Ad Widget

கெர்சன் நகரில் இருந்து இராணுவம் வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவு

உக்ரைனின் கெர்சன் பகுதியில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 9 மாதங்களாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்த சூழலில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய இராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்ததுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறும் உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரைன் குற்றம்சாட்டி இருந்தது.

ரஷ்ய படையினர் 1.5 கிமீ மின் கம்பிகளை அகற்றி விட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம்சாட்டியுள்ளனர். அந்தப் பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின், “நாங்கள் எங்கள் வீரர்களின் உயிரையும் எங்கள் பிரிவுகளின் சண்டை திறனையும் காப்பாற்றுவோம். அவற்றை வலது (மேற்கு) கரையில் வைத்திருப்பது பயனற்றது. அவர்களில் சிலர் மற்ற முனைகளில் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Posts