இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன் வரை 150 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்துள்ளது ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள...

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தொடரும் விபத்துக்கள்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அர்மீனிய பளுதூக்கு வீரருக்கு போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை இடம்பெற்ற போட்டியில் பங்கேற்ற அர்மீனிய வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் 195 கிலோ எடையை தூக்க முயன்ற போது...
Ad Widget

‘அவுஸ்திரேலியாவை வெள்ளையடியுங்கள்’-சனத் ஜெயசூரிய

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளின் நிறைவில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை வகிக்கின்ற நிலையில், மூன்றாவது போட்டியையும் வென்று, அவுஸ்திரேலிய அணியை வெள்ளையடிக்க வேண்டுமென, இலங்கை அணியின் பிரதம தேர்வாளரும் முன்னாள் அணித்தலைவருமான சனத் ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கு முன்னைய தொடர்கள்...

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமணம்

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் முதலாம் திகதி முதல் அந்த பதவியை அவர் பொறுப்பேற்கவுள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒலிம்பிக்கில் அகதிகளின் சாதனை

பிறேசில் நாட்டு றியோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டி இம்முறை பல சுவாரசியங்களைக் கொண்டு தொடங்கியுள்ளது. Yusra Mardini என்ற பெண் போட்டியாளர் நீச்சல் விளையாட்டில் தெரிவுப்போட்டியில் பங்குபற்றினார். அதில் அவர் இரண்டாவதாக வந்தாலும் அரையிறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பை சில செக்கன்களால் இழந்தார். ஆனால் உலகமக்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருக்கிறார். காரணம் அவர் ஓர் அகதி....

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 229 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 413 என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்ஸில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி   சகல விக்கட்டுகளையும் இழந்து 183 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 281 ஓட்டங்களையும் 2வது இன்னிங்ஸிக்காக 237...

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்கு 413

இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் மிச்சல் ஸ்டார்க்கின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 237 ஒட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஒட்டங்களை நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் நேற்றய ஆட்டநேர முடிவின்போது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலிய அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றது. இதேவேளை இரண்டாவது இன்னிங்ஸில்...

மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது ரியோ ஒலிம்பிக் போட்டிகள்

2016ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று காலை வாணவேடிக்கைகளுடன் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்கள். உலகின்...

ரங்கன ஹேரத் ஹெட்ரிக் ; 106 ஒட்டங்களுக்கு சுருண்டது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார். முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சற்று முன்னர் 106 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இரண்டாம் நாளான இன்றைய போட்டியின் போதே ரங்கன ஹேரத் தொடர்ச்சியாக மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக்...

281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. இதன்படி ஏற்கனவே ஒரு...

“உயிர் பிழைப்பது அல்லது சாவது” நீச்சல் வீராங்கனை யுஸ்ராவின் நிஜ சாகசம்

சிரியத் தலைநகர் டமாஸ்கசில் இருந்து படகு ஒன்று துருக்கி நோக்கி நம்பிக்கையுடன் புறப்படுகிறது. படகில் 20 பேர் இருக்கின்றனர். தாய்நாட்டைப் பிரிந்து செல்லும் சோகம் அவர்கள் முகத்தில் அப்பிக் கிடக்கிறது. சிரியாவில் தொடர்ந்து வசித்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. வாழ்வியல் ஆதாரமும் கிடையாது. படகில் ஏறுவதும் மரணத்தை தழுவிக் கொள்வதற்கு சமம்தான். ஆயினும் துணிந்து கிளம்பி...

இலங்கை அணியினருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் எஞ்சலோ மத்தியுவை நேற்று முன்தினம் (30) பிற்பகல் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டதோடு,...

இலங்கை அணி அபார வெற்றி!

பல்லேகலயில் இடம்பெற்றுவந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக் கொண்டது இலங்கை அணி. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி, தமது முதலாவது இனிங்ஸில் 117 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களைப் பெற்றதுடன், பின்னர், குஷால்...

இலங்கை அணி பலமான நிலையில்!!

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பல்லேகலயில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், பின்னர் மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, ஆறு விக்கெட்டுகளை இழந்து 282 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் உள்ளது....

பிறந்த மேனியுடன் ஓடியவருக்கு விளக்கமறியல்

பல்லேகல மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிர்வாணமாக ஓட்டமெடுத்த வெளிநாட்டு பிரஜையை, ஒரு வாரம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில் இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில்,...

203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது ஆஸி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடுகின்றது. இதன்படி இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட்...

முரளிக்கு சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவம்

>சர்வதேச கிரிக்கெட் சபையின் அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள் சாதனையாளர் விருதை ‘ICC Hall of Fame’ இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் பெறவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு சற்று முன்னர் மேற்கொள்ளப்பட்ட து. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை உலக கிரிக்கெட் சபை, தனது அதி உயர் கௌரவ விருதான வாழ்நாள்...

பல்லேகலையில் பிறந்த மேனியுடன் ஓட்டம்

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேக மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, முதல்நாள் முடிவில் பின்னடைவைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிந்த நிலையில், வெளிநாட்டு பிரஜையொருவர், உடம்பில் ஒருதுண்டு துணியில்லாமல், மைதானத்தை சுற்றி ஓடிக்கொண்டிருந்துள்ளார். மழை பெய்துகொண்டிருந்த போதே அவர்,...

முரளிக்கு ஆதரவுக் கரம் நீட்டும் சங்கக்கார

உலக சாதனையாளராக திகழும் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், குமார் சங்கக்கார அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் டுவிட்டர் பதிவொன்றை வௌியிட்டுள்ளார். முரளி இலங்கையின் சிறந்த குடிமன் எனவும் அவர் நாட்டை நேசிப்பதாகவும் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், முரளிதரனுக்கு...

பத்து முரளிகள் பந்துவீசினாலும் அவுஸ்திரேலியாவை வீழ்த்தும் இலங்கை

பத்து முத்தையா முரளிதரன்கள் வந்து பந்து வீசினாலும் அதற்கு தாக்கு பிடிக்க கூடியவாறு இலங்கை அணியை தயார் செய்வோம் என இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். நேற்று (24) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முரளிதரன் அவுஸ்திரேலியா அணிக்கு பயிற்சி அளிப்பது அவரது தொழில் ரீதியாக சரியானதாகவே காணப்படுகின்றது....
Loading posts...

All posts loaded

No more posts