கிழக்கில் உக்ரைன் படைகளின் கணிசமான வெற்றிகள் ரஷ்யாவைச் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற நிர்ப்பந்தித்தன. உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சின்...

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள இரண்டு நகரங்களில் இருந்து தமது படைகள் பின்வாங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது. உக்ரைனில் கடந்த...

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார். இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி...

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து பல நாட்களாக வதந்திகள் பரவி வருகின்றன. எனினும், இது குறித்து உக்ரேனிய அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எந்தெந்த இடங்கள் மீள கைப்பற்றப்பட்டது என்பதைக் குறிப்பிட மறுத்துள்ள...

உலக நாடுகளில் இருந்து கொரோனா தொற்று இன்னும் நீங்காத நிலையில், இந்த தொற்றை எளிமையாக கண்டறிய செல்போன் செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் இந்த செயலி நோயாளிகளின் குரல் பதிவு மூலம் தொற்றை உறுதி செய்யும். அதாவது குறிப்பிட்ட நபரின் மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் நிலை போன்ற சில...

All posts loaded
No more posts